news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (26.04.2026)

அமைதிக்காக ஏங்கும் இவ்வுலகில் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கவும், அன்பு மற்றும் மனமாற்றத்தின் தூதர்களாக மாறவும் அழைக்கப்படுகிறோம்.”

ஏப். 12, இறை இரக்க ஞாயிறு வாழ்த்தொலிச் செய்தி

நம்பிக்கையாளர்கள் வழிபாட்டுமுறை மற்றும் ஆன்மிகப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும், அமைதியை மேம்படுத்தவும், அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், பொதுநிலையினர் நம்பிக்கையில் உறுதிப்படவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.”

ஏப்.10, கல்தேய ஆயர்களின் சந்திப்பு

பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரும் நல்லெண்ணமே, உலகம் முழுவதும் நிலவும் பிற மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு கருவியாக மாறக்கூடும்.”

ஏப்.8. புதன் பொது மறைக்கல்வி உரை

கண்களை உயர்த்திப் பாருங்கள்என்ற  விருதுவாக்கு, கவலைகளை மறந்து நம் பார்வையை உயர்த்தவும், மேலும் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டறியவும், மற்றவர்களிடம் திறந்த மனத்தோடு பழகவும் நம்மைத் தூண்டுகிறது.”

ஏப்.7, ஸ்பெயின் நாட்டுத் திருத்தூது இலட்சினை வெளியீடு

ஆட்சி செலுத்தும் மனப்பான்மையைக் கொண்டிருக்காமல், மனம் திறந்த பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியும்.”

ஏப். 6, பிரான்ஸ் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (19.04.2026)

இறைவேண்டல் மற்றும் சேவை ஆகிய ஆன்மிகப் பணிகளில் விடாமுயற்சியுடன் ஈடுபடுவோம்.”

மார்ச் 30, பெனடிக்டைன் துறவிகள் சந்திப்பு

அருள்பணியாளர்களின் சவால்களைப் புரிந்து, அவர்களுக்கு இறைவேண்டல் மற்றும் பரிவன்புடன் ஆதரவளிப்போம்.”

மார்ச் 31, ஏப்ரல் மாதத்திற்கான இறைவேண்டல் கருத்து

திருமுழுக்குப் பெற்ற பொதுநிலையினர் கிறிஸ்துவின் பணிகளில் பங்கேற்று நற்செய்திக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும்.”

ஏப் 01, புதன் மறைக்கல்வி உரை

பாஸ்கா திருவிழிப்பில் கிறிஸ்துவின் உயிர்ப்பை உன்னத ஒளியாகக் கொண்டாடி, அமைதியையும் சமூக ஒன்றிப்பையும் வளர்க்க முற்படுவோம்.”

ஏப் 04, உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

கிறிஸ்துவின் உயிர்ப்பு அளிக்கும் புதிய நம்பிக்கையையும் ஒளியையும் கொண்டு, உலக இருளைப் போக்கி, வாழ்வின் சாட்சிகளாகத் திகழ்வோம்.”

ஏப் 05, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா மறையுரை

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் உண்மையை நற்செய்தியாகப் பறைசாற்றி, போலிச் செய்திகளை வென்று நம்பிக்கையின் சாட்சிகளாவோம்.”

ஏப் 06, நண்பகல்அல்லேலூயாவாழ்த்தொலிச் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (12.04.2026)

விமானங்கள் போருக்கானதாக அன்றி, எப்போதும் அமைதியைச் சுமந்து செல்பவையாக மட்டுமே இருக்கவேண்டும்.”

மார்ச் 23, லுஃப்தான்சா மற்றும் ITA ஊழியர்கள் சந்திப்பு

கிறிஸ்துவால் நிறுவப்பட்ட திரு அவையின் படிநிலை அமைப்பு, உலகிற்கு மீட்பையும் புனிதத்தையும் வழங்கும் ஓர் இறைப் பணியாகும்.”

மார்ச் 25, புதன் மறைக்கல்வி உரை

உடல் உறுப்பு தானம் வணிகமயமாக்கப்படாமல், தார்மிக விழுமியங்களுடன் கூடிய தன்னார்வ அடிப்படையில் அமையவேண்டும்.”

மார்ச் 26, தேசிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு

சமூக நீதி மற்றும் பிறரன்புப் பணிகளில் இறைமக்கள் அனைவரும் முழுமையாக ஈடுபடவேண்டும்.”

மார்ச் 28, மொனாக்கோ அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் சந்திப்பு

இயேசுவின் தியாகத்தையும் இறைவனின் இரக்கத்தையும் பின்பற்றி, அதிகார மோகத்தைத் துறந்து நலிந்தோரைப் பாதுகாக்க வேண்டும்.”

மார்ச் 28, மொனாக்கோ, இரண்டாம் லூயிஸ் மைதான மறையுரை

வன்முறையைத் துறந்து, அமைதியின் அரசராகத் திகழும் இயேசுவைப் பின்பற்றி உலகெங்கும் அமைதி நிலவச் செய்யவேண்டும்.”

மார்ச் 29, குருத்து ஞாயிறு திருப்பலி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (05.04.2026)

சிறார் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பண்பாட்டினைத் திரு அவை வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உறுதிப்படுத்தவேண்டும்.”

மார்ச் 16, சிறார் பாதுகாப்பிற்கான பாப்பிறை ஆணைய உரை

அமேசான் சமூகங்களின் கலாச்சாரப் பாதுகாப்பும், நற்செய்தி ஒருங்கிணைப்புமே திரு அவையின் நீடித்த வளர்ச்சி.”

மார்ச் 17, அமேசான் தலத்திரு அவை ஒன்றிப்புச் செய்தி

திருமுழுக்கின் வழியாக இறைமக்கள் அனைவரும் கிறிஸ்துவின் அரசத்துவ, குருத்துவ மற்றும் இறைவாக்குப் பணிகளில் பங்கேற்று, நற்செய்தியின் சாட்சிகளாகத் திகழ்கின்றனர்.”

மார்ச் 18, புதன் மறைக்கல்வி உரை

நலவாழ்வு என்பது ஆடம்பரமல்ல; அது ஓர் அடிப்படை உரிமை; ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, ஒருங்கிணைந்த பராமரிப்பை உறுதிப்படுத்தவேண்டும்.”

மார்ச் 18, ஐரோப்பிய நலவாழ்வு மாநாடு

குடும்பங்களைஇல்லறத் திரு அவையாகமதித்து, நவீன சவால்களுக்கேற்ப அவர்களுக்கு இரக்கத்துடன் வழிகாட்டவேண்டும்.”

மார்ச் 19, புனித வளனார் பெருவிழா செய்தி

சுயநலக் கல்லறைகளிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவின் உயிர்ப்பில் நிலைவாழ்வு எனும் நம்பிக்கையைப் பெற்று வாழவேண்டும்.”

மார்ச் 22, மூவேளைச் செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (29.03.2026)

கிறிஸ்துவின் அன்பால் பிணைக்கப்பட்ட, பன்முகத்தன்மை கொண்ட, உலகளாவிய மீட்பின் நம்பிக்கைச் சமூகமே திரு அவை.”

மார்ச் 11, புதன் மறைக்கல்வி உரை

செவிமடுத்தல் மற்றும் விருந்தோம்பல் வழியாக, இளைஞர்களை மையமாகக் கொண்ட அன்பின் சமூகத்தை உருவாக்குவோம்.”

மார்ச் 12, இத்தாலியின்விருந்தோம்பல் பேராலயஉரை

ஒப்புரவு அருளடையாளம் மூலம் கடவுளோடும் திரு அவையோடும் இணைந்து, அமைதியின் கருவிகளாகத் திகழ்வோம்.”

மார்ச் 13, திருத்தூதுசார் பாவ மன்னிப்பு  அவைப்  பயிற்சி வகுப்பு உரை

கத்தோலிக்கத்தின் வரலாற்றுப் பின்னணியில், நற்செய்தி விழுமியங்களுடன் நலிந்தோருக்குத் தொடர்ந்து தொண்டாற்றுவோம்.”

மார்ச் 13, கத்தோலிக்க நலவாழ்வுச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் சந்திப்பு

நலிந்தோருக்கான சமூக நீதிப் பணிகளைத் தொடர்ந்து கருணையுடன் ஆற்றுவோம்.”

மார்ச் 14, FADICA அமைப்பின் 50-ஆம் ஆண்டு விழா

கிறிஸ்துவின் ஒளியால் வாழ்வை ஒளிரச் செய்து, இறைநம்பிக்கையுடன் உலகிற்குச் சான்று பகர்ந்து அமைதிக்காக உழைப்போம்.”

மார்ச் 15, மூவேளை செப உரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (22.03.2026)

உண்மையின் ஊற்றாக நம்மில் எழும் நற்செய்தியின் வார்த்தை, ஒவ்வொருவரின் கண்களைத் திறக்கவும், அறிவார்ந்த விதத்தில் மதிப்பிடவும்,  சுதந்திரமான மற்றும் பக்குவப்பட்ட மனசாட்சியை உருவாக்கவும் உதவுகிறது.”

மார்ச் 8, உரோம் காணிக்கை அன்னை திருத்தலத் திருப்பலி மறையுரை

இராணுவச் சேவை என்பது இறையருளில் ஊன்றிய ஓர் அழைப்பு. வலுகுறைந்தவர்களைப் பாதுகாக்கவும், அமைதியைப் பேணவும், அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளில் பணியாற்றுவதுமே இந்தச் சேவையின் நோக்கம்.” 

மார்ச் 7, இத்தாலிய இராணுவப் பேராயரகத்தின் நூற்றாண்டு விழாச் செய்தி

நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை நியாயமான, நேர்மையான மற்றும் பொறுப்பான உரையாடல் மூலம் மட்டுமே அடைய முடியும், அழிவையும் துன்பத்தையும் கொண்டுவரும் ஆயுதங்கள் மூலம் அல்ல.”

மார்ச் 3,  காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செய்தி

இறையியல் என்பது வல்லுநர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; மாறாக, திரு அவையின் பணிக்கும், நம்பிக்கையில் வேரூன்றிய கலாச்சார, சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் அடிப்படையானது.”

மார்ச் 02,  இறையியல் நிறுவன குழுமத்தினருக்கு வழங்கிய உரை

மனிதகுலத்தையும் வாழ்க்கையையும் சிதைக்கும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு, நாம் தொடர்ந்து நற்செய்தி அறிவிப்பின் சான்றுகளாக இருப்போம். அதுவே மாற்றத்தைத் தருகிறது.”

மார்ச் 01,  குவார்த்திஜோலோ பங்குத்தள மறையுரை