news
ஆன்மிகம்
மாமன்ற இறுதி ஆவணத்தின் பார்வையில் கூட்டொருங்கியக்கத் திரு அவையில் பெண்களின் பங்களிப்பு

இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே, அக்டோபர் 2022-துவங்கி அக்டோபர் 2025-வரை நாம் இணைந்து பயணித்த ஒருங்கியக்கப் பயணம் நமக்கு உணர்த்திய தலையாயப் பாடம் என்ன? எதிர் வரும் மூன்றாவது ஆயிரமாண்டின் திரு அவையின் வாழ்வியல், அடையாளம், மற்றும் மறைப்பணி அனைத்திற்கும் அடித்தளமாக அமைவது கூட்டு ஒருங்கியக்கமே. ஆனால், ஒருங்கியக்கத் திரு அவை என்றால் என்ன? இறைவன் தம் திரு அவைக்கு விரும்பும் ஒருங்கியக்கத் திரு அவை Synodal Church- விவரிப்பதற்கு ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி அறிக்கை ஓர் அழகான உருவகத்தைப் பயன்படுத்துகிறது. அறிக்கையின் பகுதி 1 எண் 42 குறிப்பிடுகிறது, ஒருங்கியக்கத் திரு அவை என்பது பல்வேறு இசைக்கலைஞர்கள் ஒன்றாக இணைந்து படைக்கும் இன்னிசையைப் போன்றது. வெவ்வேறு தனித்தன்மைகளைக் கொண்ட இசைக்கருவிகளும், வேறுபட்ட குரல் வளங்களைக் கொண்ட இசைக் கலைஞர்களும் தங்கள் தனித்தன்மை மாறாமல் ஒன்றாக இணைந்து செவிக்கு இனிமையான இசையைப் படைக்கின்றனர்.

அதுபோலவே, பல்வேறு இயல்புகள், கருத்தியல்கள், தனித்துவங்கள், வாழ்வுமுறைகளைக் கொண்டோர் இணைந்து உருவாக்குவதே ஒருங்கியக்கத் திரு அவை. A synodal Church is like an orchestra, where women are not just accompanists but lead as conductors, composers, and first violinists in God’s symphony of grace. தனித் தன்மையும் ஒற்றுமையும் இணைந்த இந்த ஒருங்கியக்கத் திரு அவையின் கனவு நிதர்சனமாக வேண்டுமெனில் திரு அவையில் ஒரு பாதியாகத் திகழும் பெண்களின் குரலும் பங்களிப்பும் திரு அவையின் வாழ்வியலில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு ஆயர்கள் பேரவையின் கூட்டம் இந்த முக்கியமான காலத்தேவையை முன்னிறுத்துகின்றது.

பெண்களின் பங்களிப்பைக் குறித்த சிந்தனைக்கு ஆயர்களின் மாமன்றத்தின் மிகச்சிறந்த பங்களிப்பு எது என்ற கேள்வியோடு தொடங்க விரும்புகின்றேன். The Synod’s final document stands out for its honest acknowledgment of the Church’s past failure to recognize women’s dignity and significance. பெண்களின் மகத்துவத்தையும் பங்களிப்பையும் தகுந்த முறையில் திரு அவை ஊக்குவிக்கவில்லை என்ற ஒப்புதலே என்னைப் பொறுத்தவரை இந்த ஆவணத்தின் மிகச்சிறந்த பங்களிப்பு. ஆவணத்தின் முன்னுரை எண்கள் 6 மற்றும் 16 ஒப்புக்கொள்வதுபோல, பெண்களின் சவால்களையும், அவர்களது கனவுகளையும் முன்னிறுத்த நாம் தவறியிருக்கின்றோம்.

The document acknowledges the Church’s ‘sinful realities’; ignoring women’s charisms, limiting their roles, and the widespread pain of exclusion. பெண்கள் நூற்றாண்டுகளாக அனுபவிக்கும் புறக்கணிப்பின் வலி, திரு அவையில் தலைமைத்துவம் மற்றும் உரிமைக்கான தேடல், பெண்களது திறமைகள் கொடைகள் மற்றும் இறையழைத்தலின் மாண்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவது ஒருங்கியக்கத் திரு அவையின் தலையாயக் கடமை என்கிறது ஆவணம். இந்தக் கடமையை நிறைவேற்ற நமக்குத் தேவைப்படுவது ஒருங்கியக்க மனமாற்றம். The synodal journey requires conversion (Introduction, 6). We must dismantle systems that silence women’s voices and diminish their gifts.

The Synod moves beyond words, proposing a synodal feminist approach. மன்றத்தின் ஆவணம் ஒருங்கியக்கப் பெண்ணியல் சிந்தனையை முன்வைக்கின்றது. இன்று பெண்ணியல் சிந்தனை என்பது கத்தோலிக்க நம்பிக்கைக்கு முரணானது என்னும் பொதுவான விமர்சனத்தை நாம் காண்கின்றோம். குறிப்பாக, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில், பெண்ணியம் திரு அவையின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்று எச்சரிக்கும் குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இந்த நிலைமை? பெண்ணியல் சிந்தனை என்பது உரிமைக்கான போராட்டம் என்ற உண்மையை மறந்து வெறும் கருத்தியல் மற்றும் அரசியல் சார்ந்த விவாதப் பொருளாகச் சுருங்கிவிட்டதே இதற்குக் காரணம். ஆயர்களின் மாமன்றம் முன்னிறுத்தும் பெண்ணியல் சிந்தனை என்பது சித்தாந்தங்களை மையமாகக் கொண்டது அல்ல; மாறாக, நமது நம்பிக்கையிலும் மறைப்பணியிலும் வேரூன்றிய தேடல்.

The Synod’s vision for women rejects secular ideologies, grounding its feminist approach in faith and pastoral urgency. மாமன்றம் முன்னிறுத்தும் பெண்ணியல் சிந்தனை நமது ஒருங்கியக்கத் திரு அவையின் கனவிற்குத் தொடுக்கும் கேள்விகள் இவை: கிறிஸ்துவின் உடலாகிய திரு அவையில் பெண்களின் விடுதலை, மாண்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை நடைமுறையில் வளர்ப்பது எவ்வாறு? இன்று திரு அவையில் பெண்கள் அனுபவிக்கும் சவால்கள், அநீதி மற்றும் புறக்கணிப்புக் கட்டமைப்புகளை மாற்றுவது எவ்வாறு? திரு அவையிலும் சமூகத்திலும் பெண்கள் தங்கள் சுயமரியாதையை, உரிமைகளை, பங்களிப்பைத் தாங்களாகவே உறுதிப்படுத்துவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்கு நாம் பதில் தேடப்போவது எங்கு? கருத்தியல் மோதல்களில் அல்ல; மாறாக, நற்செய்தியின் வழிகாட்டுதலில். The vision of a synodal inclusive church is not rooted in external ideologies but the Gospel.

எனது கருத்தைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். திரு அவை தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. இன்றைய பெண்ணியல் சார்ந்த கருத்துச் சிந்தனைக்கு நமது செவிகளை மூடிக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. மாறாக, நமது நம்பிக்கையிலும் வரலாற்றிலும் களப்பணியிலும் வேரூன்றிய ஒரு மாற்றுப் பெண்ணியல் சிந்தனையை இந்தச் சமூகத்திற்கு முன்வைப்பது நமது கடமை என்பதே நமது வாதம். இன்றைக்குப் பெண்ணியம் என்ற போர்வையில் கருச்சிதைவை நியாயமாக்கி, பெண்களின் தனித்துவத்தைப் புறக்கணித்து, குடும்பத்தின் மாண்பை மறுதலித்து, ஆண்-பெண் உறவை அதிகாரத்திற்கான போராட்டமாக (Power-struggle) சித்தரிக்கும் சிந்தனைகளுக்கு மாற்றாக நாம் வழங்கப்போகும் ஒருங்கியக்கத் திரு அவையின் மாற்றுப் பெண்ணியல் சிந்தனை என்ன? அதற்கான அடித்தளங்கள் என்ன? ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி அறிக்கை சில கோட்பாடுகளை அடித்தளங்களாக முன்வைக்கின்றது:

1. படைப்பின் அடிப்படையிலான கிறித்தவ மானுடவியல் (Christian Anthropology based on creation): மாமன்றத்தின் இறுதி அறிக்கைப் பகுதி 2 எண் 52 வலியுறுத்துவதுபோல, ஆண்-பெண் சமத்துவத்தின் அடிப்படைத் தொடக்கநூல் 1:27 எடுத்தியம்பும் படைப்பின் தன்மை: “கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். ஆணும்-பெண் ணுமாக அவர்களைப் படைத்தார். ஆணும்-பெண்ணும் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டதால் இருவரும் சம மாண்பிற்கும் உரிமைக்கும் உரியவர்கள். The Final Document affirms that women are not an “add-on” but integral to the Synodal Church, reflecting a complementary, enriching Christian vision. படைப்பில் பார்வையில், பெண்கள் வெறும்கூடுதல் சேர்க்கைகள்அல்ல; அவர்கள் திரு அவையின் அடிப்படையான சாரத்திற்கே இன்றியமையாதவர்கள்.

2. திருமுழுக்கின் சமத்துவ அழைப்பு (Women’s equality as a Baptismal reality) இறுதி அறிக்கைப் பகுதி 2 எண் 60 கூறுகின்றதுபோல, “திருமுழுக்கின் மூலம், கடவுளின் மக்களாகிய பெண்களும் ஆண்களும் சம மாண்பினைப் பெற்றுள்ளனர்.” இந்தச் சம மாண்பு என்பது பெண்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல; மாறாக, இறைத்திட்டத்தின் வெளிப்பாடு. ஆவணம் கலாத்தியர் 3:27-28 வசனங்களை நினைவுபடுத்துகின்றது: “கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.” The sacrament of baptism endows all of us with the same diginity of Christ.

3. பெண் உரிமைக்கான குரல் ஒட்டுமொத்தத் திரு அவையின் குரல் (Synodal Feminism is deeply Ecclesial): மாமன்றத்தின் அறிக்கைப் பகுதி 2, எண் 60 குறிப்பிடுகின்றதுபோல, இன்று திரு அவையில் பெண்களின் ஆளுமைத்திறன் நமது பங்குத்தளங்களில், பள்ளிகளில், மருத்துவமனைகளில் மற்றும் சமூகப்பணியில் பெறும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. நமது ஆலய நிகழ்வுகளில் பெரிதும் பங்கேற்பது பெண்களே. குடும்பங்களில் நம்பிக்கையின் முதல் சாட்சிகளாகத் திகழ்வது நமது தாய்மார்களே. என்றாலும், அவர்களது உரிமைக்கும் மாண்புக்கான போராட்டம் ஏனோ பெண்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினையாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதை ஆவணம் சுட்டிக்காட்டுகின்றது.

The Final Document affirms that women\'s inclusion is not a separate issue, but vital to the good of the whole People of God. பெண்கள் வளர்ச்சியடையும்போது, திரு அவையும் முழுமையாக வளர்ச்சியடைகின்றது. பெண்களின் புறக்கணிப்பும் மறுதலிப்பும் நம் அனைவரையும் பலவீனப்படுத்துகிறது. Marginalizing women weakens the Church and dims Christ’s presence. Their leadership enriches discernment and calls for reform. As the document says, “What comes from the Holy Spirit cannot be stopped.”

The Witness of the synod Experience: 2022 முதல் 2025 வரை நாம் மேற்கொண்ட ஒருங்கியக்கப் பயணம் பெண்களின் பங்களிப்பின் சிறப்பையும் மகத்துவத்தையும் நமக்கு நினைவுபடுத்தியிருக்கின்றது. வரலாற்றில் முதன்முறையாக, ஆயர்கள் மாமன்றத்தின் பொதுக்குழுவில், முழு உறுப்பினர்களாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது (எண் 6b). இது வெறும் அடையாளப் பங்கேற்பு அல்ல; ஒட்டுமொத்தத் திரு அவையின் வாழ்வியலில் பெண்கள் இன்றியமையாதப் பங்கை வகுப்பவர்கள் என்பதை அங்கீகரிக்கும் உறுதியான நடவடிக்கையாக இது அமைந்தது. அவர்களின் குரல்கள், அனுபவங்கள் மற்றும் அறிவுச்செழுமை மாமன்றத்தின் உரையாடல்களுக்கும், மாமன்றத்தின் இறுதி ஆவணத்திற்கும் பங்களித்தது. சகோதரி நத்தாலி பெக்கார்ட் (XMCJ) அவர்களை ஆயர்கள் மாமன்றத்தின் துணைச் செயலராக நியமித்தது மற்றுமொரு வலுவான அடையாளமாக இருந்தது.

ஆவணம் மாமன்றத்தின் முடிவை அல்ல; மாறாக, ஒரு புதிய பயணத்தின் தொடக்கத்தை வரையறுக்கின்றது. இந்தத் தொடக்கம் நம்மை ஒருங்கிணைந்த ஆய்ந்து அறியும் தேடலுக்கும், ஆக்கப்பூர்வமான செயலாக்கத்திற்கும் அழைக்கின்றது. எதிர்வரும் ஒருங்கியக்கப் பயணத்தில் பெண்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட மாமன்றத்தின் இறுதி ஆவணம் உணர்த்தும் அதன் வழிமுறைகளைப் பட்டியலிட விரும்புகின்றேன்.

1. பகுதி 2, எண் 6 - திரு அவையின் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (Implement Canon Law): பெண்களின் ஆளுமைக்கான தற்போதைய விதிகளை முழுமையாகப் பயன்படுத்துதல் (.கா: diocesan curia, pastoral councils, finance committees).

2. பகுதி 2, எண் 6 - உள்ளடக்க மொழியைப் பயன்படுத்துதல் Inclusive language: மறையுரை, மறைக்கல்வி, மறைபரப்புப் போதனை மற்றும் திரு அவையின் ஆவணங்களில் பெண்களின் பங்களிப்புகளை மையப்படுத்துதல். பெண் புனிதர்கள், இறையியலாளர்கள், சிந்தனையாளர்கள், அருளாளர்கள் மற்றும் மறையாளர்களின் பங்களிப்பை விவரித்தல்.

3. பகுதி 2, எண் 76 - புதிய மறைப்பணிகளைக் கண்டறிதல் Expand ministries: பொதுநிலையினருக்குரிய மறைப்பணியின் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து, செவிமடுத்து வழிநடத்தும் மறைப்பணிக்குப் பெண்களை நியமித்தல். Discern new forms of lay ministry, including the proposal for a “ministry of listening and accompaniment

4. பகுதி 2, எண் 6 - திருத்தொண்டர் பணி பற்றிய ஆய்வு: Continue discernment on women’s access to the diaconate grounded in theological and historical dialogue. பெண்களின் திருத்தொண்டர் பணி குறித்த வரலாற்று மற்றும் இறையியல் சார்ந்த சிந்தனை தொடரவேண்டும். எனினும், பெண்களின் பங்கேற்பைக் குறித்த சிந்தனையைக் குருத்துவத் திருத்தொண்டர் அருள்பொழிவிற்கு நாம் சுருக்கி விடக்கூடாது.

5. பகுதி 5, எண் 148 - கூட்டுப் பங்களிப்பிற்கான உருவாக்கம்: Formation for Co-responsibility: எதிர்கால குருக்கள், திருத்தொண்டர்கள் மற்றும் ஆயர்களின் உருவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்தல்.

In conclusion, my reflections can be summarized in five key phrases:

Repentance starts the journey Acknowledge past neglect to spark true synodal conversionFaith over ideology – Catholic feminism flows from Revelation, not secular agendas. Theology drives action – Rooted in complementarity, baptismal dignity, and prophetic mission. Women’s witness is vital – Their leadership is essential to an inclusive Synodal Church. Act with purpose – Advance women’s roles through structural and cultural reform.

நமது ஒருங்கியக்கப் பயணம் நம்பிக்கையின் விதைகளை விதைத்துள்ளது. பெண்களின் இன்றியமையாத மதிப்பும் அழைப்பும் திரு அவையின் அடையாளத்திற்கும் பணிக்கும் ஆணிவேர் என்பதை உணர்த்தியுள்ளது. The Final Document calls us to a synodal Church where women are central, not marginal—guiding, teaching, advocating, and sustaining the community with their unique gifts. ஒருங்கியக்க இன்னிசையில் பெண்களின் குரல்களும் இனிமை சேர்க்கட்டும்.

news
ஆன்மிகம்
புனித நீர் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 19)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அருள்பணி:நாம் ஒவ்வொருவருமே பல அடுக்குச் சுரங்கத்தை நம்மில் தாங்கியுள்ளோம். பல்வேறு வகையான புதையல்களும் பொக்கிஷங்களும் நம்முள்ளே புதைந்து கிடக்கின்றன. இத்தகைய புதையல்களை வெளிக்கொணர நாம் முயற்சி எடுக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு, சுற்றியுள்ள உலகையும் வளமிக்கதாக மாற்றுகிறது. இதுவே வாழ்வின் நிறைவையும் மகிழ்வையும் கண்டுகொள்வதற்கான சரியான வழி முறையாகும். இத்தகைய நிலையை அடைவதற்கு ஏராளமான விழிப்புணர்வும் முயற்சிகளும் தேவைப்படுகின்றன. புதையலைக் கண்டுபிடிக்க விழிப்புணர்வும், கண்டுபிடித்த புதையலை வெளிக்கொணர முயற்சியும் தேவைப்படுகின்றன. அருளடையாளங்கள் தங்களுக்கே உரிய முறையில் செயல்பட்டு, நமக்குள் புதைந்திருக்கின்ற பொக்கிஷங்களை வெளிக்கொணர்ந்து, வாழ்வை முழுமையாக வாழ நமக்கு உதவுகின்றன.”

அன்புச்செல்வன்:தந்தையே, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் ஒரு முறை இவ்வாறு கூறினார்: ‘திருமுழுக்கு வழியாக நாம் கடவுளின் புனிதத்திலும் முழுமையிலும் நுழைகின்றோம். எனவே, திருமுழுக்கு வாங்கியவர்கள் மேலோட்டமாகவும் ஏனோதானோவென்றும், அரை குறை மனநிலையோடும் வாழும்போது, தாங்கள் பெற்ற திருமுழுக்கிற்கு முரண்பாடான வாழ்வை வாழ்கிறார்கள்.”

அருள்பணி: திருமுழுக்கு அருளடையாளம் நம் உயர் நிலை ஆற்றல் மையங்களைச் செயல்படுத்துவதன் மூலம், நாம் முழுமையான வாழ்வு வாழ நமக்கு உதவி செய்கிறது என்று கடந்த கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்போது சென்றமுறை அகஸ்டின் கேட்ட கேள்விக்கு நாம் வருவோம். புனித நீரை ஊற்றுவதாலும், புனிதப்படுத்தப்பட்ட எண்ணெயைப் பூசுவதாலும், ஆற்றல் மையங்கள் செயல்படுத்தப்படுமா என்பதே அக்கேள்வி! முதலில் புனித நீர் குறித்து, திருவிவிலியம் கூறுவதை நாம் சிந்திக்கலாம்.”

மார்த்தா:தந்தையே, எனக்குத் தெரிந்தவரை நீரானது நம்மை உடல் ரீதியாக மட்டுமல்ல, ஆன்ம ரீதியாகவும் தூய்மைப்படுத்த வல்லது என்பதைத் திருவிவிலியம் எடுத்துரைக்கிறது: ‘நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன் (எசே 36: 26:27) என்றும், ‘என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும் (திபா 51:2) என்றும், ‘ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன் (திபா 51:7) என்றும் திருவிவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். இந்த வசனங்கள் கடவுளுக்கும் நமக்கும் இடையில் தடையாக வருகின்றவற்றை புனித நீர் கழுவ வல்லது என்ற உண்மையை எடுத்துரைக்கின்றன.”

அருள்பணி:நம்பிக்கையோடு பயன்படுத்தப்படுகின்றபோது நீர் நம் புறத்தை மட்டுமல்ல, நம் அகத்தையும் கழுவ வல்லது. காரணம், அதன்மீது தூய ஆவியானவர் அசைவாடினார் (தொநூ 1:2, எசா 44:3). மேலும், தண்ணீர் நம் அகத்தைத் தூய்மைப்படுத்தவல்லது என்பதை எண்ணிக்கை நூல் 19:2-20 பகுதியிலும் நாம் வாசிக்கிறோம். புனித அவிலா தெரசா பல்வேறு விதமான எதிர்மறைச் சக்திகளை எதிர்கொள்ள புனித நீரைப் பயன்படுத்தும்படி தன் சபைச் சகோதரிகளுக்கும் மற்றவர்களுக்கும் ஆலோசனை கூறியிருக்கிறார்.”

அன்புச் செல்வன்: சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் புகழ்பெற்ற பேராயராக விளங்கியவர் புல்டன் ஷீன். தொலைத்தொடர்புக் கருவிகளை நற்செய்தி அறிவிக்கின்ற பணிக்காக அதிகம் பயன்படுத்தியவர். அவர் வாழ்ந்தபோது தொலைக்காட்சிப் பெட்டி இன்னும் எல்லாரையும் சென்றடையவில்லை. ஆனால், வீடுகளில் வானொலிப் பெட்டி இருந்தது. வானொலி வழியாக இவர் ஆற்றிய நற்செய்திப்பணி ஏராளமான உள்ளங்களைக் கடவுளிடம் கொண்டு வந்தது. இத்தகைய புகழ்பெற்ற பேராயர் திருமுழுக்கில் பயன்படுத்தப்படும் புனித நீர் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘சிறிது நீரை ஒரு குழந்தையின் உச்சந்தலையில் ஊற்றுவதால் என்ன நன்மை நடந்துவிடப் போகிறது?’ என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம். ஒரு கொதிகலனில் இருக்கிற தண்ணீர் சாதாரண நிலையில் ஆற்றல் இல்லாததுதான்! ஆனால், அது சூடேற்றப்பட்டு நீராவியாக மாற்றப்படும்போது, அது தொடர்வண்டிகள் நாடுவிட்டு நாடு செல்ல உதவுகின்றது; கப்பல்கள் கண்டம் விட்டுக் கண்டம் பயணிக்கக் காரணமாக இருக்கிறது. அதேபோல தண்ணீர் சாதாரண நிலையில் ஒன்றுமில்லாததுதான். ஆனால், தூய ஆவியால் நிரப்பப்படும்போது, அது ஒரு சாதாரண மனித உயிரைக் கடவுளின் பிள்ளையாகவே மாற்றவல்லது.”

அகஸ்டின்:என்ன அற்புதமான உதாரணம்!”

அருள்பணி:புனித நீரின் ஆற்றல் என்ன என்பது குறித்து மேற்கண்ட செய்திகள் ஆன்மிகம் தொடர்புடையவை. இவை ஒருபுறம் இருக்க, புனிதப்படுத்தப்பட்ட நீரின் தன்மை என்ன என்பதை ஓர் அறிவியல் ஆய்வே நமக்கு எடுத்துரைக்கிறது.”

கிறிஸ்டினா:புனிதப்படுத்தப்பட்ட தண்ணீர் குறித்து அறிவியல் ஆய்வா? ஆச்சரியமாக இருக்கிறதே!”

அருள்பணி:இதைச் செய்தவர் மசாரு எமோட்டோ (Masaru Emoto) என்ற ஜப்பானைச் சேர்ந்த அறிவியலாளர். இவர் மாற்று மருத்துவத் துறையில் (Alternative medicines) நிபுணத்துவம் பெற்றவர். இவரது Messages from Water என்ற நூல் புகழ்பெற்றது. அவர் செய்த ஓர் ஆய்வை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். ஒரே நீரூற்றிலிருந்து ஒரே நேரத்தில் பெறப்பட்ட நீரை மூன்று பாத்திரங்களில் எமொட்டோ அடைத்தார். முதல் பாத்திரத்தில் இருந்த நீரை அவர் அப்படியே விட்டுவிட்டார். புனிதமான வாழ்க்கை வாழ்ந்த ஒருசிலரை அழைத்து, இரண்டாம் பாத்திரத்தில் இருந்த நீரை ஆசிர்வதிக்கக் கூறினார்; அதைப் பாராட்டக் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அடுத்தபடியாக, எதிர்மறையான மனநிலை கொண்ட சிலரை அழைத்து, மூன்றாவது பாத்திரத்தில் இருந்த நீரைத் திட்டவும் சபிக்கவும் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின்பு மூன்று பாத்திரங்களையும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துப் பனிக்கட்டியாக்கினார். பனிக்கட்டியாக்கப்பட்ட நீரை நுண்ணோக்கியில் வைத்து, அவற்றின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்தார். அவரால் அவரது கண்களையே நம்ப முடியவில்லை. இச்செய்தியை மக்களுக்குக் கூறினால், அவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதையும் அறிந்திருந்தார். எனவே, அவற்றைப் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார். அவர் கண்டறிந்தது இதுதான்: முதல் பாத்திரத்தில் இருந்த நீரின் மூலக்கூறு அமைப்பு வழக்கமான நீரின் தன்மையுடையதாக இருந்தது; அறுங்கோணம் கொண்டதாக (Hexagonal structure) இருந்தது. இரண்டாவது பாத்திரத்தில் இருந்த நீர், அதாவது ஆசிர்வதிக்கப்பட்ட நீர், அறுங்கோண அமைப்போடு இருந்தது; அதன் அமைப்புமுறை சீரானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தன. மூலக்கூறுகள் ஒன்றன்மேல் ஒன்றாக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததுபோல இருந்தன. புதிதாகப் பூத்த மலரில் காணப்படும் புத்துணர்வும்  ஈர்ப்பும் அதில் இருந்தன. மேலும், அதன் மூலக்கூறுகள் பெரிய அளவில் வளர்ந்திருந்ததோடு, மூலக்கூறுகளுக்கு இடையேயான இணைப்பும் (dendrites) அதிகமாயிருந்ததைக் கண்டார். மூன்றாவது பாத்திரத்தில் இருந்த, அதாவது சபிக்கப்பட்ட நீரின் மூலக்கூறு அமைப்பு மிகவும் சிதைந்த நிலையிலும் சீரற்ற நிலையிலும் இருப்பதைக் கண்டார். மேலும், அவற்றின் மூலக்கூறிலும் மூலக்கூறு அமைப்பிலும் எந்தவித ஒழுங்கமைவும் இல்லாததைக் கண்டார்.”

மார்த்தா:தந்தையே, நம்ப முடியாத உண்மையாக இருக்கிறதே!”

அருள்பணி:அது மட்டுமல்ல! அவர் ஆலயங்களிலும் புனித இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த புனித நீரை எடுத்துத் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் மூலக்கூறு அமைப்புகள் முற்றிலும் சீரானவையாகவும் சிறப்பானவையாகவும், இரண்டாவது பாத்திரத்தில் இருந்த நீரின் தன்மைகளைப் பெற்றவையாக இருப்பதைக் கண்டு கொண்டார்.”                          

(தொடரும்)

news
ஆன்மிகம்
உண்மையும் நன்மையும் (சதுக்கத்தின் சப்தம் – 4)

வாழ்க்கை என்பது ஓர் அழகான பரிசு! ஆனால், அது மெல்லியதும் உடைந்துபோகக்கூடியதுமாக இருக்கிறது. நோய் என்பது அவ்வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி. ஆனால், மரணம் தவிர்க்க முடியாத ஓர் உண்மை. நமக்கு வாழ்க்கையைக் கொடுத்த கடவுள்மீது நம்பிக்கையோடு இவற்றை எப்படி இணைக்க முடியும்?

நாம் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியாத நேரங்களில் கூட, ஒரு நிகழ்வு நமக்குத் தெளிவாகத் தெரிகிறது; அதாவது, கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததால், மரணம் தோற்கடிக்கப்பட்டது. ஆக, மரணம் ஒரு முடிவல்ல என்பதுதான். இதுவே இயேசுவின் மகத்துவம். இது மாற்கு நற்செய்தி 5-ஆம் அதிகாரத்தில் வரும்  உணர்ச்சி மிகுந்த நிகழ்வில் நாம் காண்கிற இயேசுவின் செயல் என்பதை மையமாகக் கொண்டு திருத்தந்தை லியோ அவர்கள் தனது புதன் மறைக்கல்வி உரையில் எடுத்துரைக்கிறார்.

வாழ்க்கையை மிகவும் கடினப்பட்டு வாழும் நிலையானது, நமது காலத்தில் ஒரு பரவலான நோயாக இருக்கின்றது. எதார்த்தமான வாழ்வானது மிகவும் சிக்கலானதாகவும் கனமானதாகவும் எதிர்கொள்ள மிகவும் கடினமானதாகவும் நமக்குத் தெரிகிறது. எனவே, நமக்குள் நாமே புதைந்து கொண்டு, நம்மை நாமேசுவிட்ச் ஆஃப்செய்கிறோம். விழித்தெழுந்தால் வாழ்க்கையின் விசயங்கள் வித்தியாசமாக இருக்கும் என்ற மாயையின் கீழ் உறங்கிவிடுகின்றோம். சில சமயங்களில் மற்றவர்களை முத்திரை குத்த விரும்புகிறவர்களின் தீர்ப்பால் நாம் தடுக்கப்பட்டதாக உணர்கிறோம்.

மாற்கு 5:21-43 -இல் எடுத்துரைக்கும் இரண்டு நிகழ்வுகளில் இச்சூழல் பின்னிப் பிணைந்துள்ளதை நாம் காணமுடியும். நற்செய்தியில் நாம் வாசிப்பது போல, ஆண்டவர் இயேசு தேவையுள்ள மக்களை எவ்வளவு பரிவுடன் அணுகினார் என்றும், நோயுற்றவர்களையும், இறப்பின் விளிம்பில் சென்றவர்களையும் தேடிப்போய், அவர்களுக்குக் குணமும் வாழ்வும் அளித்தார் என்றும் பார்க்கிறோம். இது வெறும் புற நோய்களுக்கான பதிலல்ல; பாவத்தால் பாதிக்கப்பட்ட நம் உள்ளங்களுக்காகவும், இறைவன் மீது நம்பிக்கை வைக்க மறுக்கும் நம் குருட்டுத்தன்மைக்கு எதிராகவும் இயேசு எடுத்து வைத்த செயல்களே.

யாயிரின் மகள் & இரத்தப்போக்குடைய பெண்

யாயிரு என்கிற தொழுகைக்கூடத் தலைவர், தன் மகள் மிகவும் பாதிக்கப்பட்டு இறப்பின் எல்லையில் இருக்கிறாள் என்று கூறி இயேசுவை அணுகுகிறார். அந்த வழியில் பல ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் தவித்த பெண், தன்னைத் தூய்மையற்றவளாகக் கருதும் சமூகத்தில் அமைதியாக இயேசுவின் ஆடையைத் தொடுகிறாள். அவளுடைய நம்பிக்கையின் அடிப்படையில், இயேசு அவளுக்கு முழுமையான குணமாக்குதலை வழங்குகிறார். அவள் தைரியத்தையும் நம்பிக்கையையும் பாராட்டி, “மகளே, உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்றுஎன்று இயேசு கூறுகிறார். அவள் உளவியல் வாழ்வு மற்றும் சமூகப் பிரிக்கப்படுதலிலிருந்து மீட்கப்படுகிறாள்.

யாயிரு மகளின் மறு வாழ்வு

யாயிரின் மகள் இறந்துவிட்டாள் என்று அனைவரும் கூறும் வேளையில் இயேசு கூறுகிறார்: “அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.” அதைக் கேட்டவர்கள் இயேசுவை இழிவாகப் பார்த்தனர், சிரித்தனர். ஆனால், யாயிரு தன்னை முழுவதுமாக ஆண்டவரிடம் ஒப்படைத்த நம்பிக்கையில் இயேசுவுடன் தொடர்கிறார். அந்த நம்பிக்கைக்குப் பதிலளிக்க இயேசு, இறந்த சிறுமியின் கையைப் பிடித்துதலித்தா கூம்எனக்கூறி அவளைக் கடவுளின் ஆற்றலால் உயிர்த்தெழச் செய்கிறார்.

இயேசுவே உயிரும் உயிர்த்தெழுதலும்

இந்த நிகழ்வுகள் மூலம் இயேசு, இறப்பு நமக்கு இறுதி அல்ல; அவர்தாமே உயிர்த்தெழுதல்; நிலை வாழ்வின் ஊற்றாக இருக்கிறார் என்று நிரூபிக்கிறார். இயேசு தமது சிலுவை மரணத்தினால் இறப்பைக் கடந்து நமக்கு நிலைவாழ்வு என்ற உறுதியையும் நம்பிக்கையையும் அளிக்கிறார். இவை நமக்கு இரு நம்பிக்கையின் பாடங்களாக இருக்கின்றன: யாயிரு, இரத்தப்போக்கால் வாடும் பெண் மற்றும் நற்செய்தியில் வரும் பலர். இவர்கள் அனைவரும் நம்பிக்கையின் உறுதியை நமக்குக் கற்பிக்கின்றனர். நாமும் நம்மை அவர்களுடன் இணைத்துக்கொண்டு, மாற்கு 9:24-இல் உள்ள அந்த அழகான செபத்தைக் கூறலாம்: “ஆண்டவரே, நான் நம்புகிறேன்; என் நம்பிக்கையின்மையைக் குணப்படுத்தும்!”.

யார் இந்த இரண்டு பெண்கள்?

1. முதல் பெண் 12 ஆண்டுகளாக இரத்தம் வழிந்து நடமாடி வருகிறாள்; அதனால் நீதியற்றவளாகத் தள்ளப்பட்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையை உருவாக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

2. யாயிரின் மகள் 12 வயது இளம்பெண்; திருமணத்திற்குத் தகுதியான வயது. ஆனால், அவளின் வாழ்க்கை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது - அவள் இறந்துவிட்டாள்.

இந்த இரண்டு பெண்களும் இஸ்ரயேலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். முதலாம் பெண், ஆண்டவரின் மணவாட்டியாக இருந்த இஸ்ரயேல், தனது கணவனை விட்டு விலகி, அசுத்தமாகி, வாழ்வை உருவாக்க இயலாத நிலையில் உள்ளதைக் குறிக்கிறாள். அவள் மீண்டும் குணமடைய வேண்டுமென்றால், கிறிஸ்துவைச் சந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் அவள் பழைய நிலையை விட்டுவிட்டு, புதிதாக வாழ்க்கையை அளிக்கக்கூடியவளாக மாறுவாள்.

இரண்டாவது பெண்ணான யாயிரின் மகள் இஸ்ரயேலைக் குறிக்கிறாள். இஸ்ரயேல் ஆண்டவரின் மணமகள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், தனது மணமகன் அவளைத் தனது கையால் தூக்கிக்கொள்ளாவிடில், அவள் சாவுக்குள் தற்காலிகமாகவே நிற்கின்றாள். அவள் வயது வாழ்க்கையை உருவாக்கக்கூடியது - ஆனால், இப்போது அவள் சாவை அடைந்திருக்கிறாள். இந்த வாழ்க்கை இழப்பை நிறுத்த முடியாது.

மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்காமல் இருக்க பெரும் பணத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், திருப்பாடல் 49 இதைக் கூறுகிறது: “நீ எவ்வளவு கொடுத்தாலும், அது உன் உயிரை மீட்கப் போதுமானதாக இருக்காது. நீ என்றென்றும் வாழ முடியாது.” ஆனால், இந்தப் பெண் வாழ்க்கை இழப்பை நிறுத்தக்கூடிய ஒருவரைப் பற்றிக் கேட்டிருக்கிறாள். அவள் அவர்மேல் நம்பிக்கை வைத்துக் கூறுகிறாள்: “அவருடைய ஆடையின் விளிம்பையேனும் தொட முடிந்தால், நான் பிழைத்துவிடுவேன்.” அவள்குணமடைவேன்என்று அல்ல; மாறாக, ‘பிழைத்துவிடுவேன்என்று கூறுகிறாள். ‘பிழைத்தல்என்பது இனி வாழ்க்கை இழப்பில்லை என்பதைக் குறிக்கிறது.

வாழ்வைக் கொடுத்த வாழ்க்கைப் பாடம்

மூன்று முறை எமி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற நடிகையும் பாடகியுமான அன் ஜில்லியன், அமெரிக்காவில் பிறந்த உரோமன் கத்தோலிக்க லிதுவேனியக் குடிபெயர்ந்தோர் மகளாவார். 1985 முதல் தன்னுடைய தனிப்பட்ட நகைச்சுவையும் ஊக்கமளிக்கும் உரையாடலும் சேர்ந்த ஒவ்வொரு நிகழ்வும், அவரது புகழுக்கு மேலும் ஒளிவளிக்கச் செய்தது.

1985-இல் அவள் 35 வயதாக இருந்தபோது மார்பகப் புற்றுநோயாகக் கண்டறியப்பட்டதிலிருந்து அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். தன் உடலில் கண்ட ஒரு வீக்கத்தின் தன்மை பற்றி தெரிந்துகொள்ள மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், St. Francis de Sales தேவாலயத்தில் நின்று, கதவிலிருந்த வரிகளை வாசித்தார்: “இன்று உன்னைக் காக்கும் அதே நிலையான கடவுள், நாளையும் உன்னைக் காப்பார். அவர் உன்னைத் துன்பத்திலிருந்து காப்பார் அல்லது அதைச் சுமக்கக்கூடிய வலிமையையும் தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் உனக்கு அளிப்பார். ஆகவே, அமைதியுடன் இரு; கவலை, கலக்கம், கற்பனைகளை ஒதுக்கிவிடு.” அந்தத் தேவாலயத்திற்குள் சென்ற அவர், தன்னுடைய சோதனைகளை ஏற்கும் ஆற்றலுக்காகச் செபித்தார். பின்னர் அவர் மேற்கொண்ட இரட்டை மார்பக அகற்றும் அறுவை சிகிச்சைக்கு முன்பும் பிறகும், அவர் காட்டிய இறைநம்பிக்கையும் உள்ளமைதியும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன. மேலும், பல புற்றுநோயாளிகளுக்கான ஊக்கமாகவும் அமைந்தது. அவர் நம்பிக்கையுடன் குணமடைந்தார். இயேசு நம்மிடமும் கூறுவது: “அஞ்சாதே, நம்பிக்கையை மட்டும் விடாதே (மாற் 5:36).

1. இயேசு நம்மை நாம் உள்ளபடியே ஏற்கிறார். எனவே, நமக்குத் தகுந்த நம்பிக்கையும் தூய எண்ணங்களும் வந்த பிறகே இயேசுவிடம் வரவேண்டும் என்ற தேவையில்லை. நம் துன்பங்களையும் குழப்பங்களையும் குறைந்த நம்பிக்கையோடும் கூட அவரிடம் கொண்டுவரலாம்.

2. நாம் இயேசுவின் குணப்படுத்தும் தொடுதலை உணர்ந்து, உடல் மற்றும் மனத்தின் புண்களை அவரிடம் திறந்து சொல்லி, அவர் குணப்படுத்தும் அருளில் நம்பிக்கை கொள்வோம்.

news
ஆன்மிகம்
புனித தேவசகாயத்தின் புனிதர் பட்டப் பணியில் திருத்தந்தை பிரான்சிஸ் (நீங்கா நினைவுகள் – 7)

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலப்பரப்பில் வாழும் மனிதர்கள் அனைவர்மீதும் அளப்பரிய அன்பு கொண்டவர் திருத்தந்தை பிரான்சிஸ். திரு அவையின் வாழ்விலும் பணியிலும் தன்னையே கரைத்துக் கொண்டவர். போர்களாலும் வன்முறைகளாலும் அல்லலுற்று வாழும் இளையோருக்காகக் கண்ணீர் சிந்தியவர். ‘போர்களைக் கைவிடுங்கள்என்று கூறி இரு எதிரெதிர் துருவத் தலைவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி அமைதிக்கு அடிக்கல் இட்டவர். கடைக்கோடி மனிதன் மூலம் திரு அவை இயங்க வேண்டுமென்று அளவளாவியவர். ஆலயங்கள் வெறும் கட்டடங்களாக இல்லாமல், ஏழைகளின் இல்லமாக மாற்றப் போராடிய சமூகப் போராளி இவர். ‘திரு அவை திண்ணையில் இருக்க வேண்டும்; மக்களைத் தேடி தெருவிற்கு வரவேண்டும்என்று கனவு கண்டவர்.

அன்பையும் மனிதநேயத்தையும் வாழ்வாக்கியவர் திருத்தந்தை பிரான்சிஸ். ‘இயற்கை நமக்குத் தாய் வீடுஎன்றதோடு, அதைக் காத்திட அனைவருக்கும் அறைகூவல் விடுத்தவர். இறைவழியிலே அன்னை மரியாவுடன் தந்தை யோசேப்பையும் சேர்த்தவர். திரு அவையின் பணியிலும் வாழ்விலும், தூய ஆவியின் கொடையின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தவர். திருப்பலியும் கொண்டாட்டங்களும் இயேசுவைச் சந்திக்கும் வாய்ப்பு என்பதையும் எடுத்துரைத்தவர். அவரிடம் மன்றாடுவதே நம் முதல் கடமை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியவர். நற்கருணைக் கொண்டாட்டமே உயிர்த்த இயேசுவைச் சந்திக்கும் வாய்ப்பு என மனுக்குலத்திற்கு அறைகூவல் விட்டவர். திருமடல்கள் பல தந்து திரு அவைக்குப் புத்துயிரூட்டியவர்.

கொரோனா தொற்று, இயற்கைப் பேரிடர்களெல்லாம் நடந்தபோது, ‘கடவுளே காப்பாற்றும்; எம் மக்களைக் காத்தருளும்என ஆண்டவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் கண்ணீர் விட்டு அழுதவர். பெரிய வியாழன் திருச்சடங்கில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்கும் பாதம் கழுவ வாய்ப்புத் தந்தவர். இதன்மூலம் காலங்காலமாய் இருந்த தடைகளைத் தகர்த்தெறிந்தவர். திரு அவை நிர்வாகப் பணியிலும் அருள்சகோதரிக்கு அரிய வாய்ப்பை அள்ளித் தந்தவர்.    

நவீனக் கலாச்சாரத்திற்கு வெற்றிக்கொடி காட்டி விட்டு உள்ளே புகுந்துள்ள தீய பண்புகளைத் தூக்கி எறிய வழிகாட்டியவர். ஏழைகள், அனாதைகள், ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், புலம்பெயர்ந்தோர், அகதிகள், வயது முதிர்ந்தோர் என மனிதகுலத்தில் கடைக்கோடியில் வாழ்வோருக்காக வாழ்நாள் எல்லாம் வருந்தியவர். வாழ்வெல்லாம் எளிமையின் சின்னமாய், அவர்களின் குரலாய் ஓயாது ஒலித்தவர். தன் இறுதிமூச்சுவரை அடுத்தவர் நலனுக்காகவே அயராது உழைத்தவர்.

இந்திய மண்ணின் மறைச்சாட்சியான புனித தேவசகாயத்தின் இறைநம்பிக்கை போன்றே தனது நம்பிக்கையையும் வரித்துக்கொண்டவர். புனித தேவசகாயம் இரத்தச்சாட்சியாய் இறைவனிடம் இணைந்தவர்; நம் திருத்தந்தையோ இரத்தச்சாட்சிகளிடம் மன்றாடி இறையருளும் நிறைவாழ்வும் பெற்றவர். இவர்களின் பரிந்துபேசுதலே தன்னை இறைவனிடம் சேர்க்கும் பாலம் என்பதை அறிந்து கொண்டவர். மறைச்சாட்சி தேவசகாயத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொண்ட திருத்தந்தை, 28.02.2019-ஆம் ஆண்டு அவரை புனிதராக அறிவிக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார். அருளாளராக வணங்கப்பட்டு வந்த தேவசகாயம் அவர்களை 15.05.2022-ஆம் நாள் உரோமில் நடந்த பிரம்மாண்ட விழாவில், உலக அளவிலான வணக்கத்தைப் பெறும் வகையில் புனிதர் பட்டம் வழங்கினார். வாழும்போதே புனிதத்துவத்தில் வாழ்ந்த திருத்தந்தை, புனிதர்கள் கூட்டத்தில் நிச்சயம் இருக்கின்றார் என்பதை உறுதியோடு நம்புகிறோம். அவரின் அடிச்சுவட்டை நாமும் பின்பற்றுவோம்.

news
ஆன்மிகம்
“எதிர்நோக்கை வலுப்படுத்தும் செய்திகளைக் கூறுங்கள்!” (திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 59-வது சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தி)

உங்கள் உள்ளங்களில் உள்ள எதிர்நோக்கைப் பணிவோடும் மரியாதையோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் (1பேதுரு 3:15-16).

அன்புமிக்க சகோதரர்களே, சகோதரிகளே,

தவறானவையும் துருவப்படுத்தும் தன்மை கொண்டவையுமான சில மையங்கள் இதற்கு முன் இல்லாத அளவுக்குத் தகவல்களையும் தரவுகளையும் இன்று தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளன. நமது இந்தக் காலத்தில் இவற்றின் விளைவுகளை நன்கு அறிந்தவன் என்ற முறையில் இதழியலாளரே, தொடர்பாடல் பணியில் ஈடுபட்டிருப்போரே உங்களுடன் உங்கள் தொடர்பாடல் பணிகளைக் குறித்துப் பேசுவது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.

அருளின் காலமாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் 2025-ஆம் ஆண்டு யூபிலியைக் கொண்டாடும் இவ்வேளையில், பலவிதமான சிக்கல்களுக்கு மத்தியில் எதிர்நோக்கின் தொடர்பாளர்களாக நீங்கள் செயல்பட இச்செய்தியின் வழியாக அழைப்பு விடுக்கிறேன். இது நற்செய்தியின் ஒளியில் உங்கள் தொடர்பாடல் பணிகளையும் நற்செய்தி அறிவிப்புப் பணியையும் புதுப்பித்துக்கொள்ள வழிவகுக்கும் என நம்புகிறேன்.

தொடர்பாடலை நிராயுதபாணியாக்குதல்

இன்றைய உலகில் தொடர்பாடல் செயல்பாடுகள் எதிர்நோக்கைத் தோன்றச் செய்வதற்குப் பதிலாக அச்சம், விரக்தி, முன்சார்பு எண்ணங்கள், எதிர்ப்பு, மத, இனவெறி போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றன. உண்மையை உள்ளபடி எடுத்துரைப்பதற்குப் பதிலாக மனிதரின் இயல்பு ஊக்கச் செயல்பாடுகளைத் தூண்டி எழுப்புவதாகவே, பல தொடர்பாடல் செயல்பாடுகள் பலவேளைகளில் அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாகசவரக்கத்திபோன்ற கூர்மையான சொற்கள் தொடர்பாடலில் எதிர்வினையைத் தூண்டுபவைகளாக அமைந்து விடுகின்றன. குழப்பத்தையும் காயப்படுத்துதலையும் உருவாக்கும் நோக்கத்தோடு இன்று தவறான, செயற்கையான, சிதைக்கப்பட்ட தகவல்கள் பிறருக்கு ஊடகங்கள் வழியாக வழங்கப்படுகின்றன. இதைக் குறித்தே தொடர்பாடலை நிராயுதபாணியாக்க வேண்டும் எனவும், பிறரைத் தாக்கும் போக்கிலிருந்து தொடர்பாடலை மீட்டெடுக்க வேண்டும் எனவும் நான் பலமுறை கூறியுள்ளேன்.

எதார்த்தமான ஓர் உண்மையை ஒரு வெற்று முழக்கமாகக் குறைத்துவிடுவது பயனற்றது. இன்று பல்வேறு தொலைக்காட்சிகளில்டாக்ஷோஎனப்படும் தன்னிச்சையான உரையாடல் நிகழ்ச்சிகளிலும், சமூக ஊடகப் பகிர்வுகளிலும் போட்டிகள், பிறரை எதிர்த்தல், பிறரைச் சிறுமைப்படுத்துதல் போன்ற சிந்தனைச் சட்டக நிகழ்வமைப்புகள் இடம் பெறுகின்றன. இவற்றில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் பிறரது கருத்துகள் மீது ஆதிக்கம் செலுத்தி, தகவல்களைக் கையாடல் செய்து, தம் கருத்தே சிறந்தது என நிலைநாட்ட முயல்வதால் தாம் விரும்பியபடியே மேற்கொள்ளப்படுகின்றன. பொதுக்கருத்தை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மற்றொரு பிரச்சினைக்குரிய செயல்பாடும் உள்ளது. மேற் கூறியவற்றை எண்ணிம அமைப்புகள் வழியாகத் திட்டமிடப்பட்ட கவனச்சிதறலைத் தோற்றுவிப்பது. நம்மையும், எதார்த்த உண்மையையும் பொருளாதாரச் சந்தைக் குறியீடுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக நம்மை அறியாமலேயே ஒரு தானியங்கி செயல்பாட்டு முறையை நமது உலகிலும், நம் வாழ்விலும் காண்கிறோம். இதனால் நமது இருப்புத்தன்மையின் அடித்தளமும், மனிதரின் சமூக வாழ்வும் ஒருசிலரின் விருப்பங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவதால் பொதுநன்மையைத் தேடி அதை நிலைப்பெறச் செய்தல், ஒருவர் மற்றவருக்குத் திறந்த மனத்துடன் செவிசாய்த்தல், பிறரது கருத்துகளை அறிந்து புரிந்துகொள்ளுதல் போன்றவை இயலாதவையாகின்றன. இதனால் நம்மை இவ்வுலகில் நிலைநிறுத்த வேண்டுமெனில், ஒரு பகைவனை உருவாக்கம் செய்து, அவனுக்கு எதிராக வசைபாடி அவனைத் தூற்றுதல் மிகவும் அவசியமாகத் தோன்றுகின்றது. இவ்வாறு மற்றவர்கள் நமது பகைவர்களாகக் கருதப்படும்போது, அவர்களது தனித்தன்மையும் மாண்பும் போற்றப்படாதபோது எதிர்நோக்கை உருவாக்கும் வாய்ப்பை நாம் இழந்துவிடுகிறோம். தொன்பெல்லோ என்பவர் குறிப்பிட்டுள்ளபடிதனிமனிதர்களின் முகங்கள் கரைந்து காணாமற்போகும்போது எதிர்ப்புகளும் மோதல்களும் உருவாகின்றன.’ இந்த மனநிலைக்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.

எதிர்நோக்கு என்பது எளிதானது அல்ல; ஜார்ஜ் பெர்னானோஸ் என்பவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளதுபோல, ‘எதிர்நோக்கிற்குக் காரணிகளாகத் தாங்கள் ஏற்கெனவே தவறாகக் கருதியவை வெறும் மாயையேயன்றி உண்மையல்ல என்று உணர்ந்து வெட்கப்படவும், தைரியம் உள்ளவர்களே உண்மையான எதிர்நோக்கும் திறன் கொண்டவர்களாவர். எதிர்நோக்கு என்பது சவாலானது. இதைச் சவால்களுக்கெல்லாம் சவால் என்றும் கூறலாம். எதிர்நோக்கு என்பது ஒரு மறைவான நற்பண்பு. இது உறுதியானது. பொறுமையுள்ளது. கிறித்தவர்களுக்கு இது ஒரு விருப்ப நற்பண்பு அல்ல; மாறாக, இது மிகவும் அவசியமானது. ‘ஸபே சால்விஎன்ற ஏட்டில் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் குறிப்பிட்டுள்ளதுபோல, “எதிர்நோக்கு ஏதோ நல்லது நடக்கும், நடக்கட்டும் என்ற செயலற்ற காத்திருத்தல் அல்ல; மாறாக, இது நம் வாழ்வை மாற்றக்கூடிய செயலாக்கம் கொண்டது. எதிர்நோக்கு கொண்டுள்ள ஒருவர் வித்தியாசமாக வாழ்கிறார். இவ்வாறு எதிர்நோக்குபவருக்குபுதுவாழ்வுஎன்னும் கொடை கொடுக்கப்படுகிறது(எண் 2).

பணிவோடும் மரியாதையோடும் உங்கள் எதிர்நோக்கிற்கு விளக்கம் கூறுங்கள்

எதிர்நோக்கிற்கும், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்தலுக்கும் தொடர்பாடலுக்குமுள்ள போற்றத்தக்கத் தொடர்பை புனித பேதுருவின் முதல் கடிதத்தில் (3:15-16) காண்கிறோம். “உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாரேனும் விளக்கம் கேட்டால் விடையளிக்க, நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடையளியுங்கள்.” இப்பகுதியிலிருந்து நாம் சேகரிக்கக்கூடிய மூன்று செய்திகளை இங்குக் காண்போம்.

முதலில்உங்கள் / உங்களில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்.” கிறித்தவர்களின் எதிர்நோக்கிற்கு ஒரு முகம் இருக்கிறது. உயிர்த்த ஆண்டரின் முகமே அது. தூய ஆவியாரின் வழியாக அவர் நம்மோடு இருப்பதாக அவர் கொடுத்த வாக்குறுதி நம்மை எதிர்நோக்க இயலாத சூழ்நிலைகளிலும் நாம் எதிர்நோக்கி இருக்க நமக்கு வலுவூட்டுகிறது. ‘எல்லாம் இழப்பேஎன்று தோன்றும் குழலிலும் அங்கே மறைந்திருக்கும் நன்மைகளைக் கண்டறிய இந்த எதிர்நோக்கு நமக்கு வழிவகுக்கிறது.

இரண்டாவது செய்தி நம்முள் இருக்கும் எதிர்நோக்கைப் பற்றி விளக்கிக் கூற நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே. நமது எதிர்நோக்கைப் பற்றி நம்மிடம் கேட்போருக்கு, விளக்கம் கூறத் தயாராக இருக்க வேண்டும். கிறித்தவர்களின் முதன்மைப் பண்பு கடவுளைப் பற்றிப் பேசுவது மட்டுமன்று; அவர்கள் கடவுளின் அன்பின் அழகை தம் வாழ்வில் எதிரொலித்து, எல்லாவற்றிலும் புதிய அனுபவத்துடன் வாழ்பவர்கள் என்பது முக்கியமானது. இவ்வாறு இவர்கள் அன்பை வாழ்வதாலேயே பிறர் இதைக்குறித்துநீங்கள் ஏன் இவ்வாறு வாழ்கிறீர்கள்?’, ‘நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று வினா எழுப்புகின்றனர்.

புனித பேதுருவின் சொற்களில் இறுதியாக மூன்றாவது செய்தியையும் காண்கிறோம். இந்த வினாக்களுக்கான நமது விடைபணிவோடும், மரியாதையோடும்வழங்கப்படவேண்டும். பொதுவாகத் தொடர்பாடல் சிறப்பாக, கிறித்தவர்களின் தொடர்பாடல் இந்தப் பதிலைத் தரவேண்டும். அவ்வாறு பதில் கூறும்போது சாலையில் நடந்து செல்லும் உடன் பயணிகளிடையே நிகழ்வது போன்று நமது பதில் மரியாதையோடும் நெருக்கமானதாகவும் இருக்க வேண்டும். சிறந்த தொடர்பாளராகிய நாசரேத்தூர் இயேசுவின் தொடர்பாடல் இவ்வாறே இருந்தது. அவர் எம்மாவு சாலையில் நடந்து சென்ற இரு சீடர்களோடு சேர்ந்து நடந்தார். அவர்கள் இதயம் பற்றி எரியும்படி அவர்களோடு பேசி, நடைபெற்ற நிகழ்வுகளை இறைவார்த்தையின் ஒளியில் விளக்கிக் கூறினார்.

(தொடரும்)

news
ஆன்மிகம்
கடவுள் தமது உடன்படிக்கைக்கு என்றென்றைக்கும் நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறார்! (God is ever faithful to his covenant) (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 17)

இறைவாக்கினர்கள் கடவுளுக்கும், இஸ்ரயேல் மக்களுக்குமிடையேயான உடன்படிக்கையின் உறவை விவரிக்க, கணவன்-மனைவிக்கு இடையேயானதிருமண உறவுபற்றிய உருவகத்தை அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள்.

1. திருவிவிலியமானது இஸ்ரயேல் நகர மக்களைக் குறிப்பதற்கு வரலாற்றுப்பூர்வமாகவும் சமயம் சார்ந்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீயோன் மலையை மையப்படுத்திசீயோனின் மகளேஎன்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது (ஒப்பிடுக. மீக் 4:10-13; செப் 3:14-18; செக் 2:14, 9:9-10).

மண ஒப்பந்தமானவள்அல்லதுமனைவிஎன்று அடிக்கடி விவரிக்கப்படும் இந்த உருவகமானது, கடவுளுக்கும் இஸ்ரயேலுக்குமிடையேயான அன்புறவைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.

மீட்பின் வரலாறானது கடவுளின் அன்பின் கதையாக இருக்கிறது. அதேநேரத்தில், அக்கதையானது மனிதனின் பிரமாணிக்கமின்மையைக் கூறுவதாகவும் இருக்கிறது. கடவுள் தமது இணையாக (மனைவியாக) ஏற்றுக்கொண்ட அந்த மக்கள், கடவுளோடு ஏற்படுத்திய திருமண உடன்படிக்கையை அடிக்கடி மீறுவதை இறைவார்த்தையானது பின்வரும் வார்த்தைகளில் கண்டிக்கின்றது: “ஒரு மனைவி தன் கணவருக்குத் துரோகம் செய்வதுபோல இஸ்ரயேல் இனத்தவராகிய நீங்கள் எனக்குத் துரோகம் செய்தது உண்மை (எரே 3:20).

யாவேயின்மணவாட்டியானஇஸ்ரயேலைக் கறைபடுத்துகின்ற துரோகத்தின் பாவம் எதுவாக இருக்கின்றது? அது எல்லாவற்றையும்விட விபச்சாரத்தில் இருக்கின்றது. திருவிவிலிய வார்த்தைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சிலைகளை நோக்கிச் செல்வதென்பது ஆண்டவரின் பார்வையில் விபச்சாரத்திற்கு இணையானதாகும்.

2. ஓசேயா இறைவாக்கினர் தனது நாடக வடிவிலான விளக்கத்தின் வழியாக மிக அற்புதமாக இதை விவரிக்கின்றார். தன்னுடைய சொந்த வாழ்க்கையே விளக்குவதற்கான எதார்த்தமான அடையாளமாக மாறுகின்றது. உண்மையில் அவருடைய பிள்ளைகளின் பிறப்பில் அவர்கள் இவ்வாறு கட்டளையிடப்படுகிறார்கள்: “இரக்கமற்றவள் என்று அவளைக் கூப்பிடுங்கள்; இஸ்ரயேல் இனத்தார்மேல் இனி ஒருபோதும் நான் இரக்கம்கொள்ளவோ, மன்னிக்கவோ மாட்டேன், மேலும், இனி ஒருபோதும் உன்னை நான் பெயர் சொல்லி அழைக்கமாட்டேன்; ஏனெனில், நீங்கள் என் மக்களுமல்ல, நான் உங்கள் கடவுளுமல்ல (ஓசே 1:6,9).  

எதிர்காலத்திற்கான மிக உன்னதமானதோர் உடன்படிக்கையை ஆண்டவர் அறிவிக்கின்றார். ஆண்டவரது கண்டிப்பு மற்றும் சிலைகளை வழிபட்டதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் அனுபவமானது பிரமாணிக்கமற்ற மனைவியை மனம் மாறி மீண்டும் புது வாழ்வை நோக்கித் திரும்பி வரச் செய்கிறது. அதனால் அவள் இவ்வாறு சொல்வாள்: “நான் என் முதல் கணவனிடம் திரும்பிச் செல்வேன்; ஏனெனில், இப்பொழுது இருப்பதைவிட அப்பொழுது நன்றாய் இருந்தது (ஓசே 2:7). ஆனால், கடவுளோ மீண்டுமோர் உடன்படிக்கையை ஏற்படுத்த விரும்புகிறார். அவரது வார்த்தைகள் நினைவு, இரக்கம் மற்றும் கனிவு மிக்கவைகளாக மாறுகின்றன. “இதன் காரணமாக இதோ அவளுக்கு நயங்காட்டி அவளைப் பாலைவனத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அவளோடு நயமாகப் பேசுவேன் (ஓசே 2:14). உண்மையில் பாலைவனம் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்த பிறகு கடவுள் அம்மக்களோடு உறுதியான உடன்படிக்கை செய்துகொண்ட ஓர் இடமாகும்

இந்த அன்பின் உருவகங்கள் கடவுளுக்கும் இஸ்ரயேலுக்குமான கடினமான உறவை விவரித்தாலும், இவற்றின் வழியாகப் பாவத்தின் துயரத்தையும், பிரமாணிக்கமின்மையின் சங்கடங்களையும், மக்களை மீண்டும் உடன்படிக்கையை நோக்கிக் கொண்டுவர மனித இதயத்தோடு பேசும் இறையன்பின் முயற்சியையும் இறைவாக்கினர் விளக்குகின்றார்.

3. அன்றைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசினாலும், இறைவாக்கினர் வழியாக எதிர்காலத்திற்கான மிகவும் நிறைவானதோர் உடன்படிக்கையை ஆண்டவர் அறிவிக்கின்றார்: “அக்காலத்தில் நீ என்னை இனிபாகாலேஎன்று சொல்லாமல், ‘என் கணவன்என்று கூப்பிடுவாய் என்கிறார் ஆண்டவர்.… மேலும், உன்னை எனக்கு மணம் முடித்துக்கொள்வேன்; நீதியிலும் உண்மையிலும் என்றைக்குமான அன்பிலும் இரக்கத்திலும் மணம் முடித்துக்கொள்வேன். நம்பிக்கையில் உன்னை எனக்கு மணம் முடித்துக் கொள்வேன்; நீ உன் ஆண்டவரை அறிந்து கொள்வாய் (ஓசே 2:16,19-20).   

மனித பலவீனங்களால் ஆண்டவர் சோர்ந்து விடுவதில்லை. மாறாக, இன்னும் நெருக்கமான மற்றும் நிலையான ஒன்றிப்பை முன்வைத்து மனிதனின் நம்பிக்கையின்மைக்குப் பதில் தருகிறார்: “நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைப்பேன். இரக்கம் பெறாதவர்களுக்கு இரங்குவேன் மற்றும் என் மக்களாக இல்லாதிருந்தவர்களைஎன் மக்கள்என்று சொல்லுவேன்; அவர்கள்என் ஆண்டவரேஎன்பார்கள் (ஓசே 2:23).     

கடவுளின் முடிவில்லாத அன்பானது மக்களுடைய நம்பிக்கையின்மையிலும், எப்பொழுதுமே அன்பின் உடன்படிக்கையை மீண்டுமாக ஏற்படுத்திடவும், எல்லாவிதமான எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக மீட்பை அளித்திடவும் தயாராக இருக்கிறது.

4. இறைவாக்கினர்களான எசேக்கியேல் மற்றும் எசாயா இருவருமே மன்னிக்கப்பட்ட, பிரமாணிக்கமற்ற பெண்ணின் உருவகத்தினைப் பற்றிப் பேசுகிறார்கள். இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக ஆண்டவர் அவருடைய மனைவியிடம் இவ்வாறு கூறுகிறார்: “உன் இளமையின் நாள்களில் உன்னோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையை இன்னும் நினைவுகூர்வேன்; மற்றும் என்றைக்குமானதோர் உடன்படிக்கையை உன்னோடு நான் ஏற்படுத்துவேன் (எசே 16:60).

இறைவாக்கினர் எசாயா நூல் கடவுளின் கருணை நிறைந்ததோர் உரையை மேற்கோள் காட்டுகிறது: “அன்பினால் நான் உனக்கு இரக்கம் காட்டுவேன்என்கிறார் உன் மீட்பரகிய கடவுள் (எசா 54:5,7-8).  

சீயோனின் மகளுக்கான வாக்குறுதியானது பிரமாணிக்கமற்ற மனைவியின் கைவிடப்பட்ட நிலையிலிருந்து மீண்டெழச் செய்கின்ற ஒரு புதிய, நம்பிக்கையுள்ள அன்பு மற்றும் வியக்கத்தக்க நம்பிக்கையாக இருக்கிறது (எசா 62:11-12). கடவுளுடனான உறவானது ஏற்கத்தக்க வரையறைகள் வழியாக விவரிக்கப்படுகின்றது

இறைவாக்கினர் எசாயா கடவுளுடனான உறவை இவ்வாறு விவரிக்கிறார்: “கைவிடப்பட்டவள்என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; ‘பாழ்பட்டதுஎன இனி உன் நாடு அழைக்கப்படாது; நீஎப்சிபாஎன்று அழைக்கப்படுவாய்; உன் நாடுபெயுலாஎன்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார் (எசா 62:4-5). உருவகங்கள் மற்றும் அன்பின் மனநிலைகளை இனிமைமிகு பாடல்கள் இவ்வாறு சுருக்கமாக விவரிக்கின்றன: “நான் என் காதலர்க்குரியவள்; என் காதலர் எனக்குரியர் (இபா 6:3). இவ்வாறு யாவே கடவுளுக்கும், அவருடைய மக்களுக்குமிடையேயான உறவானது மீண்டும் இத்தகைய பொருத்தமுள்ள வரையறைகளால் விவரிக்கப்படுகின்றது.     

5.  மரியா இறைவாக்கினர்களின் முன்னறிவிப்பைக் கேட்டபொழுது, அவரது இதயத்தில் மீட்பரின் வருகையை வளர்க்கின்ற இந்தக் கண்ணோட்டத்தை நினைத்திருக்க வேண்டும்.

நம்பிக்கையற்ற மக்களின்மீது கூறப்பட்ட சாபங்கள் அனைத்தும் அருளிலும் அன்பிலும் ஆண்டவருடனான உறுதியான திருமண ஒன்றிப்பினுடையதொரு வேண்டுதலுக்கு அவளது ஆன்மாவை புதுப்பிக்கின்ற உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவராய் இருப்பதற்காக மிகவும் உறுதியான அர்ப்பணத்தை அவளில் தூண்டுகிறது. இந்தப் புதிய உடன்படிக்கையிலிருந்து முழு உலகத்தினுடைய மீட்பும் வரும்.

மூலம்: John Paul II, God is ever faithful to his covenant, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 1 May 1996, p. 11.