news
வத்திக்கான் செய்திகள்
அருள்பணியாளர் லிக்கரியோன் அருளாளராக உயர்த்தப்பட்டார்!

பார்சிலோனாவின் புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் ஆலயத்தில், புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ, மாரிஸ்ட் சபை அருள்பணியாளர் லிக்கரியோன் அவர்களை அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் தலைமை ஏற்று மறையுரையாற்றினார். அருளாளர் லிக்கரியோன் பற்றிக் கூறும்போது, கல்வி என்பது வெறும் அறிவை மாற்றுவது மட்டுமல்ல; மாறாக, மற்றவர்களின் வளர்ச்சிக்குத் தன்னையே கொடுப்பதை உள்ளடக்கிய உண்மையான அன்புப் பணியைச் செய்தார் என்று உரைத்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
புறக்கணிக்கப்படும் சூடான் குழந்தைகளின் உரிமைகள்!

சூடானின்சேவ் சில்ட்ரன் (குழந்தைகளைப் பாதுகாப்போம்) அமைப்பின் தேசியத் துணை இயக்குநர் பிரான்சிஸ்கோ லனினோ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பல ஆண்டுகளாக சூடான் நாட்டுக் குழந்தைகள் அடிப்படைக் கல்வியை இழந்துள்ளனர் என்றும், இது அவர்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குப் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும், இதற்குச் சூடானில் போர் நிறுத்தத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கவும் இந்த அமைப்பு அழைப்பு விடுக்கிறது என்று தெரிவித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
குழந்தைகளைச் சந்தித்தார் திருத்தந்தை!

திருத்தந்தை 14-ஆம் லியோ வத்திக்கானில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் இளையோர்களையும் சந்தித்து ஒருவரை ஒருவர் மதிக்கவும், தன்னைப்போலப் பிறரையும் நேசிக்கவும் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வேற்றுமைகள் பலவற்றைக் கடந்து எல்லாரும் நண்பர்களாகவும் சகோதர-சகோதரிகளாகவும் இருக்க வேண்டுமெனவும் வாழ்த்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“கிறிஸ்துவின் மறுவுடல் அருள்பணியாளர்கள்”

இயேசுவின் திரு இதயப் பெருவிழாவை முன்னிட்டு 32 பேரைக் குருத்துவ அருள்பொழிவு செய்த திருத்தந்தை 14-ஆம் லியோ, “அருள்பணியாளர்கள் தங்களது வாழ்வில் நற்கருணைக்கு முதலிடம் கொடுத்து, இறைமக்களைக் கவனித்து, திரு அவையில் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும்என்றும், “அருள்பணித்துவ வாழ்வு என்பது கிறிஸ்துவின் உடலோடு நம்மை ஒன்றிக்கின்ற தூய்மைப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தின் பணிஎன்றும் கூறினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“கடவுள் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பார்”

துறவற அருள்சகோதரிகளைச் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், “உங்கள் எதிர்காலத்தை உங்கள் அருள்சகோதரிகளின் மற்றும் திரு அவையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான காலத்தில் இருக்கிறீர்கள். எனவே, தூய பவுல் வெளிப்படுத்திய ஆழமான, அழகான நம்பிக்கையை அனைவருக்கும் மீண்டும் வலியுறுத்த ஆவல் கொள்கிறேன்எனக் கூறி அவர்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
எதிர்நோக்கு என்னும் சுடரை அணையாமல் காக்கும் குருத்துவப் பயிற்சி - திருத்தந்தை 14-ஆம் லியோ

அருள்பணித்துவ வாழ்வுக்கெனத் தயாரித்து வரும் ஏறக்குறைய 4000 குருத்துவ மாணவர்களை யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், வெளியிடங்களுக்குச் சென்று பணிபுரியும் மறைப்பணித் திரு அவையின் சேவகர்களாகவும், மீட்கும் இறைவார்த்தையை அறிவிப்பவர்களாகவும் பயிற்சி பெறும் குருத்துவ மாணவர்கள் திருப்பயணிகளாக மட்டுமல்ல, நம்பிக்கையின் சான்றுகளாகச் செயல்படுகிறார்கள் என்று அவர்களை வாழ்த்தினார்.