news
உலக செய்திகள்
“காசா மக்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவிட அனைவரும் முன்வரவேண்டும்”- திருத்தந்தை

காசா பகுதியில் நிலவும் கடும் துயரங்களைக் களைய உலகளாவிய சமூகம் முன்வரவேண்டும் என்றும், போர்க் களங்களில் மனித உயிர்களைப் பொருட்படுத்தாத செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் திருத்தந்தை 14-ஆம் லியோ வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை, “காசா மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கே மீண்டும் மறுகட்டமைப்புப் பணிகளைத் தொடங்க அனைத்து அதிகாரிகளும் உதவ வேண்டும்என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். காசா நோக்கிச் சென்ற அமைதி ஆர்வலர்கள் மீதான வன்முறையைக் கண்டித்த திருத்தந்தை, வன்முறை வெறுப்பையே வளர்க்கும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகளைக் காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.

நவீன போர்களில் .. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மனித மதிப்பற்றதொழில்நுட்ப ஆதிக்கத்திற்குஎதிராகஆயுதமற்ற செயற்கை நுண்ணறிவுஎனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். இது தொடர்பாகஆந்த்ரோபிக்போன்ற முன்னணி .. நிறுவனங்களுடன் வத்திக்கான் ஆலோசனைகளைத் தொடங்கி இருப்பதாகவும், தொழில்நுட்பம் மனித மாண்பைச் சிதைக்காத வகையில் இருப்பதை உறுதிசெய்ய உரையாடல் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

news
உலக செய்திகள்
“போர் சிக்கல்களைத் தீர்க்காது; துயரங்களையே விளைவிக்கும்”- உக்ரைன் தாக்குதலுக்குத் திருத்தந்தை லியோ கண்டனம்

உக்ரைன் மற்றும் லெபனான் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ, போரினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், “உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதை நான் கவலையுடன் கவனித்து வருகிறேன். ஏவுகணைகளும் ட்ரோன்களும் விழும் இடங்களில் நம்பிக்கைகள் சிதைகின்றன; வழிபாட்டுத் தலங்களும் வீடுகளும் அழிக்கப்பட்டு, அப்பாவி உயிர்கள் பலியாகின்றன. போர் பாதுகாப்பைத் தராது; மாறாக, வெறுப்பையும் துயரத்தையும் மட்டுமே விளைவிக்கும்என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், லெபனான் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும் அவர் செபித்தார். அன்னை மரியா தாய்மைப் பாசத்துடன் நம்மைப் பாதுகாப்பார் என்று லெபனான் திருப்பயணிகளுக்கு அவர் ஆறுதல் கூறினார். குழந்தைகளுக்கு இறையன்பையும் பிறரன்பையும் கற்றுத் தரும் அனைத்துத் தாய்மார்களுக்கும் திருத்தந்தை தனது நன்றியையும் ஆசிரையும் வழங்கினார். கருவுற்றது முதல் இயற்கை மரணம் வரை ஒவ்வொரு மனித உயிரையும் பாதுகாக்க வேண்டுகோள் விடுத்தார்.

news
உலக செய்திகள்
சஹேல் பகுதியில் அமைதி நிலவ திருத்தந்தை வேண்டுகோள்!

ஆப்பிரிக்காவின் சஹேல் (Sahel) பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைகளைக் கண்டு கவலையடைந்துள்ள திருத்தந்தை லியோ, அங்கு அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்த உலக நாடுகள் ஒன்றிணையவேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார். சாட் (Chad) மற்றும் மாலி (Mali) நாடுகளில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இறைவேண்டல் செய்ததுடன், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அன்பிற்குரிய நிலத்தில் உடனடியாக அமைதி திரும்பவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக அல்-கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழந்து வருகின்றனர். இராணுவப் புரட்சிகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இப்பகுதியின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள சூழலில், வன்முறையைக் கைவிட்டு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கவேண்டும் என்பதே திருத்தந்தையின் முதன்மையான வேண்டுகோளாக உள்ளது.

news
உலக செய்திகள்
அணு ஆயுத ஒழிப்பே நிலையான அமைதிக்கு வழி!

அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதே உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நிலையான அமைதிக்கு இருக்கும் ஒரே வழி என்று .நா.விலுள்ள வத்திக்கானின் நிரந்தரத் தூதுக்குழு வலியுறுத்தியுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) 11-வது ஆய்வு மாநாட்டில் வத்திக்கான் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறது. அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் (TPNW) இன்னும் இணையாத நாடுகள் உடனடியாக அதில் இணையவேண்டும் என்று திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது. அணு ஆயுதப் பயன்பாடு என்பது எல்லைகளையும் தலைமுறைகளையும் தாண்டிய பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. பயத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு முறை ஒருபோதும் நிரந்தர அமைதியைத் தராது. அணு ஆயுத அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுவதைக் கண்டித்த வத்திக்கான், வெளிப்படையான தகவல் தொடர்பு மற்றும் அணு ஆயுத ஒழிப்புக்கான உறுதியான நடவடிக்கைகளே இன்றைய உலகிற்குத் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

news
உலக செய்திகள்
“உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் அமைதி நிலவட்டும்” - திருத்தந்தை லியோ

ஆப்பிரிக்கத் திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக அங்கோலாவிற்கு வருகை தந்துள்ள திருத்தந்தை லியோ, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அங்கோலாவின் லுவாண்டா நகரில் நடைபெற்ற திருப்பலிக்குப் பிறகுரெஜினா செலி (Regina Coeli) உரையாற்றிய அவர், உலக நாடுகள் அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது அண்மையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தத் திருத்தந்தை, “ஆயுதங்கள் மௌனமாகட்டும், பேச்சு வார்த்தைக்கான பாதைகள் திறக்கப்படட்டும்என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல், லெபனான் இடையே எட்டப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தைநம்பிக்கையின் அடையாளம்என்று அவர் வர்ணித்துள்ளார். “துன்பப்படுபவர்களின் அழுகுரலை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது; நம்பிக்கையின் ஒளி அனைவரின் வாழ்விலும் வீசவேண்டும்என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

news
உலக செய்திகள்
“நான் அரசியல்வாதி அல்ல; நற்செய்தியைப் பேசுபவன்”- அமெரிக்க அதிபருக்குத் திருத்தந்தை பதிலடி!

ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக அல்ஜீரியா நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை லியோ, உலக அரசியல் மற்றும் அமைதி குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தனக்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருத்தந்தை, “நான் ஓர் அரசியல்வாதி அல்ல; அவருடன் விவாதத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. போருக்கு எதிராக வலுவாகப் பேசுவதும், அமைதி, உரையாடல் மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுமே எனது பணிஎன்று கூறினார்.

அமெரிக்க அதிபர் நிர்வாகத்தைக் கண்டு தனக்கு அச்சமில்லை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, திரு அவை எப்போதுமே அமைதியை ஏற்படுத்துபவர்களின் பக்கமே நிற்கும் என்றார்.