news-details
சிறப்புக்கட்டுரை
நகரமயமாக்கும் ஏ.ஐ. அறிவியல் (உலகம் உன் கையில் – 28)

உடலை வருத்துவது மனிதனா? அல்லது அறிவியலா? தொடக்ககால மனிதன் காட்டில் ஒரு புலியைக் கண்டபோது அவனுக்குள் மன அழுத்தம் (Stress) எட்டிப்பார்த்தது. ஆனால், அந்தப் புலியிடமிருந்து தப்பித்து மரத்தில் ஏறியதும் அல்லது அதை வீழ்த்தியதும் அவனது மன அழுத்தம் முடிவுக்கு வந்தது.

ஆனால் இன்று? காலையில் அலாரம் அடிப்பதில் தொடங்கி, வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்களின் அறிவிப்புகள் என அன்றைய பணி முடிந்து தூங்கச் செல்லும் வரை நம்மைத் துரத்தும்டிஜிட்டல் புலிகள்ஏராளம்!

தொழில்நுட்பத்தின் அசுர வேகத்திற்கும், மனித உடலின் இயற்கை வடிவமைப்பிற்கும் இடையே நடக்கும் இந்த ஆர்வம் மிகுந்த மோதலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தொடக்க மனிதனின்சிர்காடியன் சுழற்சி- இன்றைய .. மூளை வருத்துதல்

இயற்கையோடு இணைந்து, சூரியன் உதிக்கும்போது விழித்து, மறையும்போது உறங்கிய தொடக்க மனிதனின் வாழ்க்கை முறைதான்சிர்காடியன் சுழற்சி (Circadian Rhythm) எனப்படுகிறது. அன்று பூமியின் சுழற்சிக்கு ஏற்ப அவனது மூளை இயங்கியது. ஆனால், இன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் உலகை இயக்கும் வேகத்தை நம் உடலால் ஈடுகட்ட முடிவதில்லை என்று மனிதப் பரிணாம உடலியல் வல்லுநர் லாங்மேன் குறிப்பிடுகிறார். இதனை இன்றைய உலகில் .. - மூளை வருத்துதல் (Al Brain fry) என்று அறியப்படுகிறது.

நாளுக்கு நாள் மனிதனின்மீது விழும் அழுத்தமும், சுகாதார இழப்புகளும், நவீன இடர்பாடுகளும் திணிக்கப்படுகிறதா? அல்லது இன்றைய தொழில் மயம் மனித உடலியலைக் கட்டாயப்படுத்துகிறதா? என்ற நிலை உருவாகியுள்ளதை உணர்கிறோம்.

தொழில்நுட்பமும் மனித இடைவெளியும்

19-ஆம் நூற்றாண்டில், கார்ல் பென்ஜ் என்பவருக்கு உள் எரிபொறி (IC Engine)  காப்புரிமை 1879-ஆம் ஆண்டு வழங்கப்பட்டு, மோட்டார் வாகனங்கள் உற்பத்தியும் தொடங்கியது. பின்னர் 1908-ஆம் ஆண்டிலிருந்துதான் ஹென்றி ஃபோர்ட் பெருமளவில் மோட்டார் வாகனங்களைச் சந்தையில் இறக்கினார் என்றாலும், அப்போதிருந்த குதிரை வண்டித் தொழிலை இது பாதிப்படையச் செய்யவில்லை. இத்தொழில் சமுதாயம் தன்னை மாற்றியமைத்துக்கொள்ள குறைவான கால அவகாசம் அளித்தாலும், ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தது. ஆனால், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் காணும் தொழில்நுட்ப மாற்றங்கள் வெகு வேகமாகப் பரவுவதைப் பார்க்கிறோம். உதாரணமாக, நடைமுறையிலிருக்கும்ஊபர்(uber) - வாடகைச் சேவை, சிறிய இடைவெளியில் ஏற்கெனவே இயங்கி வந்த மோட்டார் வாடகைத் தொழிலைக் கழுத்தை நெரிக்கும் போட்டிக்குத் தள்ளியதையும், இப்பிரிவினரின் தவிப்பும் நம் கண்முன்னே நடந்தது. இத்தகைய நெருக்கடிகளும் அல்லல்களும் ..-யின் வருகையினால் பல துறைகளில் வேகமாக உருவெடுப்பது, எவ்விதத்தில் மனித உடல்நலத்திற்கு ஏற்புடையதாயிருக்கும் என்ற வினாவும் எழுகிறது.

உடலியலும் தொழில்நுட்பமும்

இன்று நாம் சந்திக்கும் அழுத்தங்களுக்கும், உடல் சார்ந்த நோய்களுக்கும் உடல் அல்லது பாரம்பரிய இடர்பாடுகளைக் காரணமாகக் கூறமுடியாது; ஏனென்றால், தொடக்க காலத்துச் சூழலுக்கேற்ற உடலமைப்பைப் பெற்றிருக்கும் நாம், அதனை இன்றைய அதிவேக மாற்றங்களுக்குள்ளாக்குகிறோம் என்பதே உண்மை. கடந்த நூற்றாண்டில் உருவெடுத்த அதிவேகத் தொழில்நுட்ப மாற்றங்கள் முதல், இன்றைய .. வரை, மனிதர் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள தேவையான அவகாசம் அளிக்கவில்லை என்பதற்கு இன்றைய உலகளாவிய கருவுறு வீழ்ச்சி, அசாதாரண நோய்கள் என்பவை சான்றாக உள்ளது என்கிறது ஓர் ஆய்வு

போக்குவரத்து, வேலை, சமூக ஊடகம், எப்போதுமில்லாத உணர்வலைகளைத் தூண்டும் காரணிகள் என்பவைகளுக்குப் பஞ்சமில்லாத நாள்களில் இன்று நாம் வாழ்கிறோம். ஒருவேளை, இப்பூவுலகில் தேவைக்கதிகமான செல்வம், வசதிகள், உடல்நலப் பாதுகாப்பு பெற்றவர்களென்று திருப்தியடையலாம். ஆனால், தொழில்நுட்பத்தினால் அடைந்த சாதனைகள், நம் உடலின் எதிர்ப்புச் சக்தி, அறிவாற்றல், உடல்சார்ந்த மற்றும் குழந்தை பிறப்பு இயக்கங்களை மறைமுகமாகப் பாதிக்கிறதென்று மனிதப் பரிமாணம் மற்றும் உடலியல் சூழல் கழகத் தலைமை ஆய்வாளரான கோலின் ஷா கூறுகிறார்.

இன்றுள்ள அதிவேகத் தொடர்ச்சியான உடலைப் பாதிக்கும் அதிர்வுகளும் அழுத்தமும் உளைச்சலும் உடலின் முக்கியச் சுரபி மண்டலங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால் பலவித நோய்களுக்கும், ஆயுள் குறைவிற்கும் காரணமாகி விடுகிறதென்றும் அறியப்படுகிறது.

தொழில்நுட்பமும் நகரவாழ்வும்

.நா. சபையின் அறிக்கையின்படி 2050-ஆம் ஆண்டிற்குள், உலக மக்கள்தொகையில் 70% பேர் நகரவாசிகளாயிருப்பர் என்பதாகும். இன்றளவில் நம்மில் பெரும்பாலோர் 90% பணி நேரத்தை மூடிய அலுவலக அறைகள், செயற்கை ஒளியில் செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய பயணங்களும் அவ்வாறே அமையத் தொடங்கிவிட்டன; நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் மற்றும் .. கருவி கட்டமைப்புகள், குளிர்சாதன அடிப்படையில் இயங்குவதால் நம்மையும் இதில் உட்படுத்துகிறோம்; ஆயிரக்கணக்கானோரிடம் திரை-தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுகிறோம்; நம் முன்னோர் நினைத்துப் பார்க்காத செயற்கை உணவு வகைகளை உட்கொள்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்று, குடிநீர் என்பவைகளின் தூய்மையும் கேள்விக்குறியாயிருக்க இன்று பயனிலுள்ள தொலைத்தொடர்பு, மின்னணு சாதனங்கள், மருத்துவக் கருவிகளினால், 100 ஆண்டிற்கு முன்பில்லாத மின்காந்த ரேடியோ கதிர்வீச்சினால் நம்மை அறியாமலேயே பாதிக்கப்படுகிறோம். இவ்வாறு .. வழிநடத்தும் அரசு, தனியார் மென்பொருள் சார்ந்த அலுவலகங்களில் செயற்கைச் சூழல்களைச் சந்திக்கும் நாம், இன்றும் கற்கால மனித உடலமைப்பைத்தான் பெற்றிருக்கிறோம்.

முன்னோர் வாழ்ந்த காடுகளுக்கு நாம் செல்ல வேண்டாம்

வேலைப்பளுவிலும், கான்கிரீட் காடுகளிலும் சிக்கித்திணறும் நமக்கு இயற்கை அன்னையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. இதற்காக நம் முன்னோர் வாழ்ந்த அடர்ந்த காடுகளுக்கு நாம் மூட்டை முடிச்சுகளோடு போக முடியாதென்றாலும், காடுகளை நம் நகரங்களுக்குள் வரவழைக்க முடியும்.

காலையில் எழுந்ததும் கரும்புகையும், வாகன இரைச்சலும்தான் நம்மை வரவேற்கின்றன. இதற்கு நடுவே, நகரங்களில் நாம் உருவாக்கும் பசுமைக் குறுங்காடுகளில் தினமும் சிறிது நேரம் இந்த மரங்களின் நிழலில் உலா வருவதால் நாம் அழுத்தத்திலிருந்து விடுதலைபெறும் வாய்ப்பினைப் பெறுகிறோம். நாம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பறவைகள், அணில்கள், பூச்சிகளின் பூர்வீகச் சொத்தில் ஒரு சிறிய பகுதியை அவற்றிற்கே திரும்பக் கொடுக்கும் பெருமையும் நமக்குக் கிடைக்கும். தூய்மையான காற்று, கண்களுக்கு இதமளிக்கும் பசுமை எல்லாம் முற்றிலும் இலவசம் என்பதை நினைக்கக்கூட நேரமில்லாத நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரே வகை மரத்தை நட்டு வைப்பது காடாகாது. கலப்பு மரங்களும், பல்வேறு தாவரங்களும் இணைந்து வளரும்போதுதான் அது உண்மையான காடாகிறது என்பதை அறிவோம். இந்தக் கலப்புக் காடுகள் வெறும் நிழலை மட்டும் தருவதில்லை; இயற்கையின் சீற்றங்களைத் தாங்கும் அரணாக நிற்கின்றன. நிலத்தடி நீரைச் சீராக்கி, நச்சு கலந்த கரியமில வாயுவை உறிஞ்சிச் சேமித்து, இப்பூவுலகைக் குளிர்விக்கும் கருவியாகச் செயல்படுகின்றன.

இன்றளவில் நகரங்களில் இன்னும் எத்தனையோ வெற்றுத்திடல்களும், பயன்படுத்தப்படாத நிலப்பகுதிகளும் அனாதைகளாகக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே விட்டுவைக்காமல், குறுங்காடுகளாக மாற்றலாம்; வானம் தரும் அரிய மழைநீரை, சாக்கடை வடிகால்களுக்குள் அனுப்பி வீணாக்காமல், பழைய நீர் ஆதாரங்களை (குளங்கள், ஏரிகள்) மீட்டெடுத்துப் பாதுகாப்பதும், புதிய நீர்நிலைகளை உருவாக்குவதும் நம் உடனடிக் கடமையாயுள்ளது.

உலக வெப்பமயமாதலை எதிர்கொள்ள இந்தத் தலைமுறைக்கும், வரும் சந்ததியினருக்கும் ஆற்றும் மிகப்பெரிய தொண்டு இதுவாகத்தானிருக்கும். கான்கிரீட் நகரங்களைச் சுவாசிக்கும் நகரங்களாக மாற்றுவோம்! பசுமையைக் காப்போம்!