பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமரிடம் அசிரீரி வினாக்கள் பல விடுக்கிறது. அதில் ஒன்று ‘காற்றைவிட வேகமானது எது?’ தருமரின் உடனடி பதில் ‘மனம்.’ ஆம், நம் மனம்போல் வேகமாக இயங்கக்கூடிய ஏதேனும் ஆற்றல் உண்டா?
நம்
வேகமான ‘மனம்’ போலவே எல்லாமும், எல்லா இடத்திலும் நடந்தே ஆகவேண்டும் எனும் எண்ண ஓட்டத்திற்குள் எதிர்பார்ப்புகளுக்குள் இவ்வுலகம் அமிழ்ந்து கொண்டிருக்கிறது.
‘Survival
of the fittest’ எனும் எதார்த்தக் கோட்பாட்டினைக் கூறிய ஹெர்பர்ட் ஸ்பென் சரின் சொல்லாடல் தீர்க்கத்தரிசனமாக மாறிக் கொண்டிருக்கிறதை நிகழ்காலம் எண்பித்துக் கொண்டிருக்கிறதல்லவா! இந்தப் பிரபஞ்சத்தின் அதிமிக வேகத்துடன் நாமும் சேர்ந்து தள்ளப்பட்டு விடுவோமோ என எல்லோர் மனத்திலும்
ஒரு சிறு கலக்கம் உள்ளது.
‘விளைவு’
- இது மட்டுமல்ல: ‘Short and crispy’
- இத்தகு செய்திகளே வைரல் ஆகின்றன. WhatsApp-இல்
கூட Tnq – நன்றி,
n – and என
எழுத்துகள் சுருங்கி வார்த்தைகளை விளங்கவைக்கின்றன. நாமும் இதைப் புரிந்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தம்!
‘கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்’ என்ற
விருதுவாக்குடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாய் ‘நம் வாழ்வு’-
நம் வாழ்வுடன் இணைந்து இயங்கிக்கொண்டே மேற்கூறிய ‘விரைவுக்குள்’ குறுஞ்செய்திகளுக்குள்
நுழைந்து ஓர் ஆண்டு நிறைவுபெற்று, சின்னஞ்சிறு குட்டிக்குருவியாக நம் கைகளில் மின்னஞ்சல் நாளிதழாகத் தவழ்கிறது. மனமார வாழ்த்துவோம்.
பல
நூற்றாண்டு காலம் வாழ்க!
நோய்
நொடி இல்லாமல் வளர்க!!
ஊராண்ட
மன்னர் புகழ் போல
உலகாண்ட
புலவர் தமிழ் போல!!!
சின்னஞ்சிறு
தேனீக்களே
இனிய
தேனைத் தருகின்றன!
சின்னஞ்
- சிறுவர்கட்கே
விண்ணரசு
உரித்தாகிறது!!
சின்னஞ்சிறு
பெத்லகேமே
உலக
மீட்பரை ஈந்தது!!
ஆக,
சின்னஞ்சிறு குறுஞ்செய்திகளாய் வலம் வரும் நம் ‘நம் வாழ்வு’ நாளிதழும் சிறியதாய், அளவாய், அழகாய், அருமையாய் உலா வருகிறதே!
நாம்
சிறுவயதில் இருந்தபோது படித்த கதைகளில் ஒரு மந்திரவாதி கையில் மை தடவ, காணாமல்
போன இளவரசி, அவளிருக்கும் இடம் தெரியும். அட! அதேதான் இன்றும்!
உலகமே
நம் கைப்பேசிக்குள் அடங்கி, அனைத்தையும் காட்டும் விந்தை! - அதேதான்! நம் வாழ்வின் மின்னஞ்சல் நாளிதழில் கையடக்கச் செய்திகளாகி மிளிரும் அழகு! ஆஹா!!
Tv, WhatsApp, Insta, Facebook என
பல சமூக ஊடகங்கள், செய்தித்தாள்கள் பல பல செய்திகளை
reels ஆக real போலத்
தருகின்றன. ஆனால், காலையில் இவற்றின் முகத்தினைத் திறந்தால் கொலை, கொள்ளை, வன்முறை, ஆர்ப்பாட்டங்கள், அடக்குமுறைகள், அரசியல் நாடகங்கள், விபத்துகள், இறப்புகள்!
எல்லாமே
எதிர்மறைச் செய்தித் திணிப்புகள்! அதிகாலையில் இதை வாசிக்கும் மனித மனம் - இதையே அசைபோட நாள் முழுவதும் ஒருவித மன வேதனை, பயம்,
துக்கம், சுயநலம் போன்ற உணர்வுகளுடனே உலா வருகின்றனர் அல்லவா! செய்தித் தாள்களின் தாக்கம் அல்லவா இது!
நம்
‘நம் வாழ்வு’ மின்னஞ்சலை, நாளிதழைக் கடந்த ஓராண்டாகப் படிக்கிறேன். நல்லவர்களின் நாடித்துடிப்பை உணர்கிறேன். தலைமை ஆசிரியரின் - அவரது குழுவின் ‘கண்துஞ்சா’
வேலைத் திறன் கண்டு மகிழ்கிறேன். உலகெங்கும் நீண்டு செய்திகளைப் பெறும் உழைப்பைக் கண்டு வியக்கிறேன். சமூக அக்கறையைக் கண்டு களிக்கிறேன். சவால்களைத் துணிவுடன் சந்திப்பதைக் காண்கிறேன்.
நாளிதழின்
அமைப்பு, வண்ணங்கள், பத்திகள், இருவரிச் செய்திகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, குஜராத் முதல் மேற்குவங்கம் என வியாபித்துச் செய்திகளை
அள்ளித்தரும் வேகம், உலகத் திரு அவைச் செய்திகள், கத்தோலிக்க நிகழ்வுகளின் தொகுப்பினைச் சுடச்சுடத் தரும் பாங்கு அனைத்தையும் படித்துத் தெளிகிறேன்.
ஊடகப்
பொறுப்புணர்ந்து நம் தலைமை ஆசிரியர் அருள்தந்தை இராஜசேகரன் நல்கும் சிறப்புக் கட்டுரைகள் தாங்கிவரும் கருத்துகள் வித்தியாசமானதாய், உன்னதமானதாய், சமூக அக்கறை கொண்டதாய் அமைகின்ற சிறப்பினைப் படித்து மகிழ்கிறேன்.
சீரிய
சிந்தனை, சமுதாயத்தின் மீது அக்கறை, தியாகம், இளைய சமுதாயம் பகுத்தறிவுடன் நற்குணங்களை வளர்த்துக்கொண்டு உயர வேண் டுமே தவிர, ஊடகங்களுக்குள் மூழ்கி வீணாகிவிடக் கூடாது; தடம் புரண்டு சென்றுவிடக் கூடாது என்ற நல்லெண்ணம்; ‘நான்’,
‘எனது’ என
உணர்வு மாற்றம் பெற்று ‘நமது’ எனும் பொதுநோக்கு வர, வளர, உயர நம் வாழ்வின் மின்னஞ்சல் நாளிதழின் ஒவ்வோர் எழுத்தும் உழைக்கிறது எனில் மிகையில்லையே!
ஆசிரியரின்
தமிழ்ப்புலமை - அவர் எடுத்தாளும் குறள்பாக்களும் - சங்கப் பாடல்களும் - இன்றைய ‘ஹைகூ’ கவிதைகளின் பயன்பாடும் கொண்டு சுட்டும் அறிவுரைகள் - துணிவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி உண்மையை, சத்தியத்தைத் தெளிவாகப் பதிவிடும் தன்னம்பிக்கைச் சிறப்புக் கட்டுரைகள் செழுமை! அருமை!
உள்ளத்தின்
நிறைவையே வாய்பேசும் - பேனா எழுதும்!
சமூக,
ஆன்மிக, அரசியல், வாழ்வியல் வழிகாட்டியின் செல்லக் குழந்தையாகத் தொட்டிலில் தவழும் ‘நம் வாழ்வு - மின்னஞ்சல் நாளிதழ்’ நடந்து, வளர்ந்து, உயர்ந்து, செழித்து, இப்புண்ணிய தேசத்தை மென்மேலும் செழிப்பாக்க இதயம் கனிந்த, நிறைந்த வாழ்த்துகளும் செபங்களும்!