news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் சுமார் எட்டு நூற்றாண்டுகளாக மாபெரும் அறிவு மையமாக விளங்கியது. அதன் வீழ்ச்சியானது இந்தியாவிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் பேரிழப்பாக அமைந்தது. தற்போது இந்தப் பல்கலைக்கழகம் புத்துயிர் பெற்றுள்ளது. உலகம் பல சிக்கலான சவால்களைச் சந்தித்து வருகின்றது. அதேவேளையில் கருணைமிக்க, சுதந்திரமான, எதையும் ஆராய்ந்து வலுவாக முடிவு எடுப்பதற்கான சிந்தனையும் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் உலக அளவில் முன்னணிக் கல்வி நிறுவனமான நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.” 

திருமிகு. முர்மு, குடியரசுத் தலைவர்

மானம் என்னும் தலைப்பை உடைய வான்புகழ் வள்ளுவரின் அதிகாரத்திற்கு வான்புகழ் உரையாளன் பரிமேலழகர்நிலை தாழாமைஎன்று பொருள் எழுதுவார். ‘அடைகின்ற சுகம் பெரிதல்ல; வீழ்ச்சியிலும் யானைபோல் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே பெருமைஎன்பார். தனிமனிதர்களின் பெருமை - சிறுமை என இவை பதவிகளினால் வருவதில்லை. வாழும் முறையினாலேயே வருகிறது. சனநாயகத்தின் ஒரே ஒரு சிறந்த கூறு, இரத்தச் சிந்தல்கள் இல்லாமல் ஆட்சி மாற்றம் நிகழ்த்தமுடியும் என்பதுதான். வாளும் வேலும் இல்லாமல் வாயாலும் பேனாவாலும் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும்!”

திருமிகு. பழ. கருப்பையா, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்

சிறப்புக் குழந்தைகளுக்குப் பள்ளி - கல்லூரிகளில் 5%  இடஒதுக்கீடும், வேலை வாய்ப்புகளில் 4%-மும் அரசு அளித்து வருகிறது. அந்தக் குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பெற்றோர், சிறப்பு ஆசிரியர்கள் தேவையான திறன் பயிற்சியும், வழிநடத்துதலும் அளிக்க வேண்டும். சிறப்புக் குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை முன்னதாகவே கண்டுபிடித்துப் பயிற்சி அளிக்கவேண்டும்.”

திருமிகு. எஸ். மதுமதி, செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு

news
இந்திய செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

தேசிய சனநாயகக் கூட்டணிக்கு உண்மையான தலைமை பாரதிய சனதா கட்சிதான்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவர்கள் ஒப்புக்காக முன்வைக்கின்ற தலைவர்தான் .தி.மு.. பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி. பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பொம்மை முக்கியமல்ல, நூல் யார் கையில் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.”

திருமிகு. . சிதம்பரம், மேனாள் மத்திய நிதி அமைச்சர்

தமிழ்நாட்டில் .தி.மு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி குறித்து இப்போது எந்தக் கருத்தும் கூறமுடியாது. அது தேர்தல் முடிவைப் பொறுத்துதான் அமையும். தேர்தல் கூட்டணி அமைக்கும்போது எல்லாக் கட்சிகளும் எப்படி ஒப்பந்தம் போடுவார்களோ, அதேபோல தேசிய சனநாயகக் கூட்டணியிலும் ஒப்பந்தம் போடப்படுகிறது. அது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தனிப்பட்ட ஒப்பந்தம்.

திருமிகு. தமிழிசை சௌந்தரராஜன், மேனாள் ஆளுநர், பா... மூத்த தலைவர்

மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் என்ற பெயரில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடிதான் மிகப்பெரிய ஊடுருவல்காரர்.”

திருமிகு மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் என்னைப் பற்றியும் .வெ..வைப் பற்றியும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சில கட்சிகளின் அணியாகத் .வெ.. செயல்படுகிறது எனக் கூறப்பட்டது. ஆனால், .வெ.. எப்போதும் மக்களின் அணியாகவே செயல்படுகிறது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதச் சமரசமும் செய்யப் போவதில்லை. வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் .வெ.. தலைமையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக உள்ளோம்.”

திருமிகு. விஜய்,  .வெ.. தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பெண்கள் யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. எந்தச் சூழலிலும்தாங்களாகவேஇருக்கவேண்டும். அனைவரும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும். நீங்கள் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும் நேர்மையாகப் பணியாற்றி உங்கள் கனவுகளை முழு மனதுடன் நனவாக்கவேண்டும். மாணவர்களின் கனவுகளை நனவாக்க நேர்மை அவசியம். மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத முன்வர வேண்டும். மாணவர்கள் நேர்மையாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். ஒருவர் செல்வத்தை இழக்கலாம், ஆரோக்கியத்தை இழக்கலாம்; ஆனால், குணத்தை இழந்தால் தன்னையே இழந்ததுபோல் ஆகும்.”

திருமிகு. இஷா சிங், டெல்லி வடக்கு மாவட்டக் கூடுதல் துணை காவல் ஆணையர்

ஓர் அறிவுசார்ந்த பொருளாதாரமாக இந்தியா உருவாக வேண்டுமானால், உயர்கல்வியும் ஆராய்ச்சியும் மிக வலுவாக வளர வேண்டியது அவசியம். அந்த வகையில், உயர்கல்வித்துறையில் முக்கியப் பிரச்சினையாக இருப்பது பேராசிரியர் காலிப் பணியிடங்கள்தான். நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், கல்வித் தரமும், ஆராய்ச்சி முன்னேற்றமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. ஆய்வகங்கள், ஆராய்ச்சி வசதிகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, உலகளவில் போட்டியிடக்கூடிய தரமான ஆராய்ச்சியை உருவாக்கப் பல நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.”

திருமிகு. . பாலகுருசாமி, மேனாள் துணைவேந்தர்

ஒரு நாட்டின் தலைவர் கொலை செய்யப்படும்போது, அந்த நாடும் உலகமும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கும்? நாடுகளின் தலைவர்கள் மிரட்டப்படும்போது, உலகில் அமைதி நிலவாது. உலகளாவிய சட்டங்களை அமெரிக்கா மீறி வருகிறது. டிரம்ப்பைப் பிரதமர் மோடிநண்பர்என்று அழைக்கிறார். இந்தியா இரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்தது. ஆனால், டிரம்ப் கொள்முதல் செய்யக்கூடாது அல்லது வரி விதிப்பேன் என்றார். டிரம்ப் ஒரு சர்வாதிகாரி. பிரதமர் மோடி அவருடைய சொல்படி கேட்கிறார். நாட்டை நிர்வகிக்க மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தனர். அதை விடுத்து, நாடு முழுவதும் பயணிக்கும் பிரதமர், தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். நீண்ட காலத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத சூழலில், அதன் தலைவர்களை குறிவைத்துப் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்டமைத்த நாட்டை மோடி அழித்து வருகிறார்.”

திருமிகு. மல்லிகார்ஜூன் கார்கே, காங்கிரஸ் தேசியத் தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களால் சவால்கள் அதிகரித்துள்ளன. இந்த நேரத்தில் உண்மையை நிலைநிறுத்தவும், தவறான தகவல்களைக் கண்டறிந்து உண்மையை விளக்கவேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உள்ளது. ஊடகத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைச் சிந்தித்து, அதற்கேற்ப புத்தாக்கப் படைப்புத்திறன்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள். செயற்கை நுண்ணறிவு, தரவுகள் பகுப்பாய்வு, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளைக் கூறல், சமூக ஊடகத் தளங்கள் மூலம் மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை வெளிப்படுத்தும் உத்திகள், செய்திகளை மக்கள் நுகரும் விதம் போன்றவை பெரிதளவில் மாற்றம் கண்டுள்ளன. பேனாவின் சக்தி அபாரமானது. அச்சமின்றி உண்மையை எழுதுங்கள், நீங்களே வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவீர்கள். எண்ம (டிஜிட்டல்) சகாப்தத்தில் சமூக ஊடகங்கள் அவற்றின் பணிகளை விரிவுபடுத்தியுள்ள அதேசமயம், அவை தவறான தகவல்கள் மற்றும் ஒருசார்பு செய்திகளின் தாக்கத்தை அதிகம் கொண்டுள்ளன. இவை சமூகத்திற்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.”

திருமிகு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவர்

பா..., ஓர் அரசியல் கட்சி அல்ல; அது, விரும்பிய வடிவம் எடுக்கும் இச்சாதாரி நாகம் போன்றது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றவெறித்தனமானஇலக்கை அடைய பா... எந்த மட்டத்திற்கும் இறங்கும். கடந்த 12 ஆண்டுகளாக, திரிணாமுல் காங்கிரஸ்மீது விஷத்தைக் கக்கி வந்தனர். இப்போது திடீரெனப் பிரதமர் மோடியே அக்கட்சியைப் புகழ்ந்துள்ளார். இது மரியாதைக்காக அல்ல; காங்கிரசைக் குறைமதிப்புக்கு உட்படுத்தவேண்டும் என்பதற்காக (.. உச்சி மாநாட்டில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்). பல்வேறு மாநிலங்களில் பேரவைத் தேர்தல்கள் வருவதால் பா...வின் கதை கணிக்கக்கூடியதே. காங்கிரஸ் தலைவர்கள் மீதான வழக்குகள் திடீரென வேகமெடுக்கும்.”

திருமிகு. பவன் கேரா, காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவர்

உலகில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உள்ளது. இலத்தீன் மொழி அறிவியல் சிறப்பு; பிரெஞ்சு காதல் உணர்வு கொண்டது; ஸ்பானிஷ் மொழி தொடர்பு மொழியாக உள்ளது. உலகில் தமிழ்மொழி மட்டுமே பக்தி வளம் நிறைந்தது. அதனால்தான்தெய்வத் தமிழ் மொழிஎன அழைக்கப்படுகிறது.”

திருமதி. டாக்டர் சுதா சேஷய்யன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அரசமைப்பு மக்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே கொண்டுசேர்த்து, அவர்களின் சட்ட அறிவு, சனநாயகப் பங்கேற்பு, விழிப்புணர்வு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தவேண்டும். ஒரு நாட்டின் கலாச்சாரம் அதன் மக்களின் இதயங்களிலும் உணர்விலும் கலந்து வாழ்கிறது. ‘மொழி அந்த உணர்வுக்குப் பாலமாகும்என மகாத்மா காந்தி குறிப்பிட்டார். அதுபோல, இந்தியா பல மொழிகளைப் பேசினாலும், அது பாரதத் தாய்க்குச் சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனையிலும் நோக்கத்திலும் ஒன்றுபட்டுள்ளது என பாரதியும் குறிப்பிடுகிறார். அந்த வகையில், குடிமக்கள் தங்கள் தாய்மொழி மட்டுமின்றி, பாரதத்தின் பன்முகத்தன்மையை இணக்கத்துடன் மொழிகளின்சிம்பொனிபோலவும் கொண்டாடவேண்டும்.”

திருமிகு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர்

சட்டத் தொழிலில் ஈடுபடுவோர் சட்டம் என்பதைப் பாதுகாக்கும் கோட்டையாகப் பார்க்கக்கூடாது; அதை உயிருள்ள, பரிணாம வளர்ச்சியடையும் பொதுத்தளமாகக் கருதவேண்டும். சீரற்ற, நிச்சயமில்லாத சூழலில்களிலிருந்து தற்காத்துக்கொள்ள கோட்டைகள் கட்டப்பட்டன. ஆனால், அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றும் மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்கமுடியாது. அது வேறுபாடுகளை விவாதிக்கும், உரிமைகளை வெளிப்படுத்தும் தளமாக மாறவேண்டும். சமுதாயம் பரிணாம வளர்ச்சியடையும்போது சட்டமும் பரிணாம வளர்ச்சியடைகிறது.”

திருமிகு. சூரியகாந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

அடுத்த 25 ஆண்டுகள், துணிச்சலான முடிவுகளை எடுக்கும் நிறுவனங்களுக்கே சொந்தமானது. எக்ஸ்பாக்ஸ் உருவானபோது இருந்த அந்தப் புரட்சிகரமான வேகத்தை மீண்டும் கொண்டுவர விரும்புகிறேன்.

திருமிகு. ஆஷா சர்மா, சி..., மைக்ரோ சாஃப்ட் கேமிங்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அறிவுசார் மூலதனம் இல்லாமல் இலட்சியத்தை அடைய முடியாது. தொழில்நுட்பம், உற்பத்தி, எண்ம மாற்றம், .. உள்ளிட்ட களங்களில் உலகளாவிய தலைமைக்கு நாடு விரும்புகிறது. வேலைவாய்ப்பைத் தேட வேண்டும் என நாடு எதிர்பார்க்கவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சியைத் தயாரிப்புகளாகவும், சிந்தனைகளை நிறுவனங்களாகவும், அறிவைச் சமூக தாக்கமாகவும் மாற்றும் புதுமையாளர்கள் நாட்டுக்குத் தேவை. வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது ஒரு பொருளாதாரக் கருத்தல்ல; அது ஒரு சமூகப் பொறுப்பு. கல்விக்கான .. மாநாடு டெல்லியில் நடத்தப்படுகிறது. தற்போது .. வேகமாக வளர்கிறது. அதன் செல்வாக்கு என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்பது முக்கியம். .. பயன்படுத்திக் கல்வித்துறைக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை முனைவர் பட்டதாரிகள் சிந்திக்கவேண்டும்.”

திருமதி. அகிலா, திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநர்

மக்களவையில் குற்றப் பதிவுகள் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவேண்டும். தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதி உடனே தங்கள் உறுப்பினர் பதவியை இழக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் உச்சநீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டுள்ளன. உங்கள் மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நன்கு சிந்தியுங்கள். தேர்தலில் போட்டியிடுபவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்நாட்டின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. வாக்குப்பதிவு பொத்தானை அழுத்தும்போது இதைக் கவனித்தில் கொண்டு செயல்படவேண்டும்.”

திருமிகு. கோபாலசுவாமி, மேனாள் தேர்தல் தலைமை ஆணையர்

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்..ஆரால் சனநாயகப் பங்களிப்பு பலவீனமாகியுள்ளது. இதனால் சரிசமமான தேர்தல்களம் ஒருசார்புடையதாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கு வங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம் வெளிப்படைத்தன்மையுடன் எஸ்..ஆரை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மேலும் சில வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில், வாக்காளர்களின் ஆவணங்கள் மற்றும் ஆட்சேபங்களைப் பரிசீலனை செய்வதற்கான காலக்கெடு மட்டுமே நீடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவில் தீர்வில்லை. மேற்கு வங்கத்தில் எஸ்..ஆர். நடவடிக்கையால் சிறுபான்மையினர், உள்நாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வீடுகளற்ற ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எஸ்..ஆரால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தேர்தல் ஆணையமே முழுப் பொறுப்பேற்கவேண்டும்.”

திருமிகு. . சிதம்பரம், மேனாள் மத்திய அமைச்சர்