news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (30.08.2026)

இசை என்பது திருவழிபாட்டை அலங்கரிக்கும் ஒன்றல்ல; மாறாக, திருவழிபாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இறைவேண்டலின் வெளிப்பாடாகவும் உள்ளது.”

ஆகஸ்டு 19, புதன் பொது மறைக்கல்வி உரை, வத்திக்கான்

இன்று மரியாவில் நாம் மகிழ்ச்சியுடன் காணும் வாழ்வின் நிறைவு, காலத்தின் முடிவில் நமக்கும் காத்திருக்கிறது.”

ஆகஸ்டு 15, சனிக்கிழமை, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

உண்மையான அழகு அன்பிலும் தூய்மையிலும் வெளிப்படுகிறது. மரியாவின் விண்ணேற்பு மனிதகுலத்தின் விண்ணக அழைப்பை எடுத்துக்காட்டுகிறது.”

ஆகஸ்டு 15, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா திருப்பலி,

புனித தோமா வில்லனோவா திருத்தலக் காஸ்தல் கந்தோல்போ

lex orandi, lex credendi அதாவது, நாம் எவ்வாறு செபிக்கிறோமோ, அவ்வாறே நாம் நம்புகிறோம். அதாவது, இறைவேண்டலின் சட்டமே நம்பிக்கையின் சட்டமாகவும் அமைகிறது.”

ஆகஸ்டு 19, புதன் பொது மறைக்கல்வி உரை,

புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான்

இறைவனின் அருள்விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. இறைவனின் பிள்ளைகள் எவரும் புறக்கணிக்கப்படவோ, வெறும் சிறு துணுக்குகளுடன் விடப்படவோ கூடாது என்பதையும் கற்றுத்தருகிறது கானானியப் பெண்ணின் ஆழமான நம்பிக்கை.”

ஆகஸ்டு 16, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை,

காஸ்தல் கந்தோல்போ