news
இந்திய செய்திகள்
தொகுப்பு: ஸ்ரீநிதி

அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் பற்றி இளையோருக்கு ஆழமாகக் கற்பிக்கப்படவில்லை. அவரைச் சாதிக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. அவர் முழு தேசத்திற்கும் சொந்தமானவர். அவரைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடத்தில், இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் ஆற்றிய பங்கு, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அரசமைப்புத் தொலைநோக்குப் பார்வைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் சனநாயக தேசத்தைக் கட்டமைப்பதிலும் அவர் ஆற்றிய பங்கு, பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக சிந்தனை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய கல்விசார் சாதனைகள் ஆகிய தலைப்புகளில் பாடங்களைக் கற்பிக்கவேண்டும். இந்தப் பாடத்திட்டத்தை 2027-2028 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும்.”

நீதிபதி. எல். விக்டோரியா கௌரி, உயர் நீதிமன்றம்

“2014-ஆம் ஆண்டு முதல் உலகப் பத்திரிகை சுதந்திரப் பட்டியலில் இந்தியா பின்தங்கி வருகிறது. பா... ஆட்சியில் இந்தியா 157-வது இடத்திற்குச் சென்றுவிட்டது. சுதந்திரமான பத்திரிகையாளர்கள் என்பது அரசு சொல்வதை அப்படியே கேட்பதோ அல்லது அரசின் தோல்விகளை மூடி மறைப்பதோ கிடையாது. அரசு அதிகாரிகளைக் கேள்வி கேட்பதும், அரசின் அதிகாரங்களை ஆய்வு செய்வதும், தோல்விக்கு அரசு அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்வதுமே பத்திரிகை சுதந்திரமாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கும், மக்களுக்கும் இடையேயான சனநாயகத்தை ஊடகம் காக்கவேண்டும். பொதுமக்களின் நலனைச் செய்தியாளர்கள் காக்கவேண்டும். செய்தியாளர்களைச் சட்டரீதியில் மௌனமாக்கும் வேலைகளைச் சங்க் பரிவார் அமைப்புகள் அதிகரித்து வருகின்றன. அவதூறு சட்டங்கள், தேசப் பாதுகாப்புச் சட்டப்பிரிவுகள் உள்ளிட்டவை நீதிக்கான கருவியாக மட்டும் பயன்படுத்தப்படாமல், மிரட்டுவதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.”

திருமிகு. மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சித் தலைவர்

.. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான சவால் உருவாகியுள்ளது. ஆதலால் .. தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை மாற்றப்படுவதையும், ..யிடம் வேலைவாய்ப்புகளை இழக்காததையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறைக்குள்ளும், பிற சேவைத் துறைகளிலும் ..யைப் பயன்படுத்தும் வகையில் நாம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.”

திருமிகு. அனந்த நாகேஸ்வரன், தலைமைப் பொருளாதார ஆலோசகர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வளர்ந்த நாடுகளில் பெண்களுக்குச் சமவாய்ப்பு, மதிப்பு, தலைமைப் பதவிகளை மறுக்க முடியாது. ஏனெனில், பெண்களுக்குச் சமவாய்ப்புகளும் தலைமைப் பதவிகளும் கிடைத்தால்தான் நாட்டில் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும். பெண்களின் பங்களிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும் உத்வேகமாக இருக்கும்.”

உயர்திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத்தலைவர்

ஒரு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க விரும்பினால், அது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால், மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவேண்டும் என்று உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை.”  

உச்ச நீதிமன்றம்

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் உள்ளன. அவற்றில் 4.18 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளன. இவ்வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிமன்றக் கட்டடக் கட்டமைப்பு அவசியம். இதில் குற்றவியல் வழக்குகள் மட்டும் 3.50 கோடி. சமுதாயம் சரியாக இருக்கவேண்டுமானால் குற்றவியல் வழக்குகள் குறையவேண்டும். விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 2.25 கோடி வழக்குகள் உள்ளன. தேங்கிக்கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை முடிக்க முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும்.”

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

டெல்லியில் பா... ஆட்சிக்கு வந்தபிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல பணிகளையும் அவர்கள் முழுமையாகச் சிதைத்துவிட்டனர். மத்தியில் இருக்கும் பா... அரசு, மாநில அரசுகளை ஒடுக்குவதற்கும், எல்லா இடங்களிலும் சனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கும் முயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து நிற்கும் ஒருசில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஸ்டாலின், ஒன்றிய அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கை வலுவாக எதிர்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) என்பது சனநாயகத்தின்மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். அது இப்போது தோற்கடிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது மத்தியில் உள்ள மோடி அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி. மோடி அரசின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று நான் நினைக்கிறேன்.”

திருமிகு. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மேனாள் முதல்வர், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்

நம்முடையஇந்தியாகூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லிக்குச் சென்று இந்த மசோதாவைத் தோற்கடித்திருக்கிறார்கள். இதனால் அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடித்துத் தந்த அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது. இந்த அரசியல் சாசனத் திருத்தம் மட்டும் நிறைவேறி இருந்தால், மேலும் மேலும் அரசியல் சாசனங்களைத் திருத்தியிருப்பார்கள். சிறுபான்மை உரிமைகளைப் பறித்திருப்பார்கள். இசுலாமியர்கள் வக்ஃபு சட்டத்தைச் சட்டமாக்கி இருப்பார்கள். எஃப்.சி.ஆர்.. திட்டத்தைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தியிருப்பார்கள். பேச்சுரிமையைக் குறைத்திருப்பார்கள், எழுத்துரிமையைக் குறைத்திருப்பார்கள், அரசியல் சாசனத்தைத் திருத்தாமல் இதையெல்லாம் செய்ய முடியாது. இந்த அரசியல் சாசனத் திருத்தத்தை அனுமதித்திருந்தால், அடுத்தடுத்து அரசியல் சாசனங்கள் திருத்தப்படும். அதைத் தடுத்தது நாடாளுமன்ற உறுப்பினர்கள். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள்.”

திருமிகு. .சிதம்பரம், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர்

தமிழ்நாட்டில் பல இடங்களில் மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர். இந்த ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. மத அடிப்படையில் பிரித்து, சமூகத்தைச் சிதைக்கும் முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை. இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. பல இடங்களில் இந்துகள், முசுலிம்கள், கிறித்தவர்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பிரச்சினைகளை நிர்மூலமாக்கி உள்ளனர். நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். வெறுப்பு அரசியலை எப்படிக் கையாளப் போகிறோம்? என்ன வீச்சில் விரட்டி அடிக்கப் போகின்றோம்? என்பதே! மதம் என்னும் கோடாரி கொண்டு மனித இதயங்களைப் பிளக்கும் சக்திகளை முழு மூச்சில் முழுவதும் விரட்டி அடிக்கவேண் டும்.”

திருமிகு. நா. மணி பேராசிரியர், மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. அதாவது, இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டில் பசியும் - வறுமையும் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்யவேண்டும் என்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, நம்முடைய தமிழ்நாட்டிலும் - இன்னும் பல மாநிலங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பி. சீட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது! இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்து போய்விடும். அத்தகையதொரு நிலையென்றால், டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாகவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டிற்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா? இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் உங்களை அழைக்கிறேன்.”

மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

நாளை நமக்கு எதிராக நடக்கப்போகும் அநீதிக்கு எதிரான குரலாகவும், எழுச்சி குரலாகவும் இருக்கவேண்டும். 33 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை நாங்கள் என்றோ சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் எனும்போது ஒரு திராவிட கட்சி அல்ல, அத்தனை கட்சிகளும் சொல்லிக் கொண்டு இருக்கும் செய்தியை இன்றுதான் புதிய கண்டுபிடிப்பு போல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் (மத்திய அரசு) இப்போது சொல்லும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது தூண்டில் முள்ளின் நுனியில் வைத்திருக்கும் சின்ன மீன். அதைக் கவ்வமாட்டோம். விவாதிப்போம்.”

திருமிகு. கமல்ஹாசன், தலைவர் மக்கள்நீதி மய்யம்

மக்களவையில் மாநிலங்களின் தற்போதைய விகிதாசாரப் பங்கைக் கணக்கில் கொள்ளாமல், தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தொடர மத்திய அரசு முனைப்புடன் இருப்பது, தொகுதி மறுவரையறை மசோதா 2026-இன் வரைவு அறிக்கையைப் பார்க்கும் போது தெரிகிறது. இத்தகைய நடவடிக்கை மிகுந்த அநீதியானது. ஏனெனில், 1976-ஆம் ஆண்டின் தேசிய மக்கள்தொகைக் கொள்கையை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுத்திய கேரளா உள்ளிட்ட மாநிலங்களை இது தண்டிப்பதாக அமையும். மறுபுறம், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பின்தங்கிய மாநிலங்கள், தங்கள் மெத்தனமான செயல்பாட்டிற்காக (கூடுதல் தொகுதிகள் மூலம்) வெகுமதி பெறுவது போல இது அமையும். கூட்டாட்சி தத்துவம் நமது அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு. மக்களாட்சியில், பிரதிநிதித்துவத்திற்கான அடிப்படை நோக்கம் வெறும் மக்கள்தொகை எண்ணிக்கையாக மட்டும் இருக்கமுடியாது. முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் உணர்வுகளையும் குறிப்பாக, மாநிலங்களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அணுகுமுறையைக் கையாள வேண்டும். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடனான அணுகுமுறை என்பது மிகவும் அவசியமானது. அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட உள்ள ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் தற்போதைய முயற்சியானது, நமது அரசமைப்பு உருவாக்கத்தின் அடிப்படையாக இருந்தஒருமித்த கருத்துஎன்னும் உணர்வைச் சந்தேகத்திற்கு இடமின்றி சிதைத்துவிடும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையா இது?” 

மாண்புமிகு. பினராயி விஜயன், கேரள முதல்வர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா... அமைச்சர்களும் பா... முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வார்களா? தமிழ் மண்ணில் நின்று மும்மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்குத் தருவது எவ்வளவு? பா... ஆளும் மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? என வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள்மீது தாக்குதல் தொடுக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா? கண்ணியமற்ற அவதூறுகளுக்குப் பதிலாக, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்? தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியிலிருந்து படையெடுத்து வந்தாலும் தமிழ்நாடு தலைகுனியாது.”

மாண்புமிகு மு. . ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

புதுச்சேரி மண்ணை நேசிக்கிறேன்; மக்களுடைய அன்பு, நட்பு, தோழமை இவற்றையெல்லாம் நினைத்து அடிக்கடி இங்கு வர ஆசைப்படுகிறேன். ஆனால், இப்போது இங்கு வரும்போது என் மனத்தில் கவலைகள் படர்கின்றன. புதுச்சேரியை ஆட்சி செய்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்லர்; எங்கோ இருந்து புதுச்சேரியை ஆட்சி செய்கின்றனர். இங்கு நடக்கும் ஆட்சி மக்களின் விருப்பத்தைச் செயல்படுத்தும் அரசு அல்ல; டெல்லியிலிருந்து கருத்துகளைத் திணிப்பவர்களின் கீழ் செயல்படும் அரசாக உள்ளது. பா... கருத்தியலை புதுச்சேரியில் புகுத்த நினைக்கின்றனர். புதுச்சேரி மக்களின் எண்ணங்களை ஏற்று நடத்தும் ஆட்சி இங்கு நடக்கவில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைமீறி துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். எனவேதான், மாநில அங்கீகாரம் வேண்டும் என்று கூறுகிறோம்.” 

திருமிகு. இராகுல் காந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

பெற்றோரைப் புறக்கணிக்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்தில் 15 விழுக்காடு அல்லது ரூபாய் பத்தாயிரம் (இரண்டில் எது குறைவோ) பிடித்தம் செய்து பெற்றோருக்கு வழங்க வகை செய்யும் மசோதா தெலுங்கானா சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 29 - ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை. பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைச் சமுதாயம் புறக்கணிக்கும் சூழல் ஏற்பட வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த நியமன அதிகாரி அமைப்பு மாநில அரசால் அமைக்கப்படும். பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுபவர்கள் இந்த அமைப்பிடம் புகார் அளிக்கலாம். அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள் மட்டுமின்றி, எம்.எல்.., எம்.எல்.சி., மாநகராட்சி உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.”    

மாண்புமிகு ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் சுமார் எட்டு நூற்றாண்டுகளாக மாபெரும் அறிவு மையமாக விளங்கியது. அதன் வீழ்ச்சியானது இந்தியாவிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் பேரிழப்பாக அமைந்தது. தற்போது இந்தப் பல்கலைக்கழகம் புத்துயிர் பெற்றுள்ளது. உலகம் பல சிக்கலான சவால்களைச் சந்தித்து வருகின்றது. அதேவேளையில் கருணைமிக்க, சுதந்திரமான, எதையும் ஆராய்ந்து வலுவாக முடிவு எடுப்பதற்கான சிந்தனையும் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் உலக அளவில் முன்னணிக் கல்வி நிறுவனமான நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.” 

திருமிகு. முர்மு, குடியரசுத் தலைவர்

மானம் என்னும் தலைப்பை உடைய வான்புகழ் வள்ளுவரின் அதிகாரத்திற்கு வான்புகழ் உரையாளன் பரிமேலழகர்நிலை தாழாமைஎன்று பொருள் எழுதுவார். ‘அடைகின்ற சுகம் பெரிதல்ல; வீழ்ச்சியிலும் யானைபோல் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே பெருமைஎன்பார். தனிமனிதர்களின் பெருமை - சிறுமை என இவை பதவிகளினால் வருவதில்லை. வாழும் முறையினாலேயே வருகிறது. சனநாயகத்தின் ஒரே ஒரு சிறந்த கூறு, இரத்தச் சிந்தல்கள் இல்லாமல் ஆட்சி மாற்றம் நிகழ்த்தமுடியும் என்பதுதான். வாளும் வேலும் இல்லாமல் வாயாலும் பேனாவாலும் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும்!”

திருமிகு. பழ. கருப்பையா, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்

சிறப்புக் குழந்தைகளுக்குப் பள்ளி - கல்லூரிகளில் 5%  இடஒதுக்கீடும், வேலை வாய்ப்புகளில் 4%-மும் அரசு அளித்து வருகிறது. அந்தக் குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பெற்றோர், சிறப்பு ஆசிரியர்கள் தேவையான திறன் பயிற்சியும், வழிநடத்துதலும் அளிக்க வேண்டும். சிறப்புக் குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை முன்னதாகவே கண்டுபிடித்துப் பயிற்சி அளிக்கவேண்டும்.”

திருமிகு. எஸ். மதுமதி, செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு