news-details
உலக செய்திகள்
“விளையாட்டு அமைதிக்கான தூதுவன்”- திருத்தந்தை லியோ

இத்தாலியின் தாரான்டோ நகரில் ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற்று வரும் 20-வது மத்திய தரைக்கடல் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, திருத்தந்தை லியோ பகிர்ந்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில், “இப்போட்டிகள் மத்திய தரைக்கடல் பகுதி மக்கள் மத்தியிலும், உலக அளவிலும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தைப் பறைசாற்றும் ஓர் அடையாளமாகத் திகழவேண்டும்என்று தெரிவித்துள்ளார். போட்டிகளை மனிதக் குடும்பத்தின் சந்திப்பாக மாற்றும்போது விளையாட்டு முழுமை பெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இப்போட்டிகளில் வத்திக்கானின்அத்லெடிகா வத்திக்கானாஅமைப்பைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். 26 நாடுகளைச் சார்ந்த சுமார் 4000 வீரர்கள் 33 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.