news
தமிழக செய்திகள்
ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைக் குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி..) தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேலான தனியார் பள்ளிகளில் ஓர் இலட்சம் இடங்கள் உள்ளன

இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம்.

தமிழ்நாட்டில் 2013-இல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஆர்.டி.. திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 5.7 இலட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் கல்வியாண்டு (2026-2027) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

தனியார் பள்ளிகள் இயக்ககம், தமிழ்நாடு

news
தமிழக செய்திகள்
‘டெட்’ தேர்வு கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்க முடிவு!

தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும். பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தேர்வெழுதி தேர்ச்சி பெறவேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. ஜூலை 4-இல் முதல் தாளுக்கான தேர்வும், ஜூலை 5-இல் இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடத்தப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 18 முதல் இணைய வழியில் (https://www.trb.tn.gov.in) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாளாகும். இந்த நிலையில் டெட் தேர்வில் ஆசிரியர்கள் எளிதில் தேர்ச்சி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான செயல்பாடுகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அனைத்துப் பாடங்களுக்குமான வினா வங்கிகள் மற்றும் பயிற்சிக் கையேடுகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நேரடிப் பயிற்சிகள் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட உள்ளது.                                                        

பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு

news
தமிழக செய்திகள்
தேர்தல் எதிரொலி...

பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே...

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தப்படுவதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்டப் பயிற்சி கடந்த 28, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில் 3,32,231 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் பணம், மது, போதைப்பொருள் மற்றும் இதர இலவசப் பொருள்கள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதைத் தடுக்கும் பணிகளைத் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை ரூ.296.40 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

திருமிகு. அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி

news
தமிழக செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

.வெ.. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்திற்குச் சரியான பாதுகாப்பு வழங்காதது காவல்துறையின் பிரச்சினை. ஆனால், தி.மு.. ஆட்சியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பாரபட்சத்துடன் காவல்துறை செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம், பிரச்சாரம் போன்றவற்றிக்கு நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.”

திருமிகு. நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பா... தலைவர்

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், .வெ.. தலைவர் விஜய் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, ‘ரூ. 1000, ரூ. 2000, ரூ. 5000 என்று கொடுப்பார்கள்; அது உங்கள் பணம், பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்என்று பேசியுள்ளார். இது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. விஜய்யின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது. இந்த விதிமீறல் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள்மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ள விஜய் மீது, தேர்தல் ஆணையம் தாமே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

திருமிகு. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், தேர்தலுக்குப் பிறகு .வெ.. தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.”

திருமிகு. ராம்தாஸ் அதுவாலே, இந்தியக் குடியரசு கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் பா...வின் அடிமையாகி, தமிழ்நாட்டுக்குள் பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் எப்படியாவது அழைத்து வரவேண்டும் என்று வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். தி.மு.. தலைவர் கூறியது போன்று இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். நம் உரிமைகளை மீண்டும் மீட்டெடுத்துக் கொடுக்கவேண்டும். தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்பதை இந்தத் தேர்தல் மூலம் மக்கள் நிரூபித்துக் காட்டவேண்டும்.”

திருமிகு. உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வர், தமிழ்நாடு அரசு

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

நீதித்துறையில் நீதிபதிகள் அதிகம் தேவை. குறைவானவர்களே நீதிமன்றத்தை அணுகும் நிலையிலும் கூட, ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. சாமானிய மக்களுக்கு நீதி மிகவும் அவசியம்; சாமானியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நமது அமைப்பு தோல்வி அடைந்துவிடும்.”

திருமிகு. ஆர்.வி. ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநர்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் எந்தக் காலத்திலும் தேர்தலைத் தனித்துச் சந்திக்க வாய்ப்பு இல்லை. தேசியக் கட்சிகளுக்கு இங்கே இடமில்லை. மாநிலக் கட்சிகளின் மீது அதிகாரம் செலுத்தும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடையாது; ஆனால், பா...வின் நிலைப்பாடு முற்றிலும் வேறுபட்டது. மாநிலக் கட்சிகளின் அதிகாரத்தைப் பறித்து, அந்தக் கட்சிகளை அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே பா...வின் முக்கியப் பணி.”

மாண்புமிகு . பெரியசாமி, தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

நினைத்த காரியம் நிறைவேற இலட்சியம்வேண்டும்; வாழ்க்கையில் பெரிய நோக்கம் இருக்கவேண்டும்; இலஞ்சத்தை ஒழிக்கவும் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும் ..எஸ். ஆகவேண்டும் என்ற இலட்சியம் இருக்கவேண்டும். குறைந்த வயதில் உயர்ந்த பதவியில் அமர குடிமைப் பணித் தேர்வு வாய்ப்பு அளிக்கிறது. ..எஸ். என்பது பதவி அல்ல; பொறுப்பு. பொறுப்பை உணர்ந்து கடமையைச் செய்யவேண்டும். இத்தகைய பொறுப்பான பணியில், பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும். சவால்கள், சட்டப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறமை கிடைக்கும். நான்கு பேருக்கு உதவி செய்தோம் என்ற மகிழ்ச்சி கிடைக்கும். மக்களுக்கு உதவி செய்ய அரசு ஊதியம் தருகிறது.”

திருமிகு செ. சைலேந்திரபாபு .பி.எஸ்., தமிழ்நாடு மேனாள் டி.ஜி.பி.

news
தமிழக செய்திகள்
தேர்தல் எதிரொலி...

பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே...

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யவும் அல்லது விதிமீறல்கள் தொடர்பாகப் புகார் அளிக்கவும் ஏதுவாக மத்திய பார்வையாளர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பகிரப்பட்டுள்ளது. தேர்தல் செலவினக் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்கக் குழுக்கள் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\"

திருமிகு. அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி