news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

புத்தகக் காட்சியில் இடம்பெறும் அரங்குகள் வெறும் கடைகள் அல்ல; அங்குள்ள புத்தகங்கள் வெறும் காகித அச்சு எழுத்துகளைக் கொண்டவையும் அல்ல; புத்தகங்கள் சிந்தனைகளைத் தாங்கி நிற்பதால், அவை அறிஞர்களாகக் கருதப்படுகின்றன. புத்தகக் கடைகள் அறிஞர்கள் குடியிருக்கும் அறைகளாகவே உள்ளன. அறிஞர்களிடம் நமக்கான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதுபோல, புத்தகங்களைப் படித்தும் நாம் அறிவுத்தெளிவைப் பெற்று வருகிறோம். ஆகவே, புத்தகங்கள் உயிரற்றவை என்பது சரியல்ல; அறிவானது இயற்கைப் பொது அறிவு, படிப்பறிவு, பட்டறிவு, அனுபவ அறிவு, பகுத்தறிவு எனப் பலவகை. பகுத்தறிவு என்பது பிறர் கூறுவதை ஏற்க வேண்டுமெனில், அதற்குத் தக்க விளக்கம் தேவை எனக் கேட்பதாகவே உள்ளது. பல நூல்களைப் படித்தாலே தெளிவாகப் பேசமுடியும். ஆகவே, புத்தகப் படிப்பென்பது நம்மை மேம்படுத்துவதாகவே அமையும்.”

திருச்சி சிவா எம்.பி.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் எனச் சுமார் 59,000 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 1.20 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களிடையே பாடப் புத்தகங்களைக் கடந்து பொது வாசிப்புப் பழக்கம் என்பது குறைந்து வருவதாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவற்காக மாவட்டவாரியாகப் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், புத்தகம் வாங்கும் அளவுக்கு இளைய தலைமுறையினரிடம் குறிப்பாக, பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத் திறன் எதிர்பார்த்த அளவிற்கு மேம்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது கைப்பேசி பயன்பாட்டுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் புத்தக வாசிப்பிற்கு மாணவர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற சூழலில், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் மாநில அரசுகள் அங்குள்ள பள்ளிகளில் நாளிதழ் வாசிப்பைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளன. இந்த உத்தரவு மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதோடு, பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட பல தகவல்களை அறிந்து கொள்வதற்கு உதவும்.” 

பொது நூலகத்துறை, தமிழ்நாடு அரசு

பல அறங்களைத் தமிழர்களுக்குத் தனது குறள் வழியாகக் கூறி, தமிழனாகப் பிறந்த நம்மைத் தலைநிமிரச் செய்தவர் திருவள்ளுவர். ஆகவே, கடைசி மனிதனின் உயிர் இருக்கும் வரை திருக்குறள் நிலைத்து நிற்கும். குறளின் பொருளைக் குழந்தைகளுக்கு முறையாகக் கொண்டு சேர்ப்பது அவசியம். வள்ளுவர் காவியம் படைத்திருந்தால் அது உலகை வென்றிருக்கும். அழகை ஆராதித்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அழகையேமுருகுஎனக் கடவுளாகக் கண்டவர்கள். அத்தகைய அழகை ஆராதித்த வள்ளுவரை உள்ளத்திலும் இல்லத்திலும் தமிழர்கள் ஏற்றிடவேண்டும். தமிழை வீட்டுச் சொத்தாகவும் நாட்டுச் சொத்தாகவும் ஆக்கிக்கொள்ளவேண்டும்.”

கவிஞர் வைரமுத்து

news
தமிழக செய்திகள்
குழித்துறை மறைமாவட்டத்தில் ‘வாழும் குடில் திட்டம்’4 கோடி மதிப்பில் 51 புதிய வீடுகள்!

குழித்துறை மறைமாவட்டம் யூபிலி ஆண்டு 2025- முன்னிட்டு சிறப்புத் திட்டமாக, குழித்துறை திரு அவை வீடற்ற எல்லாருக்கும் வீடு கட்டிக்கொடுக்கும்வாழும் குடில் திட்டத்தைமுதன்மைப் பணியாக இந்த யூபிலி ஆண்டில் முன்வைத்து, ஒரு பங்கிற்கு ஒரு வீடு எனத் திட்டமிட்டுச் செயல்பட அழைப்பு விடுத்தது.  இத்திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், பங்கு அருள்பணிப்பேரவை நிர்வாகிகள், அடித்தள முழு வளர்ச்சி சங்க நிர்வாகிகள் மற்றும் இறைமக்கள் என அனைவரும் இணைந்து உழைத்ததன் பயனாக தற்போது குழித்துறை மறைமாவட்டத்தில் சுமார் 4 கோடி மதிப்பில் 51 புதிய வீடுகள் பயனாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 30 வீடுகள் பழுது நீக்கி பராமரித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் கூறும்போது, “மிகச் சிறியோராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்என்ற இயேசுவின் வார்த்தைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்ததாகவே இத்திட்டத்தின் வெற்றியைப் பார்க்கிறேன். ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்ததன் மூலம் இயேசுவுக்கே வீடு கட்டிக் கொடுத்ததாக உணர்கிறேன்என்றார். மேலும் அவர், “எம் குழித்துறை மறைமாவட்டத்தில் - இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில்வீடற்றவர்கள் இல்லைஎனும் நிலை வரும் வரை இத்திட்டம் தொடரும்என்றார். இத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வில், சமயமோ பங்கு உறுப்பினர் என்ற உரிமையோ முதன்மையாக்கப்படாமல், யார் அதிகத் தேவையில் இருக்கிறார்கள் என்பதே முதல் தகுதியாகப் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

news
தமிழக செய்திகள்
‘நம் வாழ்வின்’ கிறிஸ்துமஸ் உறவுக் கொண்டாட்டம்!

நம் வாழ்வுவார இதழின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்நம் வாழ்வுவார இதழ் அலுவலகத்தில்நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத் தலைவர் ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தென்னிந்தியத் திரு அவை சென்னை மண்டல மேனாள் பேராயர் மேதகு தேவசகாயம், நாடாளுமன்ற, சட்டமன்ற மேனாள் உறுப்பினர் சா. பீட்டர் அல்போன்ஸ், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் திரு. ரபி பெர்னார்டு, ‘நம் வாழ்வுஇதழின் மேனாள் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் வின்சென்ட் சின்ன துரை, தொழிலதிபர் திரு. அமல்ராஜ் மற்றும் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்நிகழ்வின் தொடக்கமாக, முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் அவர்கள் பொன்விழா ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயல்திட்டங்களைக் குறித்து எடுத்துக்கூறினார். குறிப்பாக, கடந்த ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டநம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழ்பொன்விழா ஆண்டில் ஆகச்சிறந்த செயல்பாடாக எடுத்துரைத்தார்.

முனைவர் ரபி பெர்னார்டு அவர்கள் தன்னுடைய சிறப்புரையில், ‘நம் வாழ்வுமின்னஞ்சல் நாளிதழைப் பாராட்டியதோடு, இது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, அவர் தன்னுடைய உரையில், “இன்று தமிழ்நாட்டில் சுமார் 70 இலட்சம் கிறித்தவர்கள் இருக்கிறார்கள். நாம் ஒன்றித்து இருப்பதே நமது சக்தி. இந்த ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மக்களிடத்தில் வளர்க்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறதுஎன்று வலியுறுத்தினார்குறிப்பாக, திரு அவையின் தலைவர்கள் கிறித்தவ ஒன்றிப்பிற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் அதே நேரத்தில் இந்த இதழுக்கு நாம்தான் பொருளாதார ரீதியாகவும் அதிக ஆதரவுக் கரம் நீட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேனாள் பேராயர் தேவசகாயம் தன்னுடைய கிறிஸ்துமஸ் செய்தியில், கிறிஸ்துமஸ் எவ்வாறு தூய்மையின் அடையாளமாக, வாழ்வின் அடையாளமாக, ஒளியின் அடையாளமாக இருக்கிறதோ அது போன்றுநம் வாழ்வுஇதழ் இச்சமூகத்தில் பிறருக்கு வாழ்வை வழங்கக்கூடியதாக, இருளில் இருப்பவர்களுக்கு ஒளியைக் கொடுப்பதாக இருக்கிறது எனப் பாராட்டினார்.

திரு. பீட்டர் அல்போன்ஸ் தனது உரையில், “இன்றைக்குச் சமூகத் தொடர்பு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது. இன்று நம்மைச் சுற்றி எதிர்மறையான கருத்துகள், நமக்கு எதிராக சூழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்எனக் கூறினார். “நம்மையெல்லாம் ஒன்றிணைக்கிற ஓர் இதழ்நம் வாழ்வு.’ இதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்எனக் கேட்டுக்கொண்டார்.

ஆயர் மேதகு லூர்து ஆனந்தம், “நமது கிறித்தவ மக்களின் எண்ணிக்கைதான் நமது சக்தி. நமது எண்ணிக்கையைப் பிளவுபடுத்தப் பல சக்திகள் செயல்படுகின்றன. ‘அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாகஎன்ற கடவுளின் கட்டளையை ஏற்று இன்றைய மதவாதச் சூழலில் இணைந்து பயணிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதுஎனவும், “நம்மைச் சுற்றி நிகழும் அரசியல் பேராபத்தைத் தடுக்க பிற மதத்தினர், நல் மனம் கொண்டோர், சமயசார்பற்ற சிந்தனையாளர், நண்பர் குழுக்கள் என அனைவரும் இணையவேண்டும்எனவும் வலியுறுத்தினார்.

சிறப்பாக நடைபெற்ற இந்தக் கிறிஸ்துமஸ் உறவுக் கொண்டாட்ட நிகழ்வுநம் வாழ்வுவரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைந்திருந்தது.

விழா நிறைவில் நடைபெற்ற உணவு விருந்திலும் அனைவரும் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். சிறப்பாக, வருகைபுரிந்த அனைவருக்கும் பொன்விழா மலர், ‘நம் வாழ்வுநாள்காட்டி, நூல்கள் எனப் பரிசுப் பொருள்களும் பரிமாறப்பட்டன.


news
தமிழக செய்திகள்
கனடாவின் புதிய தேர்வு நிலை பேராயர் அருள்பணி. சூசை சேசு OMI (சிவகங்கை மறைமாவட்ட மண்ணின் மைந்தர்!)

தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் பங்கின் மண்ணின் மைந்தரான அருள்பணி. சூசை சேசு OMI அவர்கள் கனடாவின் கீவாட்டின்-லே-பாஸ் (Keewatin-Le Pas) உயர் மறைமாவட்டத்தின் பேராயராகத் திருத்தந்தை  14-ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அமலமரி தியாகிகள் சபை (OMI) உறுப்பினர் ஆவார். தற்போது எட்மண்டன் உயர் மறைமாவட்டத்தில் உள்ள திரு இருதய  ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும், அச்சபையின் மாகாண ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

அருள்பணி. சூசை சேசு அவர்கள் 1971-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்டம், புஷ்பவனம் பங்கில் பிறந்தவர். அவர் தனது தொடக்கக் கல்வியினை அருகிலுள்ள உலையூர் கிராமத்திலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை, திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்பெங்களூருவில் உள்ள தர்மாரம் Vidya Kshetram கல்லூரியில் தத்துவயியலையும், ஆஷ்டாவில் உள்ள கிறிஸ்து பிரேமாலய இறையியல் நிறுவனத்தில்  இறையியலையும் பயின்றவர். பின்னர் ஒட்டாவாவில் உள்ள புனித பவுல் பல்கலைக்கழகத்தில்  மேய்ப்புப்பணி ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2000-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்ற இவர்கடந்த பல ஆண்டுகளாகத் துணைப் பங்குத்தந்தை, பங்குத்தந்தை மற்றும் OMI சபையின் மாகாண ஆலோசனைக் குழு உறுப்பினர் எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டவர்.

புதிய பேராயரின் பணி சிறக்கநம் வாழ்வுவாழ்த்துகிறது!

news
தமிழக செய்திகள்
நினைவுகூரப்பட்ட மறைமாவட்ட இறையடியார்களின் முன்மாதிரியான வாழ்க்கையால் தூண்டப்பட அழைப்பு!

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் நாள், யூபிலி 2025-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 9 தூய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவன்று ஒவ்வொரு தலத் திரு அவையும் புனிதர்களை மட்டுமன்றி, அந்தந்த மறைமாவட்ட எல்லைக்கு உட்பட்டு பிறந்து, உலகளாவியத் திரு அவைக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட அருளாளர்கள், இறை ஊழியர்கள், வணக்கத்திற்குரியவர்கள் அனைவரையும் நினைவுகூர கடிதம் ஒன்றின் வழியாக அழைப்பு விடுத்திருந்தார்.

திருத்தந்தையின் அழைப்பின்படி தூத்துக்குடி மறைமாவட்ட இறையடியார்கள் அகுஸ்தின் பெரைரா, அந்தோனி சூசைநாதர் ஆகியோரின் முன்மாதிரியான வாழ்வு நினைவுகூரப்பட்டு, அவர்கள் விரைவில் அருளாளர் நிலைக்கு உயர சிறப்புத் திருப்பலி, இறையடியார் அந்தோனி சூசை நாதர் கல்லறை இருக்கும் வடக்கன்குளம், புனித திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது.

news
தமிழக செய்திகள்
மாற்றம் நோக்கி... 100 கருத்தாளர்கள்! (தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் முன்னெடுப்பு!)

மாற்றம் நோக்கி 100 கருத்தாளர்கள்என்கிற இலக்கோடு இளைஞர்களைக் கருத்தாளர்களாக உருவாக்கும் திட்டத்தின் இரண்டாவது நேரடி அமர்வு Sisters of Charity (SCCG) சபையின் தென் கிழக்கு இந்திய மாகாணத்தின் தலைமையகமான திருச்சி மரியகத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றன. இந்தப் பயிற்சியில் தமிழ்நாட்டிலிருந்து 36 இளையோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இலக்குப் பாடலானபொது இலக்கு கனவெடுத்துஎனும் பாடலுடன் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

முதல் அமர்வில்அம்பேத்கரின் பார்வையில் சமூக நீதிஎன்ற தலைப்பில் புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியரான பணி. . செகன் போசு கருத்துரை வழங்கினார். அவர் தனது உரையில்சமூக நன்மை (சமூக நீதி) என்பது இரக்கம் சார்ந்தது அல்ல; அது உரிமை சார்ந்தது. மேலும், இது தனிமனிதனின் பொறுப்பல்ல, அரசின் கடமைஎன்று கூறினார். மற்றோர் அமர்வில், ‘பூவுலகின் நண்பர்கள்இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், அவர்களோடு இணைந்து இளைஞர்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இயக்கத்தின் இயக்குநரான பணி. கு.. எடிசன், ‘சாதியற்ற தமிழ்ச் சமூகம், சாதியத் தமிழ்ச்சமூகம்என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் எவ்வாறு சாதி ஊடுருவியது என்றும், சாதியற்ற தமிழ்ச் சமூகம் எவ்வாறு இருந்தது என்றும் இன்றைய அவல நிலை குறித்தும் எடுத்துரைத்தார்.

இரண்டாம் நாள் அமர்வில், ‘காவிமயமாகும் நீதித்துறைஎனும் தலைப்பில் வழக்கறிஞரான அருள்பணி. சவரிமுத்து கருத்துரை வழங்கினார். அவர் தனது உரையில், இன்றைய சூழலில் மக்களின் கடைசி நம்பிக்கையான நீதித்துறை எவ்வாறு மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு எதிராகச் செயல்படுகிறது என்பது பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, அதனை உயர்த்திப் பிடிப்பதற்கான தேவை பற்றியும் எடுத்துரைத்தார். சிறந்த கருத்தாளர்களாக உருவாக வேண்டுமெனில் தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கவேண்டும் என்ற கருத்தும் இந்தப் பயிற்சிப் பாசறையில் வலியுறுத்தப்பட்டது.