news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள மசூதி மற்றும் மதராஸா மீது கல்வீச்சு நிகழ்வுகள் அரங்கேறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. தீயவர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர்; அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்தியா மதச்சார்பற்ற நாடு; அனைத்துச் சமூகத்தினரும் தங்களது மத நம்பிக்கையைப் பின்பற்ற அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. எனவே, வகுப்புவாத வன்முறையைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்.”

திரு. ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்

பல நூற்றாண்டுகளாக வடமேற்கு இந்தியாவின் பசுமை நுரையீரலாக ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. அந்த மண்டலத்தின் சமூகப் பொருளாதார முதுகெலும்பாகவும் திகழும் ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பது நம் கடமை. எனவே, ஆரவல்லி மலை மற்றும் மலைத்தொடர் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழு அளித்த பரிந்துரைகள், அதை ஏற்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனால் சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கொண்ட புதிய உயர்நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடப்படுகிறது. அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்து அடுத்தகட்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை அங்குப் புதிதாகச் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளவோ, பழைய குத்தகைகளைப் புதுப்பிக்கவோ கூடாது.”

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி அகஸ்டின், ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். அவர்களது கோரிக்கைகளை முதல்வரும் பரிசளிக்க வேண்டும். சமூகநீதி, பெரியார், அம்பேத்கர், மார்க்சிய அரசியலே எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆர்.எஸ்.எஸ், பா... மற்றும் மதவாதச் சக்திகளை, தமிழ்நாட்டில் காலூன்றச் செய்ய .தி.மு.. உள்ளிட்ட கட்சிகளும், சில அமைப்புகளும் துணை போகின்றன. தமிழ்நாட்டில் பா... வலுப்பெற்றால் .தி.மு.. இல்லாமல் போகும்; பெரியார் அரசியலும் போய்விடும்.\"

தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

எதிர்காலத் தலைமுறையைப் பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவேண்டும்.”

உயர்திரு. மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

பார்வையாளர்களை ஈர்க்கவும், நமது பாரம்பரியப் பொறுமையை வெளிப்படுத்தவும் இசையை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இசையை உருவாக்குவது ஓர் அம்சம். அதேபோல, அதை உலகம் இரசிக்கும் வகையில் கொண்டு சேர்ப்பதும் முக்கியமானது. கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை என எதுவாக இருந்தாலும், அனைத்தும் பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருந்து வருகிறது.”

இசை அமைப்பாளர் .ஆர். ரஹ்மான்

அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்பதை உலகளாவிய நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஒவ்வொரு நாடும் காலநிலை அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க உரிய கவனத்துடன் செயல்படவேண்டும்.

எந்தவொரு நாடும், தனது நிலப்பரப்பை மற்றொரு நாட்டின் நிலப்பரப்புக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த உரிமை இல்லை. சுற்றுச்சுழல் தொடர்பாக ஒவ்வொரு நாடும் இதர நாடுகளை மதிப்பதும், சுற்றுச்சுழல் பாதிப்பைத் தடுப்பதும் தங்கள் பொறுப்பு, கடமையாகக் கருதவேண்டும். காலநிலை மாற்றத்தில் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து நாடுகளுக்கிடையே கூட்டுப் பொறுப்பும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.”

உலகளாவிய நீதிமன்ற நீதிபதி லியோனார்டோ நெமர் கால்டீரா பிராண்ட்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற்று நான் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுவிட்டு கிரீமிலேயர், சமூக-பொருளாதார நிலையில் முன்னேறியவர்கள் பிரிவினருக்குச் சலுகைகளை இரத்து செய்ய முன்மொழிவதாக என்மீது குற்றஞ்சாட்டினர். ஆனால், அரசமைப்புப் சட்டத்தால் உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதை அவர்கள் அறியவில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது தலைமைச் செயலரின் மகனுக்கும், கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு தொழிலாளியின் மகனுக்கும் ஒரே இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது சரியாக இருக்குமா?”

உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிர்ப்பந்தம் மட்டுமல்ல; இது ஓர் அரசமைப்புச் சட்ட உத்தரவாதம். சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் இல்லாதது காரணம் அல்ல; தொடர்புடைய நிறுவனங்கள் சட்டங்களைச் செயல்படுத்தத் தயங்குவதுதான் காரணம்இந்த நிறுவனங்களை வலிமைப்படுத்துதல், ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பு, ஆதாரங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தல், குடிமக்களின் பங்கேற்பு மற்றும் நடத்தை மூலம் மாற்றம் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்ட முன்னோக்கியப் பாதையை அமைக்கவேண்டும்.”

உயர்திரு. ஆர். மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

சாதி, மதம், மொழி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சமூக நல்லிணக்க ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பா...வினர் ஆளும் வட மாநிலங்களில் வேண்டுமானால் அவர்கள் நினைத்த காரியங்கள் ஈடேறலாம்; ஆனால், இங்கு அவர்களின் கனவு நிறைவேறாது. இது இராமானுஜர் வாழ்ந்த மண். ஆகவே, மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணிக்காக்கப்படும். சனாதனத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது எனப் பா... மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகிறார். உண்மையில் நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை; ஏதாவது ஒன்றை மையப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தக்கூடாது என்றுதான் கூறுகிறோம். எனவே, பிரிவினையை ஏற்படுத்தும் சனாதனத்தை எதிர்க்கிறோம், சமாதானத்தைப் போற்றுகிறோம்.”

உயர்திரு. பி.கே. சேகர் பாபு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
உரிமைக்கான எதிரொலி

அரசமைப்பு சாசனம் என்பது ஒரு சட்ட நூல் அல்ல; அது சமூக சாசனம். சமூகத்தின் கையில் இருக்க வேண்டும். பக்குவமான குடிமக்களைக் கொண்ட குடிமைச் சமூகத்தால்தான் நல்ல அரசியலை உருவாக்க முடியும். அதிலிருந்துதான் நல்லாட்சி, நிர்வாகம் என்பது சாத்தியமாகும். ஆகவே, அரசமைப்புச் சாசனத்தை மக்கள் மையப்படுத்தும் முயற்சியைத் தொடர் நிகழ்வாகக் கிராமங்கள் தோறும், பள்ளிகள், கல்லூரிகளுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களில் அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையை வைத்திருந்தால், நாம் இந்தியாவின் குடிமக்கள் என்ற உணர்வை அது ஏற்படுத்தும்.”

திரு. . பழனித்துரை, காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர்

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தால், அதே வழக்குகளை வேறு நீதிபதிகள் மீண்டும் விசாரித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. இது வேதனையளிக்கிறது. ஏற்கெனவே தீர்ப்பளித்த நீதிபதி தொடர்ந்து பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்ட காலத்திற்கும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்த காலத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கருத்தில் கொள்ளாமலும் தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றன. ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பால் அதிருப்தி அடைந்தவர்களின் வேண்டுகோளை ஏற்று, வேறு நீதிபதிகள் அல்லது சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதிகளின் அமர்வுகள் இவ்வாறு தீர்ப்புகளை மாற்றுகின்றன.”

நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு

மக்களின் அடிப்படை உரிமைகளான வாக்குரிமை, மதச் சுதந்திர உரிமை ஆகியவை திரும்பப் பெறப்படுகின்றன. பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர், பொதுவான இந்திய வாக்காளர்கள் ஆகியோர் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யப்படுகின்றனர். உறுதிசெய்யக் கோரப்படுகிறது. குடிமக்களின் உரிமை என்ற பெயரில் நடத்தப்படும் இந்த எஸ்..ஆர். நடவடிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சனநாயகம் முடங்கியுள்ளது; மதச்சார்பின்மை அழியும் நிலையில் உள்ளது; கூட்டாட்சித் தத்துவம் சிதறடிக்கப்படுகிறது. ஆகையால் சனநாயகக் கோட்பாடுகளை மக்கள் பாதுகாக்கவேண்டும். இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், மொழி, சமுதாயங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சனநாயகக் கோட்டாடுகளைப் பாதுகாக்க உறுதிமொழி ஏற்போம்!”

செல்வி. மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைக்கான நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாக்கவேண்டிய அவசியமுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மௌலானா அபுகலாம் ஆசாத், இராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு, பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், அன்பு மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் மக்களாட்சிச் சுதந்திரத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் நிலைநிறுத்துவோம்.”

திரு. மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸின் தேசியத் தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலட்சிய இலக்கை அடைய நாம் அனைவரும் நவீனத் தகவல் தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமான மனத்துடன் பயன்படுத்தவேண்டும். மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த நாட்டையும் சிறந்ததாக மாற்றமுடியாது. கடமையுணர்வுடன் நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக, அது நாடாளுமன்றமோ, மாநில சட்டப்பேரவைகளோ, உள்ளாட்சி அமைப்புகளோ எதுவானாலும் சரி, மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்ற உரையாடுவது, விவாதிப்பது மற்றும் கலந்துரையாடுவது நமது தலையாய கடமையாகும்.”

உயர்திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவர் 

இந்தியா என்பது ஒரு பண்பாட்டுக்கோ, ஒரு கருத்தியலுக்கோ மட்டுமானதல்ல; மக்கள் அனைவருக்குமானது. அம்பேத்கரின் இந்தப் பரந்த பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் அனைத்துச் சக்திகளுக்கும் எதிராகப் போராடும் நமது மனவுறுதியை நமது அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கூட்டாட்சியியலை நிலைநிறுத்தவும், அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம்நமது அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து நமது குடியரசைக் காப்பதே அரசமைப்புச் சட்டத்திற்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.”

உயர்திரு. மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

தொகுப்பு ஊதிய செவிலியர்களுக்கும், நிரந்தரச் செவிலியர்களுக்கும் ஒரே நிலையான ஊதியம் வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. அதேபோல, தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை, போதிய எண்ணிக்கையில் செவிலியர்கள் நியமிக்கப்படவும் இல்லை; மாறாக, ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்குப் பணியிடமாறுதல் அடிப்படையிலே செவிலியர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். மேலும், செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதுடன், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருக்கும் மேல் முறையீட்டு மனுவைத் திரும்பப்பெறவேண்டும்.”

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர்

news
இந்திய செய்திகள்
வரலாற்றில் ஒளிரும் முகம்!

அண்மையில், நவம்பர் 17 தொடங்கி  21-ஆம் தேதி வரை துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் பங்கேற்ற இந்தியாவின் உள்தயாரிப்பானதி தேஜாஸ்போர் விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில் இமாச்சலபிரதேசம் காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி விங்கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார்.

2011-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர், பல்வேறு கடமைப்பணிகளில் தைரியமாகச் செயல்பட்டு, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமான சாகசப் பிரிவில் பணியாற்றினார். விங் கமாண்டர் நமன்ஷ் சியால் இந்திய விமானப் படையில் சிறந்த வீரராகவும் திறமையான விமானியாகவும் கருதப்பட்டவர். இவர் கோவை சூலூர்  விமானப்படை தளத்தில் எண். 45-ஸ்குவாட்ரன் (பிளையிங் டாகர்ஸ்) பிரிவைச் சேர்ந்தவர். மேலும், அவர் ஏரோ இந்தியா மற்றும் பல ஏர் ஷோக்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். இவரது மனைவியும் தற்போது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. நமன்ஷ் சியாலின் தந்தை ஜெகநாத் சியால், இராணுவ மருத்துவப் பிரிவில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் கல்வித்துறையில் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

துபாயில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடல், துபாயிலிருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு கோவை மாவட்ட கலெக்டரும், போலீசார் மற்றும் விமானப் படையின் உயர்ந்த அதிகாரிகளும் திரண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாட்டு முதல்வர் மு.. ஸ்டாலின் மற்றும் பல தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இவரது இறுதி மரியாதை நிகழ்ச்சியில் மனைவி மற்றும் மகளுடன் அவரது குடும்பத்தினர், இராணுவப் பணியாளர்கள் கலந்துகொண்டு அவரது மீதான மரியாதையைச் செலுத்தினர். மிகவும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர், இந்திய விமானப் படையின் வரலாற்றில் என்றும் ஒளிரும் முகமாகத் திகழ்வார்.