news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற்று நான் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுவிட்டு கிரீமிலேயர், சமூக-பொருளாதார நிலையில் முன்னேறியவர்கள் பிரிவினருக்குச் சலுகைகளை இரத்து செய்ய முன்மொழிவதாக என்மீது குற்றஞ்சாட்டினர். ஆனால், அரசமைப்புப் சட்டத்தால் உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதை அவர்கள் அறியவில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது தலைமைச் செயலரின் மகனுக்கும், கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு தொழிலாளியின் மகனுக்கும் ஒரே இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது சரியாக இருக்குமா?”

உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிர்ப்பந்தம் மட்டுமல்ல; இது ஓர் அரசமைப்புச் சட்ட உத்தரவாதம். சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் இல்லாதது காரணம் அல்ல; தொடர்புடைய நிறுவனங்கள் சட்டங்களைச் செயல்படுத்தத் தயங்குவதுதான் காரணம்இந்த நிறுவனங்களை வலிமைப்படுத்துதல், ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பு, ஆதாரங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தல், குடிமக்களின் பங்கேற்பு மற்றும் நடத்தை மூலம் மாற்றம் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்ட முன்னோக்கியப் பாதையை அமைக்கவேண்டும்.”

உயர்திரு. ஆர். மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

சாதி, மதம், மொழி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சமூக நல்லிணக்க ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பா...வினர் ஆளும் வட மாநிலங்களில் வேண்டுமானால் அவர்கள் நினைத்த காரியங்கள் ஈடேறலாம்; ஆனால், இங்கு அவர்களின் கனவு நிறைவேறாது. இது இராமானுஜர் வாழ்ந்த மண். ஆகவே, மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணிக்காக்கப்படும். சனாதனத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது எனப் பா... மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகிறார். உண்மையில் நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை; ஏதாவது ஒன்றை மையப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தக்கூடாது என்றுதான் கூறுகிறோம். எனவே, பிரிவினையை ஏற்படுத்தும் சனாதனத்தை எதிர்க்கிறோம், சமாதானத்தைப் போற்றுகிறோம்.”

உயர்திரு. பி.கே. சேகர் பாபு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
உரிமைக்கான எதிரொலி

அரசமைப்பு சாசனம் என்பது ஒரு சட்ட நூல் அல்ல; அது சமூக சாசனம். சமூகத்தின் கையில் இருக்க வேண்டும். பக்குவமான குடிமக்களைக் கொண்ட குடிமைச் சமூகத்தால்தான் நல்ல அரசியலை உருவாக்க முடியும். அதிலிருந்துதான் நல்லாட்சி, நிர்வாகம் என்பது சாத்தியமாகும். ஆகவே, அரசமைப்புச் சாசனத்தை மக்கள் மையப்படுத்தும் முயற்சியைத் தொடர் நிகழ்வாகக் கிராமங்கள் தோறும், பள்ளிகள், கல்லூரிகளுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களில் அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையை வைத்திருந்தால், நாம் இந்தியாவின் குடிமக்கள் என்ற உணர்வை அது ஏற்படுத்தும்.”

திரு. . பழனித்துரை, காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர்

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தால், அதே வழக்குகளை வேறு நீதிபதிகள் மீண்டும் விசாரித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. இது வேதனையளிக்கிறது. ஏற்கெனவே தீர்ப்பளித்த நீதிபதி தொடர்ந்து பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்ட காலத்திற்கும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்த காலத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கருத்தில் கொள்ளாமலும் தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றன. ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பால் அதிருப்தி அடைந்தவர்களின் வேண்டுகோளை ஏற்று, வேறு நீதிபதிகள் அல்லது சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதிகளின் அமர்வுகள் இவ்வாறு தீர்ப்புகளை மாற்றுகின்றன.”

நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு

மக்களின் அடிப்படை உரிமைகளான வாக்குரிமை, மதச் சுதந்திர உரிமை ஆகியவை திரும்பப் பெறப்படுகின்றன. பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர், பொதுவான இந்திய வாக்காளர்கள் ஆகியோர் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யப்படுகின்றனர். உறுதிசெய்யக் கோரப்படுகிறது. குடிமக்களின் உரிமை என்ற பெயரில் நடத்தப்படும் இந்த எஸ்..ஆர். நடவடிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சனநாயகம் முடங்கியுள்ளது; மதச்சார்பின்மை அழியும் நிலையில் உள்ளது; கூட்டாட்சித் தத்துவம் சிதறடிக்கப்படுகிறது. ஆகையால் சனநாயகக் கோட்பாடுகளை மக்கள் பாதுகாக்கவேண்டும். இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், மொழி, சமுதாயங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சனநாயகக் கோட்டாடுகளைப் பாதுகாக்க உறுதிமொழி ஏற்போம்!”

செல்வி. மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைக்கான நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாக்கவேண்டிய அவசியமுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மௌலானா அபுகலாம் ஆசாத், இராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு, பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், அன்பு மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் மக்களாட்சிச் சுதந்திரத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் நிலைநிறுத்துவோம்.”

திரு. மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸின் தேசியத் தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலட்சிய இலக்கை அடைய நாம் அனைவரும் நவீனத் தகவல் தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமான மனத்துடன் பயன்படுத்தவேண்டும். மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த நாட்டையும் சிறந்ததாக மாற்றமுடியாது. கடமையுணர்வுடன் நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக, அது நாடாளுமன்றமோ, மாநில சட்டப்பேரவைகளோ, உள்ளாட்சி அமைப்புகளோ எதுவானாலும் சரி, மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்ற உரையாடுவது, விவாதிப்பது மற்றும் கலந்துரையாடுவது நமது தலையாய கடமையாகும்.”

உயர்திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவர் 

இந்தியா என்பது ஒரு பண்பாட்டுக்கோ, ஒரு கருத்தியலுக்கோ மட்டுமானதல்ல; மக்கள் அனைவருக்குமானது. அம்பேத்கரின் இந்தப் பரந்த பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் அனைத்துச் சக்திகளுக்கும் எதிராகப் போராடும் நமது மனவுறுதியை நமது அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கூட்டாட்சியியலை நிலைநிறுத்தவும், அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம்நமது அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து நமது குடியரசைக் காப்பதே அரசமைப்புச் சட்டத்திற்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.”

உயர்திரு. மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

தொகுப்பு ஊதிய செவிலியர்களுக்கும், நிரந்தரச் செவிலியர்களுக்கும் ஒரே நிலையான ஊதியம் வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. அதேபோல, தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை, போதிய எண்ணிக்கையில் செவிலியர்கள் நியமிக்கப்படவும் இல்லை; மாறாக, ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்குப் பணியிடமாறுதல் அடிப்படையிலே செவிலியர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். மேலும், செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதுடன், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருக்கும் மேல் முறையீட்டு மனுவைத் திரும்பப்பெறவேண்டும்.”

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர்

news
இந்திய செய்திகள்
வரலாற்றில் ஒளிரும் முகம்!

அண்மையில், நவம்பர் 17 தொடங்கி  21-ஆம் தேதி வரை துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் பங்கேற்ற இந்தியாவின் உள்தயாரிப்பானதி தேஜாஸ்போர் விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில் இமாச்சலபிரதேசம் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி விங்கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார்.

2011-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர், பல்வேறு கடமைப்பணிகளில் தைரியமாகச் செயல்பட்டு, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமான சாகசப் பிரிவில் பணியாற்றினார். விங் கமாண்டர் நமன்ஷ் சியால் இந்திய விமானப் படையில் சிறந்த வீரராகவும் திறமையான விமானியாகவும் கருதப்பட்டவர். இவர் கோவை சூலூர்  விமானப்படை தளத்தில் எண். 45-ஸ்குவாட்ரன் (பிளையிங் டாகர்ஸ்) பிரிவைச் சேர்ந்தவர். மேலும், அவர் ஏரோ இந்தியா மற்றும் பல ஏர் ஷோக்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். இவரது மனைவியும் தற்போது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. நமன்ஷ் சியாலின் தந்தை ஜெகநாத் சியால், இராணுவ மருத்துவப் பிரிவில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் கல்வித்துறையில் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

துபாயில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடல், துபாயிலிருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு கோவை மாவட்ட கலெக்டரும், போலீசார் மற்றும் விமானப் படையின் உயர்ந்த அதிகாரிகளும் திரண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாட்டு முதல்வர் மு.. ஸ்டாலின் மற்றும் பல தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இவரது இறுதி மரியாதை நிகழ்ச்சியில் மனைவி மற்றும் மகளுடன் அவரது குடும்பத்தினர், இராணுவப் பணியாளர்கள் கலந்துகொண்டு அவரது மீதான மரியாதையைச் செலுத்தினர். மிகவும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர், இந்திய விமானப் படையின் வரலாற்றில் என்றும் ஒளிரும் முகமாகத் திகழ்வார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தற்போது பள்ளி மாணவர்களே கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையாகி  உள்ளனர். போதைப்பொருள்கள் தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். போதைப்பொருள்கள் வைத்திருப்போருக்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதைப் பயன்படுத்துவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கும் வகையில் புதிய சட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். கல்லூரிகளில் சாதி அடிப்படையில் சங்கங்கள் அமைப்பதையும், சாதி, மத ரீதியான மோதல்களைத் தடுக்க நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.”

திரு. வைகோ (.தி.மு.. தலைவர்)

உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 90,000- கடந்துள்ளது. வழக்குகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன். உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க முயற்சிப்பேன். இது தொடர்பாக அறிக்கை கேட்பேன்மத்தியஸ்தத்திற்கு முன்னுரிமை, தீர்வு காண்பதில் இது எளிமையான வழி. பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். முடிவெடுக்க முடியாத சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் அரசமைப்பு அமர்வுகளை அமைப்பேன். நீதித்துறை செயல்பாட்டில் நமக்கு எந்தளவிற்குச் செயற்கை நுண்ணறிவு அவசியம் என்பதற்கான எல்லைகளைப் பார்க்கவேண்டும். இது தொடர்பாக நாங்கள் ஒரு முழுமையான மற்றும் விரிவான பார்வையுடன் வழக்குரைஞர்களுடன் கலந்து பேசுவோம்.”                 

உயர்திரு. சூர்யகாந்த், (புதிய தலைமை நீதிபதி)

எஸ்..ஆர். என்பது மறைமுகமாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சி. பா... உள்நோக்கத்துடன்தான் எஸ்..ஆரைக் கையாள்கிறது. பா... அரசு அரசியல்  கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விமர்சனங்களைச் செய்துகொண்டே எதிர்க்கட்சிகள் இதை நடைமுறைப்படுத்திதான் ஆகவேண்டும் என்கிற நெருக்கடியைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர். ‘முதலில் நீ இந்தியக் குடிமகனாக உறுதி செய்; பிறகு நீ வாக்காளரா என்று நாங்கள் உறுதி செய்கிறோம்என்பதுதான் எஸ்..ஆர். நடவடிக்கை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு தீவிரமாக எதிர்த்தது. எனவே, மறைமுகமாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து தேசியக் குடிமக்கள் பெயரேட்டை உருவாக்கவே எஸ்..ஆர். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தில்லுமுல்லுகளைத் தேர்தல் ஆணையத்தின் மூலம் செய்து காண்பிக்கிறது. தேர்தல் ஆணையமும், பா...வும் ஒரே நிறுவனமாக மாறியுள்ளன.”

திரு. தொல். திருமாவளவன், (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)

news
இந்திய செய்திகள்
வாக்கைத் திருடிய SIR

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (..ஆர்) நடவடிக்கைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராட காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது

திரு. இராகுல் காந்தி (எதிர்க்கட்சித் தலைவர்)

பீகார் தேர்தல் முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இது குறித்து எதிரும் புதிருமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் பணிகளை மேற்கொள்ள மிகக் குறுகிய காலமே இருப்பதால் இது நடைமுறை சாத்தியம் இல்லை எனத் தெரிந்தும் உள்நோக்கத்துடன் இதனை மேற்கொண்டு வருகின்றனர். பா... எதிர்ப்பு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் வகையில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.”

தொல். திருமாவளவன் (பாராளுமன்ற உறுப்பினர்)

பீகார் சட்டமன்றத் தேர்தல் எனக்கு எந்த வியப்பையும் தரவில்லை. தமிழ்நாட்டில் எஸ்..ஆர். விவகாரங்களைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தில் முறையிட்டதோடு, தி.மு.. கூட்டணியினர் இன்றைக்கு வீடு வீடாகச் சென்று மக்களின் வாக்குரிமையையும் உறுதிப்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முதல்வரே நேரடியாக இவற்றைக் கண்காணித்தும் வருகிறார். இப்படியான கண்காணிப்பை பீகாரில்இந்தியாகூட்டணி மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.”               

ஆளூர் ஷாநவாஸ் (சட்டமன்ற உறுப்பினர்)

வருகிற 2026-இல் முறையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடி வாக்குரிமையைப் பாதுகாக்க தி.மு.. நடவடிக்கை எடுக்கும்.”

என்.ஆர். இளங்கோ (பாராளுமன்ற உறுப்பினர்)