1. இயேசுவினுடைய சிலுவையின் அடியில் மரியா மற்றும் பிற பெண்கள் இருந்ததை நினைவுகூர்ந்த பிறகு நற்செய்தியாளர் யோவான், “இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ‘அம்மா, இவரே உம் மகன்’ என்றார். பின்னர் தம் சீடரிடம், ‘இவரே உம் தாய்’ என்றார்” (யோவா 19:26-27) என்று கூறுகின்றார்.
நெஞ்சை
நெகிழவைக்கும் குறிப்பிடத்தக்க இந்த வார்த்தைகள் ஒரு திருவெளிப்பாட்டுக் காட்சியாக (Revelation Scene) இருக்கின்றன.
இவ்வார்த்தைகள் இறந்து கொண்டிருக்கின்ற கிறிஸ்துவின் ஆழமான உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. மேலும், கிறித்தவ நம்பிக்கை மற்றும் ஆன்மிகத்தின் அர்த்தத்திற்கானதொரு மிகப்பெரிய பொருளைக் கொண்டுள்ளன. தமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் தம் தாயிடமும், தாம் அன்பு செய்த சீடரிடமும் பேசுகின்றபோது, சிலுவையில் அறையப்பட்ட மீட்பர், மரியாவுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே ஒரு புதிய உறவை ஏற்படுத்துகின்றார்.
சில
வேளைகளில், இது இயேசு - தமக்குப் பிறகு யாரைத் தமது அன்புச் சீடரிடம் ஒப்படைக்கின்றாரோ, அது தன் தாய்மீது கொண்ட மகனுக்குரிய கடமையின் வெளிப்பாடு என்று மட்டுமே பொருள்படுத்தப்படுவதால் இந்த வார்த்தைகள் ஒரு குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிலையற்றத் தேவையையும் தாண்டிச் செல்கின்றது. உண்மையில், பல திரு அவைத்
தந்தையர்களின் விளக்கங்களாலும், பொதுவான திரு அவைக் கருத்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட இயேசு கூறிய வார்த்தைகளைக் கவனமாக ஆய்வு செய்யும்பொழுது, மீட்புத் திட்டத்தில் மரியாவின் பங்கைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இயேசுவின் இரண்டு வகையான ஒப்படைப்புகளுமே நமக்கு
அமைகின்றன.
இயேசு யோவானிடம்
மரியாவை ஒப்படைத்து அவரது
தியாகத்தை
முழுமையாக்குகின்றார்
தாம்
இறக்கும் நேரத்தில் இயேசுவின் வார்த்தைகள், உண்மையில் அவரின் முதல் நோக்கமானது அவரது அன்னையை யோவானிடம் ஒப்படைப்பது அல்ல; மாறாக, அவருக்கு ஒரு புதிய தாய்மைப் பங்கைக் (Maternal Role) கொடுக்கவே என்பதைக் காட்டுகின்றது. மேலும், இந்தப் பெயரெச்சமாகிய (Epithet) ‘பெண்ணே’ என்ற வார்த்தையை ‘தாய்’ என்ற அவரது நிலையின் ஒரு புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்கின்ற நிகழ்வாகிய கானாவூர் திருமணத்திலும் இயேசு பயன்படுத்துகின்றார். இவ்வாறு மீட்பரின் வார்த்தைகள் தாய் - மகன் இவர்களுக்கு இடையேயான அன்பின் சாதாரணமானதோர் உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல; மாறாக, அவ் வார்த்தைகள் மரியாவை ஒரு மிக உயர்ந்த நிலையில் வைப்பதற்கே என்பதைக் காட்டுகின்றன.
2. இயேசுவின்
இறப்பு மரியாவுக்கு ஆழமான துக்கத்தை ஏற்படுத்தினாலும், அது அவரது அன்றாட வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை: உண்மையில், பொது வாழ்வைத் தொடங்குவதற்காக நாசரேத்திலிருந்து விலகிச் சென்றதன் வழியாக, இயேசு அவரின் தாயை ஏற்கெனவே தனிமையில் விட்டுவிட்டார். மேலும், சிலுவையின் அடியில் அவரது சொந்தச் சகோதரியும், குளோப்பாவின் மனைவியுமான மரியாவின் உடனிருப்பானது,
மரியா அவரது குடும்பத்தோடும் உறவினர்களோடும் நல்லதோர் உறவு வைத்திருந்தார். அவருடைய மகனின் இறப்பிற்குப் பிறகு அவர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு நம்மை
இட்டுச்செல்கின்றது.
அதேநேரத்தில்,
இயேசுவின் இந்த வார்த்தைகள் அவரது மீட்புப் பணியின் சூழலில் அவற்றின் உண்மையான அர்த்தத்தைப்
பெறுகின்றன. மீட்புப் பலியின் நேரத்தில் பேசப்பட்ட இந்த வார்த்தைகள் குறிப்பாக, இந்த உன்னதமான சூழலிலிருந்து அவற்றின் உயர்ந்த மதிப்பைப் பெறுகின்றன. உண்மையில், இயேசு தம் தாயிடம் கூறிய வார்த்தைகளுக்குப் பிறகு, நற்செய்தியாளர் ஒரு முக்கியமான சொற்றொடரைச் சேர்க்கிறார்: “அனைத்தும் நிறைவேறிவிட்டன என்பதை அறிந்த இயேசு...” (யோவா 19:28). இதன் மூலம் அவர் தம் தாயை யோவானிடமும், அவர் மூலமாக எல்லா மனிதர்களிடமும் ஒப்படைத்து, தம் தியாகத்தை நிறைவுசெய்தார் என்பதை வலியுறுத்த விரும்பியது போலும் உள்ளது.
3. இயேசுவின்
வார்த்தைகளில் வெளிப்பட்ட உண்மை யாதெனில், சீடருடனான உறவில் மரியா பெற்ற புதிய தாய்மை, எல்லா மக்களுக்காகவும் தம் உயிரை அர்ப்பணிக்க இயேசுவைத் தூண்டிய மாபெரும் அன்பின் மற்றோர் அடையாளமாகும். கல்வாரியில் இந்த அன்பு, ஒரு தாயை அதாவது அவரின் தாயைப்
பரிசாக அளிப்பதன் மூலம் வெளிப்படுகிறது. இவ்வாறு அவர் நமது தாயாகவும் ஆகிறார்.
மரபுப்படி,
புனித கன்னி மரியா உண்மையில் யோவானைத்தான் தன் மகனாக அங்கீகரித்தார் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்; ஆனால், இந்தச் சிறப்புரிமையானது, தொடக்கத்திலிருந்தே கிறித்தவர்களால் முழு மனிதகுலத்துடனான ஓர் ஆன்மிகப் பிறப்பின் அடையாளமாகவே பொருள்கொள்ளப்பட்டு வருகிறது.
மரியாவின்
உலகளாவிய தாய்மையானது, அந்த கானாவூர் திருமணத்தின் மற்றும் கல்வாரியின் பெண்ணான, வாழ்வோர் அனைவரின் தாயாகிய (தொநூ 3:20) அந்த ஏவாளை நினைவுபடுத்துகின்றது. இருப்பினும், ஏவாள் இந்த உலகில் பாவத்தைக் கொண்டுவரக் காரணமானபொழுது, புதிய ஏவாளாகிய மரியாவோ மீட்பின்
நிகழ்வில் ஒத்துழைக்கின்றார். இவ்வாறு, அன்னை மரியாவில் ‘பெண்ணானவள்’ மறுசீரமைக்கப்படுகின்றாள்
மற்றும் அவரது தாய்மையானது கிறித்தவர்கள் மத்தியில் புதிய வாழ்வை எடுத்துச் செல்கின்றது.
இந்தப்
பணியின் காரணமாக, அந்த அன்னை தன் ஒரே மகனின் மரணத்தை ஏற்கும் வேதனை மிகுந்த தியாகத்தைச் செய்யும்படி கேட்கப்படுகிறார். ‘அம்மா, இவரே உம் மகன்’ என்ற இயேசுவின் வார்த்தைகள், முந்தைய உறவை விரிவுபடுத்தி, விரிவாக்கவிருந்த புதிய தாய்மை உறவை மரியா உணர்ந்துகொள்ள உதவுகின்றன. எனவே, இந்தத் திட்டத்திற்கு அவர் அளித்த ‘ஆம்’ என்பது, இறைவிருப்பத்திற்கு இணங்குவதன் மூலம் அவர் தாராளமாக ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் தியாகத்திற்கான சம்மதமாகும். கடவுளின் திட்டத்தில் மரியாவின் தாய்மை ஆரம்பத்திலிருந்தே முழு மனிதகுலத்திற்கும் விரிவடைய விதிக்கப்பட்டிருந்தாலும், கல்வாரியில் கிறிஸ்துவின் தியாகத்தின் மூலமாக மட்டுமே அதன் உலகளாவிய பரிமாணம் வெளிப்படுகிறது.
மரியா அனைத்துச்
சீடர்களின்
தாயாகின்றார்
இயேசுவின்
‘அம்மா, இதோ உம் மகன்’ என்ற வார்த்தைகள், அவை குறிப்பிடுவதையே மெய்ப்பிக்கின்றன. அதன் மூலம் மரியா யோவானுக்கும், இறையருள் என்னும் கொடையைப் பெறவிருந்த சீடர்கள் அனைவருக்கும் தாயாகிறார்.
4. சிலுவையில்
இயேசு, மரியாவின் உலகளாவிய தாய்மையை முறைப்படி அறிவிக்கவில்லை. ஆனால், அவருக்கும் - அன்புக்குரிய சீடனுக்கும் இடையே ஓர் உறுதியான தாய் - மகன் உறவை ஏற்படுத்தினார். ஆண்டவரின் தெரிவில், இந்தத் தாய்மை தெளிவற்ற முறையில் விளக்கப்படக் கூடாது. அதற்கு மாறாக, தனிப்பட்ட முறையில் கிறித்தவர்களோடு மரியா கொண்டிருந்த நெருக்கமான, தனிப்பட்ட உறவைச் (Intense, personal
relationship) சுட்டிக்காட்டவேண்டும் என்ற அவரது அக்கறையை நாம் காணலாம்.
நாம்
ஒவ்வொருவரும், மரியாவின் உலகளாவிய தாய்மை எனும் உறுதியான உண்மையின் வழியாக, அவரைத் தமது சொந்தத் தாயாக முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவருடைய தாய்மை அன்பிற்கு நம்பிக்கையுடன் நம்மையே கையளிப்போம்.
மூலம்:
Pope John Paul II, To the disciple He said, “Behold your mother”,
in «L’Osservatore Romano», Weekly Edition in English, 30 April 1997, p.11.