news
தமிழக செய்திகள்
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள் (வேலைவாய்ப்புச் செய்திகள்)

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 23 இளநிலை புகைப்படக் கலைஞர்கள் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 461 பணியிடங்களுக்கு மே 27 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, வேளாண் பொறியியல் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, தொல்லியல்துறை, சுற்றுலாத்துறை, குடும்ப நலத்துறை உள்பட பல்வேறு துறைகளில் 45 பதவிகள் காலியாக உள்ளன. மொத்தம் 461 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு மே 27 முதல் ஜூன் 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை திருத்திக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

25 இளநிலை புகைப்படக் கலைஞர் பணி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக உள்ள 23 இளநிலை புகைப்படக் கலைஞர் பணிக்கான ஆள்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும்; நேர்காணல் கிடையாது. எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடங்கள் இடம்பெறும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் விஷூவல் கம்யூனிகேஷன் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

பெரும்பான்மை இல்லாத நிலையில் தி.மு.. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது, நம்பிக்கை வாக்கெடுப்பில் .தி.மு..வின் ஓர் அணியிடம் ஆதரவாக வாக்களிக்க விலைபேசுவது, ..மு.. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது, .தி.மு.. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இதைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு (.வெ..) வாக்களித்தார்களா? தேசிய சனநாயகக் கூட்டணியின் ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா... எதிர்ப்பும் பல்லிளிக்கிறது.”

திருமிகு. மு..ஸ்டாலின், தி.மு.. தலைவர்

தூய சக்திஎன்று அறிவித்துக் கொண்டவர்களுக்கு மக்களின் முழு ஆதரவு கிடைக்காததால், ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவது மிக மோசமான செயலாகும். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான ஒரு குதிரைப்பேர அரசியலை நடத்தி, சிறுபான்மை ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர். .தி.மு.. எம்.எல்..க்கள் சிலரைத் திரைப்படப் பாணியில், ‘கவனித்துஆதரவு பெற்றது ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா? .தி.மு.. உண்மைத் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்றவர்கள் தலைமைச் செயலகத்தின் கீழ்த்தளத்தில் சட்டப்பேரவைத் தலைவரிடம் இராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, அடுத்த பத்து நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள .வெ.. அமைச்சரின் அறையில் அவர்களுடைய கைகளில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவது குதிரைப்பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.”

திருமிகு. எடப்பாடி பழனிசாமி, .தி.மு.. பொதுச்செயலர்

அடுத்தவர்களின் முதுகில் ஏறிப் பயணம் செய்துதான் வாழமுடியும் என்று செயல்படும் .வெ..வுக்குத் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள். .வெ..வில் இணைந்த மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றிபெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் சேர்ந்துள்ளனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்? வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டுப் பதவி சுகத்திற்காக மற்றொரு கட்சியில் சேர்வது மக்கள் தீர்ப்பிற்கும், சனநாயகத்திற்கும் எதிரானது. நேர்மையான அரசியலில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு நம்பிக்கையிருந்தால் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் அல்லது இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது.”

திருமிகு. அன்புமணி, பா... தலைவர்

news
தமிழக செய்திகள்
தமிழுக்கு மூன்றாமிடம்: முதல்வர் பதவியேற்பும் மீறப்பட்ட ‘தமிழ்’ மரபும்

முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சு கொதிக்கிறது. இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க, முதல்வர் வழிவகை காணவேண்டும்.”

திரு. கி. வீரமணி, தி..தலைவர்

மாற்றம் என்று கூறிக்கொண்டு தமிழுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும். மேனாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், செயலலிதா, கருணாநிதி காலத்திலும்கூட இவ்வாறான செயல் நடைபெறவில்லை. தற்போதைய ஆட்சியின் மூலம் தமிழ்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து போன்று தமிழ்நாடும் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும்.”

திரு. R.S. பாரதி, தி.மு.. அமைப்புச் செயலாளர்

பதவியேற்பு விழாவில் நீண்டகால மரபு மீறப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ‘வந்தே மாதரம்பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டுள்ளது. இது அதிகாரிகளின் கவனக் குறைவா அல்லது ஆளுநரை மகிழ்விக்கச் செய்யப்பட்டதா என்பதற்கு முதல்வர் விளக்கமளிக்கவேண்டும்.”

திருதொல். திருமாவளவன் வி.சி.. தலைவர்

முதல்வர் பதவியேற்பு நிகழ்வில்வந்தே மாதரம்பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்தத் தவறு மீண்டும் தொடரக்கூடாது.”

திரு. இராமதாஸ், பா... நிறுவனர்

முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டதில் .வெ.. தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசிற்கும் உடன்பாடு இல்லை. தாய்த் தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடுவது என்பது நீண்டகால மரபு. நாங்கள் இது தொடர்பாக ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கைப்படி செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது.”

திரு. ஆதவ் அர்ஜூனா, அமைச்சர்

news
தமிழக செய்திகள்
“முதல்வர் பொறுப்பில் முத்திரை பதிக்க வாழ்த்துகிறோம்!”

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் மாண்புமிகு . ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவருடைய தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திருமிகு . ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவர் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவை தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் ஒருங்கிணைந்த நலன், சமூகநீதி, கல்வி முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய இலக்குகளை முன்னிறுத்தி தாங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பொறுப்பேற்று ஒருசில நாள்களில் தாங்கள் முன்னெடுத்துள்ள புதிய அரசியல் நாகரிகம், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூடுதல், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியவை. இதுபோன்று தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நல்லாட்சி வழங்க இறைவன் தங்களுக்கு ஞானத்தையும் உடல் நலன்களையும் அருள இறைவனை வேண்டுகிறோம்.

வெறுப்பு அரசியல் வளர்ப்பவர்களை ஒடுக்கி. சமயத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பவர்களைப் புறந்தள்ளி, மதநல்லிணக்கம், மனிதநேயம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சனநாயகப் பண்புகளைப் பாதுகாத்து, அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் தலைமையினைத் தாங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறோம். உலகின் மூத்தமொழி தமிழால் பெருமையுறும் பாரம்பரியமிக்க தமிழ்நாட்டின் இளைய முதலமைச்சர் என்னும் புதிய பொறுப்பில், எல்லா நிலைகளிலும் தாங்கள் சிறப்பான முத்திரை பதிக்க, தமிழ்நாடு ஆயர் பேரவை தனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது.

இறைவனின் அருளும் ஆசியும் உங்களோடு என்றும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை உளமாற வேண்டுகிறோம்.

+ பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

news
தமிழக செய்திகள்
நன்றி உணர்வோடு வழியனுப்புகிறது ‘நம் வாழ்வு’!

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகமானநம் வாழ்வுஇதழின் துணை ஆசிரியராக, கடந்த ஓராண்டு காலம் சிறப்புடன் பணியாற்றிய அருள்பணி. ஜேக்கப் குருசங்கர் அவர்கள், தற்போது தனது சொந்த மறைமாவட்டப் பணிக்குத் திரும்புகிறார். ‘நம் வாழ்வுகுடும்பம் மனதார வாழ்த்தி வழியனுப்புகிறது. திருத்தந்தையின் ஆழமான செய்திகளைச் சாமானிய வாசகர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், ‘திருத்தந்தையின் திருவாக்குமற்றும்சதுக்கத்தின் சப்தம்ஆகிய பகுதிகள் வழியாகத் தொடர்ந்து வழங்கி, ஆன்மிகத் தேடல் கொண்ட வாசகர்களுக்கு ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்கு இவரைத் தந்து உதவிய ஊட்டி மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்களுக்கு, ‘நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத் தலைவர், மற்றும் ஆசிரியர் குழு சார்பாக எமது நன்றியினை உரித்தாக்குகிறோம்.

அருள்பணி. ஜேக்கப் குருசங்கர் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இறைப்பணி சிறக்கவும், அவருக்குத் தேவையான உடல், உள்ள மற்றும் ஆன்ம நலன்களை இறைவன் நிறைவாகத் தந்து வழிநடத்தவும்நம் வாழ்வுஇதழ் அன்புடன் வாழ்த்தி வழியனுப்புகிறது.                                                        

முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைத் தங்களுடைய பலத்தினால் பல்வேறு யுக்திகளினாலே ஆக்கிரமித்த பாரதிய சனதா கட்சி தமிழ்நாட்டிலும் கால்வைக்க முயற்சி செய்கிறது. அதைத் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமூச்சுடன் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இது அதீதமான நம்பிக்கை அல்ல, தன்னம்பிக்கை!”

திருமிகு. திருச்சி சிவா, தி.மு.. துணைப் பொதுச் செயலாளர்

தொகுதி மறு வரையறையால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது. ஆனால், இது தொடர்பாக ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார். தி.மு.. அரசின் தோல்விகளை மறைக்க தொகுதி மறு வரையறையால் ஆபத்து என்கிறார். தமிழகத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள் ஸ்டாலின்.”

திருமிகு. எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.. தலைவர்

நான் ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் போனதுக்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக்ஷன். எனக்கு ஒரு எமோஷன், எனக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும் எனக்கும் கண் கலங்கும். கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால் சனநாயகனை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவும் எடுபடவில்லை. நான் வெளியே வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர் நம்மைச் சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், வேதனைகளைக் கடந்து வந்துள்ளேன். தி.மு.-வினராலேயோ, பா...வினராலேயோ மற்றும் பலராலேயோ என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது.”

திருமிகு. விஜய், .வெ.. தலைவர்

செல்லும் இடமெல்லாம் தி.மு.. கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். தமிழ்நாட்டு முதல்வர் முன்மொழியும் அரசியல், ஒன்றிய அரசின் அதிகாரக் குவியலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் போர். பா...வுக்கு வாக்களித்தால்தான் மதுரை மெட்ரோ இரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் மிரட்டுகிறார். இந்தப் பிளாக்மெயில் எல்லாம் எடுபடாது. பிரதமர், உள்துறை அமைச்சர் என ஒன்றிய அமைச்சர்களின் முகாமே சென்னையில் அமைந்தாலும் சரி, பா... தோல்வி அடைவது உறுதி.”

திருமிகு. மு. வீரபாண்டியன், சி.பி.. தலைவர்