news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (12.04.2026)

விமானங்கள் போருக்கானதாக அன்றி, எப்போதும் அமைதியைச் சுமந்து செல்பவையாக மட்டுமே இருக்கவேண்டும்.”

மார்ச் 23, லுஃப்தான்சா மற்றும் ITA ஊழியர்கள் சந்திப்பு

கிறிஸ்துவால் நிறுவப்பட்ட திரு அவையின் படிநிலை அமைப்பு, உலகிற்கு மீட்பையும் புனிதத்தையும் வழங்கும் ஓர் இறைப் பணியாகும்.”

மார்ச் 25, புதன் மறைக்கல்வி உரை

உடல் உறுப்பு தானம் வணிகமயமாக்கப்படாமல், தார்மிக விழுமியங்களுடன் கூடிய தன்னார்வ அடிப்படையில் அமையவேண்டும்.”

மார்ச் 26, தேசிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு

சமூக நீதி மற்றும் பிறரன்புப் பணிகளில் இறைமக்கள் அனைவரும் முழுமையாக ஈடுபடவேண்டும்.”

மார்ச் 28, மொனாக்கோ அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் சந்திப்பு

இயேசுவின் தியாகத்தையும் இறைவனின் இரக்கத்தையும் பின்பற்றி, அதிகார மோகத்தைத் துறந்து நலிந்தோரைப் பாதுகாக்க வேண்டும்.”

மார்ச் 28, மொனாக்கோ, இரண்டாம் லூயிஸ் மைதான மறையுரை

வன்முறையைத் துறந்து, அமைதியின் அரசராகத் திகழும் இயேசுவைப் பின்பற்றி உலகெங்கும் அமைதி நிலவச் செய்யவேண்டும்.”

மார்ச் 29, குருத்து ஞாயிறு திருப்பலி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (05.04.2026)

சிறார் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பண்பாட்டினைத் திரு அவை வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உறுதிப்படுத்தவேண்டும்.”

மார்ச் 16, சிறார் பாதுகாப்பிற்கான பாப்பிறை ஆணைய உரை

அமேசான் சமூகங்களின் கலாச்சாரப் பாதுகாப்பும், நற்செய்தி ஒருங்கிணைப்புமே திரு அவையின் நீடித்த வளர்ச்சி.”

மார்ச் 17, அமேசான் தலத்திரு அவை ஒன்றிப்புச் செய்தி

திருமுழுக்கின் வழியாக இறைமக்கள் அனைவரும் கிறிஸ்துவின் அரசத்துவ, குருத்துவ மற்றும் இறைவாக்குப் பணிகளில் பங்கேற்று, நற்செய்தியின் சாட்சிகளாகத் திகழ்கின்றனர்.”

மார்ச் 18, புதன் மறைக்கல்வி உரை

நலவாழ்வு என்பது ஆடம்பரமல்ல; அது ஓர் அடிப்படை உரிமை; ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, ஒருங்கிணைந்த பராமரிப்பை உறுதிப்படுத்தவேண்டும்.”

மார்ச் 18, ஐரோப்பிய நலவாழ்வு மாநாடு

குடும்பங்களைஇல்லறத் திரு அவையாகமதித்து, நவீன சவால்களுக்கேற்ப அவர்களுக்கு இரக்கத்துடன் வழிகாட்டவேண்டும்.”

மார்ச் 19, புனித வளனார் பெருவிழா செய்தி

சுயநலக் கல்லறைகளிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவின் உயிர்ப்பில் நிலைவாழ்வு எனும் நம்பிக்கையைப் பெற்று வாழவேண்டும்.”

மார்ச் 22, மூவேளைச் செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (29.03.2026)

கிறிஸ்துவின் அன்பால் பிணைக்கப்பட்ட, பன்முகத்தன்மை கொண்ட, உலகளாவிய மீட்பின் நம்பிக்கைச் சமூகமே திரு அவை.”

மார்ச் 11, புதன் மறைக்கல்வி உரை

செவிமடுத்தல் மற்றும் விருந்தோம்பல் வழியாக, இளைஞர்களை மையமாகக் கொண்ட அன்பின் சமூகத்தை உருவாக்குவோம்.”

மார்ச் 12, இத்தாலியின்விருந்தோம்பல் பேராலயஉரை

ஒப்புரவு அருளடையாளம் மூலம் கடவுளோடும் திரு அவையோடும் இணைந்து, அமைதியின் கருவிகளாகத் திகழ்வோம்.”

மார்ச் 13, திருத்தூதுசார் பாவ மன்னிப்பு  அவைப்  பயிற்சி வகுப்பு உரை

கத்தோலிக்கத்தின் வரலாற்றுப் பின்னணியில், நற்செய்தி விழுமியங்களுடன் நலிந்தோருக்குத் தொடர்ந்து தொண்டாற்றுவோம்.”

மார்ச் 13, கத்தோலிக்க நலவாழ்வுச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் சந்திப்பு

நலிந்தோருக்கான சமூக நீதிப் பணிகளைத் தொடர்ந்து கருணையுடன் ஆற்றுவோம்.”

மார்ச் 14, FADICA அமைப்பின் 50-ஆம் ஆண்டு விழா

கிறிஸ்துவின் ஒளியால் வாழ்வை ஒளிரச் செய்து, இறைநம்பிக்கையுடன் உலகிற்குச் சான்று பகர்ந்து அமைதிக்காக உழைப்போம்.”

மார்ச் 15, மூவேளை செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (22.03.2026)

உண்மையின் ஊற்றாக நம்மில் எழும் நற்செய்தியின் வார்த்தை, ஒவ்வொருவரின் கண்களைத் திறக்கவும், அறிவார்ந்த விதத்தில் மதிப்பிடவும்,  சுதந்திரமான மற்றும் பக்குவப்பட்ட மனசாட்சியை உருவாக்கவும் உதவுகிறது.”

மார்ச் 8, உரோம் காணிக்கை அன்னை திருத்தலத் திருப்பலி மறையுரை

இராணுவச் சேவை என்பது இறையருளில் ஊன்றிய ஓர் அழைப்பு. வலுகுறைந்தவர்களைப் பாதுகாக்கவும், அமைதியைப் பேணவும், அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளில் பணியாற்றுவதுமே இந்தச் சேவையின் நோக்கம்.” 

மார்ச் 7, இத்தாலிய இராணுவப் பேராயரகத்தின் நூற்றாண்டு விழாச் செய்தி

நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை நியாயமான, நேர்மையான மற்றும் பொறுப்பான உரையாடல் மூலம் மட்டுமே அடைய முடியும், அழிவையும் துன்பத்தையும் கொண்டுவரும் ஆயுதங்கள் மூலம் அல்ல.”

மார்ச் 3,  காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செய்தி

இறையியல் என்பது வல்லுநர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; மாறாக, திரு அவையின் பணிக்கும், நம்பிக்கையில் வேரூன்றிய கலாச்சார, சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் அடிப்படையானது.”

மார்ச் 02,  இறையியல் நிறுவன குழுமத்தினருக்கு வழங்கிய உரை

மனிதகுலத்தையும் வாழ்க்கையையும் சிதைக்கும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு, நாம் தொடர்ந்து நற்செய்தி அறிவிப்பின் சான்றுகளாக இருப்போம். அதுவே மாற்றத்தைத் தருகிறது.”

மார்ச் 01,  குவார்த்திஜோலோ பங்குத்தள மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.03.2026)

இலாபத்தைவிட சமத்துவம் மற்றும் பொதுநலனை முன்னிறுத்தி, அனைவருக்கும் உலகளாவிய நலவாழ்வு உரிமை கிடைப்பதை அரசுகள் உறுதி செய்யவேண்டும்.”

பிப். 16, பாப்பிறை வாழ்வுக் கழக உறுப்பினர்கள் சந்திப்பு

திரு அவை என்பது இறைவனோடும் மக்களோடும் அனைவரையும் ஒன்றிணைக்கும் மீட்பின் உலகளாவிய அருளடையாளமாகவும், ஒப்புரவின் கருவியாகவும் திகழ்கிறது.”

பிப். 18, புதன் மறைக்கல்வி உரை

பணிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்புடன் கூடிய அதிகாரமே, கிறிஸ்துவை நோக்கிச் சமூகத்தை வழிநடத்தும் உண்மையான ஆன்மிகப் பணியாகும்.”

பிப். 19, கிறிஸ்துவின் சேனை - துறவறச் சபையினர் சந்திப்பு

உண்மைக்கான விருப்பத்தைத் தூண்டி, இயேசுவின் அன்பு மற்றும் திருநற்கருணை வழியாக மாணவர்களை ஆன்மிக வளர்ச்சியில் வழிநடத்துவதே ஓர் ஆசிரியரின் கடமையாகும்.”

பிப். 20, திருத்தூது மடலின் சிறப்புச் செய்தி

அன்னை மரியாவின் வழியில் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்து, அமைதியின் சாட்சிகளாகத் திகழ அன்புடன் அழைக்கிறேன்.”

பிப். 21, அமலமரி அர்ப்பணத் துறவு, திருத்தூதர்களின் அன்னை சபையினர் சந்திப்பில்...

தவக்காலத்தின் வழியாகப் பாவங்களை நீக்கி, இறைவேண்டல் மற்றும் இரக்கச் செயல்களால் கடவுளின் அன்பிலும் உண்மையான மகிழ்ச்சியிலும் நிலைத்திருப்போம்.”

பிப். 22, மூவேளைச் செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.03.2026)

கிறிஸ்துவில் ஒன்றுபட்டு, புனித வாழ்வும் சகோதரத்துவ உறவும் வழியாக நற்செய்திப் பணியாற்றுவோம்.”

பிப். 09 - அருள்பணியாளர்களின் ஒன்றிப்புச் செய்தி

அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் திரு அவையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே திருத்தூதுப் பயணத்தின் நோக்கமாகும்.”

பிப். 10 - மொனாக்கோவிற்கான திருத்தந்தையின் முதல் பயணம்

இறைவார்த்தையைத் திரு அவையின் நம்பிக்கையின் ஆதாரமாகவும், கிறிஸ்துவின் உயிருள்ள உறவாகவும் போற்றிப் புனிதமாக வாழ்வோம்.”

பிப். 11 - புதன்கிழமை பொது மறைக்கல்வி உரை

இறைவார்த்தை, நோன்பு மற்றும் சமூக நீதி வழியாக மனமாற்றம் பெற்று, அன்பின் பாதையில் நாகரிகத்தை உருவாக்குவோம்.”

பிப். 13 -  இவ்வாண்டிற்கான தவக்காலச் செய்தி

திருப்பீட நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லாவின் புதிய நியமனம் திரு அவையின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.”

பிப். 14 - அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா புதிய உறுப்பினராக நியமனம்

வெளிப்புறச் சடங்குகளைத் தாண்டி, அன்பு நிறைந்த நேர்மையான இதயத்துடன் இறைநீதியையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடிப்போம்.”

பிப். 15 - மூவேளைச் செபவுரை