இந்தியத்
திரு அவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அமராவதி மறைமாவட்ட ஆயர் மேதகு மால்கம் செக்வேரா, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) சமூகத்
தொடர்பு பணியகத்தின் (OSC) ஆயர்
உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பாங்காக் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பில், இவரது நியமனம் உள்ளூர் மற்றும் இந்தியத் திரு அவைக்குக் கிடைத்த ஒரு நற்பேறாகக் கருதப்படுகிறது.
தனது
புதிய பொறுப்புக் குறித்து ஆயர் மால்கம் கூறுகையில், “இந்தப் பெருமை எனது அமராவதி மறைமாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. இறைவனின் அளப்பரிய ஆசிகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடவுளின் வழிகாட்டுதலில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உண்மையுடன் நிறைவேற்றப் பாடுபடுவேன்” என்றார்.
ஆயரின் இந்தப் பணி ஆசியத் திரு அவையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.