news
தமிழக செய்திகள்
வேளாங்கண்ணியில் 18 சிறந்த பொதுநிலையினருக்கு விருதுகள்!

தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு சார்பில், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வைர விழா, புனித தேவசகாயம் பொதுநிலையினரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்ட நிகழ்வு மற்றும் மாநில அளவிலான கருத்தரங்கு ஆகிய முப்பெரும் விழாக்கள் மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணி தியான மையத்தில் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்நாட்டின் 18 மறைமாவட்டங்களிலிருந்தும் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர். பணிக்குழுவின் தலைவர் ஆயர் மேதகு சகாயராஜ் தலைமையில் தொடங்கிய இவ்விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 18 சிறந்த பொதுநிலையினருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. புனித தேவசகாயத்தின் ஆன்மிகம், பொதுநிலையினரின் அதிகாரம் மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்பட்டன. ஆயர் மேதகு நீதிநாதன் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் புனித தேவசகாயத்தின் தமிழ் மன்றாட்டு அட்டை வெளியிடப்பட்டது. பொதுநிலையினர் திரு அவையிலும் சமூகத்திலும் சாட்சிகளாக வாழவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பங்கேற்பாளர் அனைவருக்கும் வத்திக்கான் சங்க ஆவணங்களின் தொகுப்பு வழங்கப்பட்டது. பணிக்குழுச் செயலர் அருள்தந்தை மரிய மைக்கேல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

news
தமிழக செய்திகள்
திண்டிவனத்தில் விவிலியப் பட்டயப் படிப்பு

தமிழ்நாடு திருவிவிலிய அருள்பணிக்குழு சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடைக்கால விவிலியப் பட்டயப் படிப்பு வரும் மே மாதம் நடைபெற உள்ளது. திண்டிவனம் தமிழக முப்பணி மையத்தில் (TNBCLC) மே 6 முதல் மே 10 வரை இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். “அவர் பெருக வேண்டும் (யோவான் 3:30) என்ற இறைவார்த்தையைத் தாரக மந்திரமாகக் கொண்டு நடைபெறும் இக்கல்வியாண்டில் (Cycle-A), பழைய ஏற்பாட்டின் ஐந்நூல்கள் மற்றும் வரலாற்று நூல்கள் குறித்த ஆழமான பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன. தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன், அருள்முனைவர் ரெய்மண்ட் ஜோசப் மற்றும் முப்பணி மையப் பேராசிரியர்கள் இப்பயிற்சியை வழங்குகின்றனர். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்கு விவிலியப் பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் தங்குமிடம், உணவு மற்றும் பாடக்குறிப்புகள் உள்ளிட்டவற்றிற்கான கட்டணமாக ரூபாய் 3000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுநிலையினர், துறவியர் மற்றும் அருள்பணியாளர்கள் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: 9751891725 /  tnbcbc1974@gmail.com

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்கள், அதற்கான பொருள் விளக்கம் அடங்கிய தனி இணையப் பக்கம், தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, www. tamildigitallibrary.tn/tamilnames பிரத்யேக இணையப் பக்கத்தை, தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும். நான் நடத்திவைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், ‘பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்என்று மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன். அதற்கான பெயர்களை, அதன் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியுள்ளோம்.”

மாண்புமிகு. மு.. ஸ்டாலின், தமிழக முதல்வர்

உரிய ஆவணங்கள் இல்லாமல் ஐம்பது ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் செல்லப்படும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான ஆவணம் கட்டாயம் தேவை. மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிடப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளின் வழியாக அதிக எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். தேர்தல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் .. தொழில்நுட்பம் மூலம் வெளியிடப்படும் வீடியோவைக் கண்காணித்து வருகிறோம்.”

திருமிகு. அர்ச்சனா பட்நாயக், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

மக்களவை எப்போதுமே கண்ணியமிக்க விவாதங்களுக்கான பாரம்பரியத்தைக் கொண்டதாகும். ஆனால், சில காலமாக அவைக்கு உள்ளேயும் வெளியேயும் நாடாளுமன்ற மாண்பின் பெருமை சில உறுப்பினர்களால் குறைமதிப்புக்கு உள்படுத்தப்படுகிறது. அவைக்குள் பதாகைகள், அட்டைகள் காண்பிக்கப்படுவதும், பேசும் விதமும், வெளிப்படுத்தும் நடத்தையும் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்து உணர்த்தப்படும் செய்திதான், நாடு முழுவதும் சனநாயக அமைப்புகளில் எதிரொலிக்கும். அவையின் உயர்ந்த கண்ணியத்தையும் கௌரவத்தையும் பராமரிக்க தீவிர சுய பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய நேரம் வந்துள்ளது. அவை மற்றும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் தத்தமது எம்.பி.க்களின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறையான நடத்தையை உறுதி செய்ய சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

திருமிகு. ஓம் பிர்லா, மக்களவைத் தலைவர்

news
தமிழக செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

கரூர் சம்பவத்திற்கு சி.பி.. விசாரணை தேவை எனக் கேட்ட விஜய்யே, தற்போது சி.பி.. விசாரணையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வரும் தேர்தலில் தங்களது கூட்டணிக்குள் விஜய்யைக் கொண்டுவர பா... முயற்சிக்கிறது.”

திருமிகு. பெ. சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்

தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் நுழைவதைத் தடுக்க, காங்கிரஸ் பேரியக்கம் 234 தொகுதிகளிலும் களப்பணியாற்றும். மல்லிகார்ஜுன கார்கே, இராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். வரும் 36 நாள்களும் அயராது உழைத்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ் தொண்டர்கள் தயாராகவேண்டும்.”

திருமிகு. செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர்

ஒன்றிய பா... ஆட்சியில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தேவையான நிதி கொடுப்பதில்லை. போதிய திட்டங்களைக் கொண்டு வருவதில்லை.”

திருமிகு. வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

பிற மாநிலங்களில் பா..., சங் பரிவார் நயவஞ்சகமாகக் கூட்டணி கட்சிகளை வளைப்பது போன்ற யுக்தியைக் கையாள்வர். அதை தமிழ்நாட்டிலும் செய்யப் பார்க்கின்றனர்.”

திருமிகு. திருமாவளவன், விசிக தலைவர்

news
தமிழக செய்திகள்
தேர்தல் எதிரொலி...

பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே...

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 2026-ஆம் ஆண்டு நமது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை நாமே தருவித்துக் கொள்ளும் காலம்! 17-வது சட்டப் பேரவைத் தேர்தல் வழி, நமது 234 பிரதிநிதிகளை அறிந்து, புரிந்து, தெளிந்து, துணிந்து தேர்ந்தெடுக்கும் காலமிது!

எக்கெட்டும் போகட்டும்என்று ஏனோதானோவாக நீங்களும் நானும் இருப்பதென்பது, ஒரு சுய அவமரியாதை என்பதைத் தவிர, பிறகு வேறென்ன? 18 வயது அடைந்த அனைவருக்கும்வாக்குரிமைஎன்பதைப் போராடாமல் நாம் பெற்றிருப்பதால், அதன் முழுமையான பெருமையினை உணராது இருக்கின்றோமோ... என்ற ஐயப்பாடு இல்லாமல் இல்லை!”

ஜெரி

news
தமிழக செய்திகள்
நாஞ்சில் நாட்டில் ‘நம் வாழ்வு’ சிறப்பு வாசகர் வட்டம் (இதழியல் இன்பவனத்தில் இரு பெரும் விழாக்கள்!)

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையின் சமூக, அர சியல் மற்றும் ஆன்மிகக் குரலாக ஐம்பது ஆண்டுகளைக் கடந்து பீடுநடை போடும்நம் வாழ்வுவார இதழின் பொன்விழா சிறப்பு வாசகர் வட்டக் கூட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறு மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களில் சனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. நாஞ்சில் மண்ணின் இலக்கியச் செழுமைக்குச் சான்றாக அமைந்த இவ்விழாக்களில், நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள், எழுத்தாளர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோட்டாறு மறைமாவட்டம், ஆயர் இல்ல அருள்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆயர் மேதகு முனைவர் நசரேன் சூசை மற்றும் குழித்துறை மறைமாவட்டம், முளகு மூடு, ஜான்பால் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ஆயர் மேதகு முனைவர் ஆல்பர்ட் G.A. அனஸ்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். கோட் டாறில், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் திருமதி. மேரி பிரின்ஸி லதா அவர்களும், குழித்துறையில் பாளை, தூய சவேரியார் கல்லூரி உதவிப் பேராசிரியை திருமதி . விமலா அவர்களும் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆயர் நசரேன் சூசை அவர்கள், “வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனின் சிந்தனையை விரிவுபடுத்தும்; கத்தோலிக்கத் திரு அவையின் செய்திகளையும் நற்பண்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கநம் வாழ்வுஇதழும் இதுபோன்ற வாசகர் வட்டங்களும் பெரும் பங்காற்றுகின்றனஎன்று பாராட்டினார். ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் பேசுகையில், “என்னை ஓர் எழுத்தாளனாக அறிமுகம் செய்த பெருமை நம் வாழ்வுக்கு உண்டுஎனப் பாராட்டியதோடு, “இவ்விதழ் சிறுபான்மையினரின் நம்பிக்கைத் தீபமாகத் திகழ்கிறதுஎனவும் கூறினார்.

இலக்கியப் பணிக்கு வலுசேர்க்கும் விதமாக இரண்டு முக்கிய நூல்கள் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அருள்முனைவர் இராஜசேகரன் மற்றும் அருள்பணி. ஞானசேகரன் ஆகியோர் தொகுத்துள்ளஇதோ - மரம், செம்மறி, ஒளிஎனும் தவக்காலச் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு நூலும், முனைவர் மரிய தெரசா அவர்கள் எழுதியமனம் கொண்ட ஆற்றல்எனும் மாணவர் முன்னேற்றத்திற்கான நூலும் வெளியிடப்பட்டன.

விழாவின் சிறப்பு நிகழ்வாக, கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த திரு. பிலிப் மற்றும் திருமதி. இம்மாகுலேட் பிலிப், திரு. குறும்பனை பெர்லின், திரு. ஆண்டனி கிளமெண்ட் மற்றும் குழித்துறை மறைமாவட்டத்தைச் சார்ந்த திரு. S.M. செபாஸ்டின், திரு. ஓலக்கோடு ஜான், திரு. குமரி ஆதவன் ஆகிய ஆறு பேருக்கும்நம் வாழ்வுவிருதும் பாராட்டும் வழங்கப்பட்டன. அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பலரும்நம் வாழ்வுஇதழின் பயன்பாடு பற்றியும், தற்போது மிகச் சிறப்பாக வெளிவருகிறது பற்றியும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இறுதியில், துணை ஆசிரியர் அருள்பணி. ஜெ. ஞானசேகரன் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். தமிழகத்தின் தென் எல்லையில் நடைபெற்ற இந்த விழாக்கள் நாஞ்சில் மண்ணின் இதழியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தன.