news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (18.01.2026)

அருள்பணியாளர் நம்பகத்தன்மை, தொடர்ச்சியான உருவாக்கம், ஒன்றிப்புப் பணியுடன் திரு அவையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.”

டிச. 22, அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி குறித்த திருமடல் 

இரக்கம், ஒன்றிப்பு, மகிழ்ச்சி மற்றும் நற்செய்தி அறிவிப்பில் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன், அதிகாரத்துவமின்றி உயிரோட்டமாய் திரு அவை செயல்படவேண்டும்.”

டிச. 22, உரோமைச் தலைமைச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் சந்திப்பு

கிறித்தவ நற்பண்புகளை நம் இதயங்களில் கொண்டு, இருளைக் குறித்து அச்சம் கொள்ளாமல் ஒரு புதிய நாளின் விடியலைச் சந்திக்க நாம் புறப்படுவோம்.”

டிச. 25, கிறிஸ்து பிறப்பு நள்ளிரவுத் திருப்பலி மறையுரை

கிறிஸ்துவின் பிறப்பு அமைதியின் பிறப்பு; இரக்கம், மன்னிப்பு, ஒற்றுமை வழியாக உலகிற்கு உண்மையான சமாதானம் அருளும் மீட்பரின் அழைப்பாகும்.”

டிச. 25, தனது முதல்ஊர்பி எத் ஓர்பிஎன்ற சிறப்புச் செய்தி

புனித ஸ்தேவானின் சான்று வாழ்வு போல, துன்பத்திலும் ஒளியாம் கிறிஸ்துவைத் தேர்ந்து, அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவத்தில் கடவுளின் பிள்ளைகளாய் வாழ்வோம்.”

டிச. 26, சிறப்பு மூவேளை இறைவேண்டல் உரை

திருக்குடும்பத்தின் சான்று போல், நம் குடும்பங்களும் அன்பு, பணிவு, கீழ்ப்படிதல், செபம் வழியாக நற்செய்தியின்படி வழிநடப்போம்.”

டிச. 28, மூவேளை இறைவேண்டல் உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (11.01.2026)

பாதிக்கப்பட்டோர் விரைவில் நலம் பெறவும், உயிரிழந்தோர் அமைதி அடையவும் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம்.”

டிச. 15, அர்த்தமற்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கடவுளின் அன்பின் கொடை, அவர் சிறியவர்களுக்கும் வலுவற்றவர்களுக்கும் மிக நெருக்கமானவர்.”

டிச. 16, திருத்தந்தை கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சியில் உரை

இயேசுவின் உயிர்த்தெழுதல் மனித இதயத்திற்கு உண்மையான ஓய்வு, கடவுளின் அன்பில் மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்தும் நம்பிக்கையை அளிக்கிறது.”

டிச. 17, புதன் மறைக்கல்வி உரை

உண்மையான அமைதி வன்முறையற்றது. ஆயுதக் குறைப்பு உரையாடல், நம்பிக்கை வழியாகத் தனிப்பட்டும் சமூகமாகவும் வளர்க்கப்பட வேண்டிய ஓர் உன்னத அழைப்பு!”

டிச. 18, 59-வது உலக அமைதி, நாளுக்காக வழங்கிய செய்தி

இயேசுவின் வரவேற்பையும் புனித வாழ்வையும் நீதியின் அடிப்படையிலான அமைதியையும் அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றவேண்டும்.”

டிச. 19, இத்தாலியக் கத்தோலிக்க இயக்கத்தின் குழந்தைகளுடன் சந்திப்பு

எதிர்நோக்கு மனிதகுலத்திற்கு நிரந்தரத் தேவை; மரியாவின் முன்மாதிரியில், விசுவாசிகளாகிய நாம் கடவுளின் அன்பு, அமைதி மற்றும் புதுவாழ்வை நம் செயல்களில் வெளிப்படுத்தவேண்டும்.”

டிச. 20, திருப்பயணிகளுக்கு வழங்கிய யூபிலி மறைக்கல்வி உரை

புனித யோசேப்பின் இரக்கம், துணிவு, நம்பிக்கை, கீழ்ப்படிதல் முன்மாதிரியைப் பின்பற்றி விசுவாசிகள் மன்னிப்பு, ஆதரவு, இறை உடனிருப்பை அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தவேண்டும்.”

டிச. 21, மூவேளை இறைவேண்டல் உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (04.01.2026)

இளைஞர்கள் அன்பு, தியாகம், தொண்டு, நம்பிக்கையில் வேரூன்றி கிறிஸ்துவில் அமைதியைக் கட்டி உலகிற்கு ஒளியாக விளங்கவேண்டும்.”

டிச. 1, லெபனோனின் பிகெர்கேவில் இளையோர் சந்திப்பு

மருத்துவச் சேவை கிறிஸ்துவின் இரக்கத்தின் சாட்சி; ஏழைகள், நோயாளரை அன்புடன் கவனிப்பது, மனிதகுலத்திற்கு நம்பிக்கையையும் உயிரையும் அளிக்கிறது.”

டிச. 2, பெய்ரூத்தில் பிரான்சிஸ்கன் திருச்சிலுவை சபையில் அருளுரை

அறிவியல் ஆய்வு கிறிஸ்துவின் பராமரிப்பால் ஊக்கமளித்து, ஏழைகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் முன்னிலைப்படுத்தி, மனிதகுல நலனுக்காகச் சேவையாற்றவேண்டும்.”

டிச. 4, இதயநோய் நிபுணர்கள் குழு சந்திப்பு

செயற்கை நுண்ணறிவு மனித மாண்பையும் பொதுநலனையும் முன்னிலைப்படுத்தி, விமர்சனச் சிந்தனை, பொறுப்பு மற்றும் உறவுகளை வளர்க்கும் கருவியாக இருக்கவேண்டும்.”

டிச. 05, ‘செயற்கை நுண்ணறிவு புவியின் பராமரிப்புமாநாட்டில் பங்கேற்பு

திருவருகைக் காலத்தில் தன்னலமற்ற சேவையால் இறையாட்சியில் பங்கேற்று, எதிர்நோக்கின் நற்பண்பை வாழ்வில் வளர்க்கவேண்டும்.”

டிச. 6, திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு யூபிலி விழா மறைக்கல்வி உரை

நம்பிக்கையாளர்களின் மனந்திரும்புதல், ஆன்மிகத் தயார்நிலை கொண்டு இயேசுவைப் பின்பற்றி, ஒளியாக உலகில் வழிகாட்ட வேண்டும்.”

டிச. 7, மூவேளை இறைவேண்டல் உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (21.12.2025)

அகுஸ்தினாரின் தழுவிய ஊக்கம், நட்பு, சேவை, மரியன்னை ஆன்மிகத்துடன், ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டோருக்குப் பணியாற்றவேண்டும்.”

நவ. 24, மரியாவின் பணியாளர் சபை 215-வது பொதுப்பேரவை சந்திப்பு

யூபிலி ஆண்டில் கடவுள்மீது நம்பிக்கை வைத்து, இரைச்சலிலிருந்து விலகி நம்பிக்கையை ஆழப்படுத்தி உண்மையான அமைதியைப் பெறுவோம்.”

நவ. 25, லாத்வியாவின் திருப்பயணிகள் பிரதிநிதிகள் சந்திப்பு

உயிர்த்தெழுதலின் ஒளியில் வாழ்க்கையின் அர்த்தத்தை நம்பிக்கையுடன் வாழ்ந்து மனிதகுலம், நீதி, அன்பு, அமைதி ஆகியவற்றை உருவாக்குவோம்.”

நவ. 26, புதன் மறைக்கல்வி உரை

கலாச்சாரஆன்மிகப் பாரம்பரியத்தோடு இணைந்த ஒன்றிப்பு, உரையாடல், மனித மரியாதை, அமைதி, குடும்பம் மற்றும் பொதுநலத்தைக் காப்போம்.”

நவ. 27, துருக்கியின் தலைநகர் அங்காராவில் பிரதிநிதிகளுக்கு அருளுரை

கிறித்தவ ஒன்றிப்பில், படைப்புப் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான தொழில்நுட்பப் பயன்பாட் டில் கூட்டுச் செயற்பாட்டைக் கொண்டிருப்போம்.”

நவ. 30, இஸ்தான்புல்லில் உள்ள புனித ஜார்ஜ் பேராலயத்தில் அருளுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (14.12.2025)

இரண்டாம் வத்திக்கான் சங்கம் வலியுறுத்தியபடி, இறைவார்த்தையை அனைவருக்கும் நாம் கொண்டுசெல்லவேண்டும்.”

நவ. 17, கத்தோலிக்கத் திருவிவிலியக் கூட்டமைப்பினருடன் சந்திப்பு

கிறித்தவ ஆன்மிகம் மனிதனைப் புதுப்பித்து, பூமியைப் பாதுகாக்கும் மாற்றத்திற்கான பொதுவான அழைப்பாகும்.”

நவ. 19, புதன் மறைக்கல்வி உரை

திரு அவையின் புதுப்பித்தல், பொதுப் பங்கேற்பு, பொறுப்புணர்வு, பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு மற்றும் சமூக ஈடுபாட்டில் நாம் இன்னும் முனைப்புடன் செயலாற்றவேண்டும்.”

நவ. 20, இத்தாலிய ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வு உரை

ஒன்றிப்பு, நீதி, பரிவு மற்றும் தூய ஆவியின் வழிகாட்டுதலுடன் பணியைத் தொடர்வோம்.”

நவ. 21, அனைத்துலக காரித்தாஸ் அமைப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு

திருமணத்தில் உண்மை, நீதி, இரக்கம் மூன்றையும் ஒருங்கிணைத்து, ஆன்மாக்களின் மீட்பு மற்றும் குடும்ப ஒன்றிப்பைப் பேணவேண்டும்.”

நவ. 22, திருமண செல்லா நிலை குறித்த சீர்திருத்த 10-வது ஆண்டு நிறைவு

நிசேயா நம்பிக்கையின் இறையியல், ஒன்றிப்பு, மனுவுரு எடுத்தல் மற்றும் செயல்முறை நம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கிறித்தவ ஒன்றிப்பில் இணைவோம்.”

நவ. 23, முதல் நிசேயா திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவு, நம்பிக்கையின் ஒன்றிப்பில்திருத்தூது மடல் வெளியீடு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (07.12.2025)

செயற்கை நுண்ணறிவால் மருத்துவ நன்மைகள் இருந்தாலும், மனித மாண்பைக் காக்க பொறுப்புடன் அவற்றைப் பயன்படுத்தி, இரக்கம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை முன்னிறுத்த வேண்டும்.”

நவ. 10, ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்மாநாடு செய்தி

திரு அவை ஆன்மிக-கல்வி மையமாக, மனிதமும் தெய்வீகமும் இணைந்த சேவையாகக் கிறிஸ்துவில் மையமாக வேண்டும்.”

நவ. 11, உரோமையின் புனித ஆன்செல்ம் கோவில் நேர்ந்தளிப்பின் 125-வது ஆண்டு நிறைவுச் சிறப்புத் திருப்பலி

சகோதரத்துவம் மற்றும் உடன்பிறந்த உறவை இயேசு, அன்பின் அடிப்படையில் உலகளாவிய மனிதநேயமாக்கினார்.”

நவ. 12, புதன் மறைக்கல்வி உரை

மறையுண்மை, கடவுளுடன் ஆழமான ஒன்றிப்பை வெளிப்படுத்தும் ஆன்மிகக் கொடை!”

நவ. 13, இறை ஒன்றிப்பு நெறி மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு உரை

அமைதி, நீதி, மனித மரியாதை ஆகியவற்றை வலியுறுத்தும் கல்விச்சிறப்பைத் தொடரவேண்டும்.”

நவ. 14, பாப்பிறை இலாத்தரன் பல்கலைக்கழகத்தின் 253-வது கல்வியாண்டு துவக்க உரை

திரைப்படம் அழகு மற்றும் உண்மையை வெளிப்படுத்தி, சமூக மனிதநேயத்தை உயர்த்தும் ஆன்மிகக் கலையாக உலகச் சவால்களைப் பிரதிபலிக்கவேண்டும்.”

நவ. 15, உலகத் திரைப்படத் துறையின் நிபுணர்கள் குழுச் சந்திப்பு

வறுமை தார்மீகச் சவாலாகும்; ஏழைகளுக்கு நீதி, கருணை, சேவை வழங்கி இறையாட்சியை வாழ்வில் பிரதிபலிக்கவேண்டும்.”

நவ. 16, உலக வறியோர் நாள் திருப்பலி மறையுரை