news
வத்திக்கான் செய்திகள்
‘கல்வி கற்பித்தல் என்பது பணி மட்டுமல்ல, திரு அவையின் அடையாளம்’- திருத்தந்தை லியோ

நவீன கல்வியின் சவால்களுக்கு மத்தியில் கல்வியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க பணியை மனத்தாரப் பாராட்டுவதாகத் திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் மாட்ரிட்டில் கல்வியாளர்களுக்கான மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கேற்றவர்களை வாழ்த்தியும், சில வழிகாட்டுதல்களை வழங்கியும் திருத்தந்தை லியோ செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மாநாட்டின் கருப்பொருளைச் சுட்டிக்காட்டி, “கிறிஸ்துவே நம் அடையாளம்; நம் கல்விப் பணியின் அடித்தளம். கற்பித்தல், குணம் மற்றும் அறிவு இரண்டையும் வடிவமைப்பதற்கான வழிகாட்டும் திசைகாட்டியும் அவரேஎனக் குறிப்பிட்டுள்ளார்.

திரு அவையின் பல்வேறு பணிகளில், கல்வியாளர்களின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த சான்றுஎன மேலும் தெரிவித்துள்ள திருத்தந்தை, “கிறித்தவ அடையாளம் அலங்காரச் சின்னம் அல்ல; மாறாக, கல்விப்பணியின் செயல்முறைக்கு ஆழமான அர்த்தம், முறையான திட்டம் மற்றும் தெளிவான நோக்கத்தை அளிக்கும் மையக்கருஎனவும் குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
திருமணம் என்பது பிரிக்க முடியாத பந்தம் - ‘ஒரு சதை’ (Una caro) எனும் ஆவணத்தை வெளியிட்ட வத்திக்கான்!

திருமணத்தின் முக்கியத்துவத்தையும், கணவன்-மனைவி இடையே உள்ள புனிதமான பந்தம் குறித்தும் விளக்கும் வகையில், ‘ஒரு சதை (Una caro-cdh fhnuh) என்ற ஆவணம் வத்திக்கானில் இத்தாலிய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் திருமண பந்தம் என்பது இரு மனங்களைக் கடந்து வேறு திசை நோக்கிச் செல்லத் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் ஒரு காரணம் எனஉனா காரோஆவணம் குறிப்பிடுகிறது. மேலும், திருமணத்தில் இணையும் இருவர் உடல் மற்றும் மனரீதியாக, ஓர் உடல் சதையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள இந்த ஆவணம், உணர்வுப்பூர்வமான அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவரையொருவர் தாங்கிப் பிடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

திருமணம் இருவருக்கும் இடையேயான வரம்பு, அதைக் கடந்த எதையும் திரு அவை அனுமதிக்காது எனவும், இந்தக் கோட்பாடுகளின் கீழ், கிறித்தவ நம்பிக்கையின் கீழ், தம்பதியினர் குழந்தைகளைப் பெற்று வளர்க்க வேண்டிய பொறுப்புடையவர்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே காதல்வேண்டும்; அதே நேரம் அது பாலியல் தேடலுக்காக மட்டுமல்லாமல், அதையும் தழுவி மிக ஆழமான அன்பை வெளிப்படுத்தும் உறவாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
“இளம் தலைமுறைக்கு AI கல்வி மிக அவசியமானது”- திருத்தந்தை லியோ!

குழந்தைகள், இளையோர் தங்கள் முடிவுகளை, விருப்பங்களை எடுப்பதில் AI வழிமுறைகள் அவர்களைப்  பலவீனப்படுத்துவதாகத் திருத்தந்தை லியோ கவலை தெரிவித்துள்ளார். வத்திக்கானில்செயற்கை நுண்ணறிவு காலத்தில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மாண்புஎன்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருத்தந்தை, பொழுதுபோக்கு மற்றும் சிறார்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நமது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைச் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மாற்றுகிறது என்பது குறித்து எடுத்துரைத்தார். பெற்றோரும் கல்வியாளரும் இந்த இயக்கவியல் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம் என்றார். தொடர்ந்து உரையாற்றிய திருத்தந்தை, “வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் ஏற் படும் புதிய சவால்களை எதிர்கொள்ள ஏற்கெனவே உள்ள பாதுகாப்புச் சட்டங்களைப் புதுப்பிக்க வேண்டும். AI-இன் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கான நெறிமுறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்என்றும் கேட்டுக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
“இளையோருக்குத் திருவிவிலியம் எளிதில் கிடைக்கச் செய்யவேண்டும்”- திருத்தந்தை லியோ

வத்திக்கானில் கத்தோலிக்கத் திருவிவிலிய வல்லுநர்களுடனான கலந்துரையாடலில், திருத்தந்தை லியோ மக்களுக்காக அவர்கள் ஆற்றிவரும் பணியைப் பாராட்டி, தனது நன்றியையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்த அவர், தெய்வீக வெளிப்பாடு குறித்த கோட்பாடானதேய் வெர்பும்-இன் (Dei Verbum) 60-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்  திருவிவிலியத்தை எல்லா இடங்களிலும் எளிதாக அணுகவும் மகிமைப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  தொடர்ந்து பேசிய திருத்தந்தை, இன்றைய சூழலில் இளம் தலைமுறையினர் புதிய டிஜிட்டல் உலகில் வாழ்கின்றனர் எனவும், அங்கு கடவுளின் வார்த்தை எளிதில் மறைக்கப்பட்டு விடுவதாகவும் குறிப்பிட்டு, இளம் தலைமுறையினர் திருவிவிலியத்தை எளிதாக அணுக வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“நாம் படைப்புகளின் பாதுகாவலர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்”- திருத்தந்தை லியோ

பிரேசிலில் நடைபெற்று வரும் .நா. சபையின் பருவநிலை மாநாட்டில் பங்கேற்கும் உலகளாவிய தெற்கு ஆயர்கள் மற்றும் கர்தினால்களுடன் திருத்தந்தை லியோ அவர்கள் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, “நீங்கள் விரக்தியை விட நம்பிக்கையையும் செயலையும் தேர்ந்தெடுத்து, ஒன்றாகச் செயல்படும் உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளீர்கள்எனப் பெருமிதம் கொண்டார். “முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அங்கீகரிக்கும் அதேவேளையில் அது போதுமானதல்லஎன்றும், “நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு புதுப்பிக்கப்பட வேண்டும்என்றும் திருத்தந்தை அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“சவால்கள் நிறைந்த நேரத்தில் கிறிஸ்துவை நம் மையத்தில் கொள்வோம்”- திருத்தந்தை லியோ

உரோமை, அவென்டைன் மலையில் உள்ள  தூய  அன்செல்மோ ஆலய அர்ப்பணிப்பின் 125-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பெனடிக்டைன் அருள்பணியாளர்கள் மத்தியில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை லியோ, “கிறிஸ்துவை நம் வாழ்வின் மையமாகக்கொண்டு, இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதிலளிக்க வேண்டும்என அறிவுறுத்தினார். “சமூகத்தில் நாம் காணும் திடீர் மாற்றங்கள் நம்மைத் தூண்டிவிடுவது மட்டுமின்றி, கேள்வி எழுப்பவும் செய்கிறதுஎனக் குறிப்பிட்ட திருத்தந்தை, இதற்கு முன்பு நாம் சந்திக்காத பிரச்சினைகளைத் தற்போது சந்தித்து வருகிறோம் எனவும் கூறினார். இத்தகைய சூழலில், “கிறிஸ்துவை நமது இருப்பு மற்றும் நமது பணியின் மையத்தில் வைப்பதன் மூலமாக மட்டுமே, நமது அழைப்புப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்எனவும் அவர் நினைவூட்டினார்.