நவம்பர்
16 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்ற நாற்பது திருத் தொண்டர்களிடம், “அரசு சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் எண்ணெயையும், எதிர்நோக்கு என்னும் திராட்சை இரசத்தையும் வழங்கவும், கலாச்சாரம்,
சமூகம், தீமைகள், மறைக்கப்பட்ட பாவங்கள் போன்ற பல சங்கிலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும்
மக்களை மீட்கவும் முன்வர வேண்டும்”
என்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
புனித
வியாழனன்று, பெண்கள் சிறைக்குச் சென்று, தான் அவர்களின் பாதங்களைக் கழுவியதையும், சிறைக்கைதிகளில் இருந்த ஒரு பெண் தன்னை அழைத்து தனது மகனையே தான் கொன்றதாகக் கூறியதையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.