news
தமிழக செய்திகள்
முதன்மைக் குருவின் வாழ்த்துரை

கோவை மறைமாவட்டம், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்கா, மறைமாவட்டத்தின் முதல் தலைமை ஆலயமாக உருவானது. இந்த அழகுமிக்க பசிலிக்கா மறைமாவட்டத்திற்குப் பெரும் புகழைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை திருப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றது. குறிப்பாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் இங்கு வருகை புரிகின்றார்கள். பசிலிக்கா நம்மையும் இறைவனையும் மிக நெருக்கமாகச் சந்தித்து உரையாட வைத்து இறைவனின் அர்ச்சிப்பைப் பெற்றுக்கொண்டு நம்மைப் பிறருக்கு நல்ல மனிதர்களாக மாற்றுகின்ற ஓர் உன்னதமான இடம்.

இங்கு வரும் அனைத்து மக்களும் ஏராளமான வரங்களை மகிழ்ச்சியோடு பெற்றுச்செல்ல இந்த இறைவேண்டலின் வீடு துணைபுரிவதாக! இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். பசிலிக்கா அதிபர், அருள்தந்தையர்கள், பங்கு இறைமக்கள், வருகின்ற திருப்பயணிகள் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.


news
தமிழக செய்திகள்
நன்மைகளையும் புதுமைகளையும் வாரி வழங்குபவர் கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை!

கோவை ஆயரின் ஆசியுரை

அன்புள்ளம் கொண்ட அருள்பணியாளர்களே! இருபால் துறவியரே! இறைமக்களே! ‘நம் வாழ்வுவாசகப் பெருமக்களே! இறை இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் புனித செபமாலை அன்னையின் பெயரால் வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்கிக்கொள்கின்றேன். புனித செபமாலை அன்னை நம்மை அண்டி வருவோருக்கு எல்லாம் ஏராளமான நன்மைகளையும் புதுமைகளையும் வழங்கி வருகிறார். இறைநம்பிக்கையில் நிறைவை அடைய கத்தோலிக்கத் திரு அவையின் தலைமை நமக்குக் கொடுத்துள்ள மிகப்பெரிய கொடை கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்கா, அனைத்து மதத்தினரும் சமய நல்லிணக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அடியெடுத்து வைக்கும் புண்ணிய பூமி. அன்னை மரியாவின் பரிந்துரையை நாடிவருவோரின் வேண்டுதல் நிறைவேறி அன்னையின் வழியாக இயேசுவுக்கு நன்றி செலுத்தும்போது பார்ப்பவரின் உள்ளத்திற்குள் பேரானந்தம் நிழலாடும்.

அக்டோபர் மாதம் என்றாலே செபமாலை செபிக்கும் மாதமாகும். எனவே, வருகின்ற அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் அன்னையின் பெருவிழாவில் நீங்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு அன்னையின் பரிந்துரை வழியாக இறையாசிரைப் பெற்றுச்செல்ல அன்புடனும் பாசத்துடனும் அழைக்கின்றேன்இறையாசிர்!


news
தமிழக செய்திகள்
எதிர்நோக்கின் திருப்பயணிகள்- வின்செந்தியர்கள் வழியே!

இடைக்காட்டூர் திரு இதய ஆண்டவர் திருத்தலத்திற்குப் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் திருப்பயணம் மேற்கொண்டனர். 2025-இன் யூபிலி ஆண்டுஎதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகிறது. அவ்வகையில் சிவகங்கை மறைமாவட்டத்தில் யூபிலி ஆண்டுக்கான திருப்பயணத் திருத்தலமாக இடைக்காட்டூர் திரு இதய ஆண்டவர் திருத்தலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

news
தமிழக செய்திகள்
இளையோர் கரங்களில் மிளிரும் ‘நம் வாழ்வு’ – மின்னஞ்சல் நாளிதழ்!

அண்மையில் நாம் வெளிக்கொணர்ந்தநம் வாழ்வுமின்னஞ்சல் நாளிதழ் (E-Newspaper) பல தளங்களில் பலராலும் வரவேற்கப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் பாராட்டப்படுவதும் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.

காலத்தின் அறிகுறிகளைக் கணித்து, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் பயணிக்கும் இளையோர்களை வாசிப்பாளர்களாக உருவாக்கவும், அவர்களைத் திரு அவை, சமத்துவம், ஒற்றுமை, நேரிய வழி, சமூக அக்கறை, விடியல் தரும் மாற்றுச்சிந்தனை, புத்துலகம் படைக்கும் இறையரசு மதிப்பீடு என்னும் பல்வேறு தளங்களில் தெளிந்த சிந்தனை கொண்ட ஆளுமைகளாக உருவாக்க நாம் முன்னெடுத்திருக்கும் இம்முயற்சி பலராலும் வரவேற்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

பங்கு, மறைமாவட்ட, மாநில இளையோர் அமைப்புகள், இளையோர் பணியாற்றும் பணித்தளக்குழுக்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், இளையோர் தங்கிப் பயிலும் - பணிபுரியும் விடுதிகள் எனப் பல தளங்களில்நம் வாழ்வு - மின்னஞ்சல் நாளிதழ், அவர்களின் கரங்களில் தவழ்வது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. யாம் விரும்பியது அதுவே! இளையோரை எழுச்சிமிகு ஆளுமைகளாக உருவாக்கவேண்டும் என்பதுதான்.

இத்தகைய பெரும் கனவில் எழுந்த பெரும் முயற்சியில் அன்றாடம் தோள் கொடுக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களையும், இளையோரை வழிநடத்தும் அமைப்புகளின் தலைவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். குறிப்பாக, சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட இளையோர் பணிக்குழு, மதுரை அக்சீலியம் கல்லூரி, மாதா தொலைக்காட்சிப் பணியாளர்கள், மதுரை - அமெரிக்கன் கல்லூரி விடுதி மாணவியர், சாந்தோம் இல்லக் கல்லூரி மாணவியர் அனைவருக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் குழுவில் எல்லாருக்கும் இது பகிரப்படுகிறது...”, “எங்கள் அலுவலகத்தில் அனைவரும் இதை அன்றாடம் வாசிக்கிறோம்...”, “ஓய்வு நேரத்தில் என்னுடைய கணினியில் இதை நான் வாசிக்கிறேன்...” எனப் பலரும் செய்திகளை அனுப்பி வைத்திருப்பது இது எங்கும் எல்லாராலும் பார்க்கப்படுகிறது, பகிரப்படுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

பங்கு அமைப்புகள், பக்த சபைகள், இளையோர் இயக்கங்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் என யாவரும் தாங்கள் கொண்டிருக்கக்கூடிய புலனக் (வாட்ஸ் அப்) குழுவில் இச் செய்திகளைப் பகிர்ந்து, மின்னஞ்சல் நாளிதழ் எல்லாருடைய கரங்களிலும் தவழ, தொடர்ந்து பேராதரவு தந்திட, அன்போடு வேண்டுகிறேன்!

வாருங்கள் இணைந்து பயணிப்போம்!

புதிய உலகு படைப்போம்!!

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
‘50 ஆண்டுகாலக் கனவு நனவாகிறது!’

நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத் தலைவர் மேதகு ஆயர் ஆனந்தம் அவர்களின் வாழ்த்து!

என் நெஞ்சுக்கு நெருக்கமான நம் வாழ்வின் வாசகப் பெருமக்களே! 50 ஆண்டுகால நமது கனவு நனவாகும் நன்னாள் இன்று! 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஆயர் பேரவையின் பெரும் முயற்சியால் பிறப்பெடுத்தநம் வாழ்வுஒரு நாளிதழாக மலரவேண்டும் என்று யாவரும் எதிர்பார்த்திருந்த சூழலில், காலத்தின் தேவை அறிந்து, அதன் அருங்குறிகளுக்கு ஏற்ப (Signs of the Times), நவீனத் தொழில்நுட்ப உலகின் சூழலுக்கு ஏற்றவாறுநம் வாழ்வுஎண்ணிமத் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் நாளிதழாக (E-Newspaper) மலர்வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

திரு அவைசமூகம்சிறுபான்மையினரின் அரசியல் பயணம், நாம் முன்வைக்கும் கோரிக்கைகள், உரிமைக்கான குரல் எனப் பல தளங்களில் செய்திகளைக் கிறித்தவ இறைச் சமூகத்திற்கும் இன்றைய இளையோருக்கும் சமூக வலைத்தளம் மூலம் உடனுக்குடன் வழங்க இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதுடன், அதன் உண்மைத்தன்மையை அசை போட்டு, வீரியமிக்க செயல்பாடுகளை முன்னெடுத்து, திரு அவையையும் உலகையும் நாட்டையும் புதுப் படைப்பாக்கும் முயற்சியில் யாவரும் ஒன்றிணைய வாழ்த்துகிறேன்! ‘நம் வாழ்வின்இப்பயணம் தொடர ஆசி வழங்குகிறேன்.

news
தமிழக செய்திகள்
எண்ணிமத் தொழில்நுட்பத்தில் சிறுபான்மையினரின் உரிமைக் குரல்!

தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர், சென்னை - மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் வாழ்த்துரை

அன்புக்குரியவர்களே! தமிழ்நாடு ஆயர் பேரவையின் சமூக ஊடகப் பணிக்குழுவின் ஒரு கிளையாகச் செயல்படும் அச்சு ஊடகப் பணிக்குழு, ‘நம் வாழ்வுஎன்னும் வார இதழை, மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்து அனைவருடைய பாராட்டையும் பெற்று வருவதை நாம் அறிவோம்! சமூக-ஆன்மிக-அரசியல்-வாழ்வியல் வழிகாட்டியாக, தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழாக வெளிவரும் இவ்விதழ், இன்றைய சமூக அரசியல் சூழலில், நமது கத்தோலிக்க இறைச்சமூகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய-தமிழ்நாடு சூழலில் சிறுபான்மையினராகிய நமது உரிமைக்கான குரலாகப் பொதுத்தளத்தில் சிறப்பாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்து வரும் இவ்விதழ், தனது பொன்விழா ஆண்டில் காலத்தின் அறிகுறிகளை அறிந்து, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் வண்ணம் மின்னஞ்சல் நாளிதழை (E - Newspaper) வெளிக்கொணர்வது மிகவும் பாராட்டத்தக்கது.

இம்முயற்சியை முன்னெடுக்க ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களையும் சிறப்பாக, தமிழ்நாடு ஆயர் பெருமக்களையும், இப்பணிக் குழுவின் தலைவர் மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களையும், இப்பணியை அன்றாடம் முன்னெடுக்கவிருக்கும்நம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர், அச்சு ஊடகப் பணியகத்தின் இயக்குநர் அருள்முனைவர்  இராஜசேகரன் அவர்களையும், அவர்களோடு உடன் பணியாற்றும் ஏனைய உதவி ஆசிரியர்களையும், அலுவலகப் பணியாளர்களையும் மனதார வாழ்த்துகிறேன்! அவர்களின் பணி சிறக்க ஆசி கூறுகிறேன்!

இம்முயற்சியை மேற்கொள்வதன் நோக்கம், இளையோரை வாசிப்புத்தளத்தில் உற்சாகப்படுத்தவும் திரு அவை, சமூக - அரசியல் செயல்பாடுகளில் அவர்கள் தெளிவு பெறவுமேஉலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு நமது மறைமாவட்டங்கள் எனப் பல தலங்களில் செய்திகளை உடனுக்குடன் தாங்கி  வரவிருக்கும் இந்த மின்னஞ்சல் நாளிதழிலிருந்து இளையோர் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து, நேர்மையான வழிமுறைகளை முன்னெடுத்து, சமூக மாற்றத்திற்கு முனைப்புடன் செயல்பட வாழ்த்துகிறேன். இந்த மின்னஞ்சல் நாளிதழ் அதற்குத் துணைபுரியும் என நம்புகிறேன். கத்தோலிக்க இறைச்சமூகம் இதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு ஆயர்கள் அனைவரும் இம்முயற்சியைப் பாராட்டி, பேராதரவு தந்திட அன்போடு வேண்டுகிறேன்!