பெரு
நாட்டின் புகழ்பெற்ற புனிதரான லீமா நகர் புனித ரோஸ் (St. Rose of Lima) குறித்த
உலகளாவிய கருத்தரங்கு உரோமையில் உள்ள கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. வத்திக்கான் தோட்டத்தில் இப்புனிதரின் திருவுருவம் நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வு பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிகழ்வைத் தொடங்கி வைத்த கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே, “புனித ரோஸின் ஆன்மிகம் கடல்களைக் கடந்து தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ளது. போதனைகளை விட முன்மாதிரிகளை விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டி”
என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முயற்சி ஒரு புதிய மறைப்பணி இயக்கத்திற்கு விதையாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருத்தந்தை லியோ முன்னிலையில் திறக்கப்படவுள்ள இத்திருவுருவம், முற்றிலும் பெரு நாட்டின் மூலப்பொருள்களால் செதுக்கப்பட்டுள்ளதாகவும், இயேசு புனித ரோஸிற்கு மலர்களை வழங்கும் காட்சியை இது சித்தரிப்பதாகவும் வத்திக்கான் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. மேலும், பூக்கடைக்காரர்கள் மற்றும் தோட்டக்காரர்களின் பாதுகாவலியாகப் போற்றப்படும் இப்புனிதர், ‘முள்களுக்கு இடையே மலர்ந்த லீலி’ எனத் திரு அவையால் புகழப்படுகிறார்.