news-details
உலக செய்திகள்
“இளைஞர்களே, மாபெரும் கனவுகளைக் காணுங்கள்”- திருத்தந்தை

இளைஞர்கள் தனித்துவமான நம்பிக்கை, நோக்கம் மற்றும் சேவை உள்ளத்துடன் தைரியமாகக் கனவு காண ஊக்குவிக்கும் வகையில் திருத்தந்தை 14-ஆம் லியோ, இத்தாலியிலுள்ள அசிசி நகருக்குப் மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொண்டார். ‘பிரான்சிஸ்கன் இளைஞர் சந்திப்புஎன்ற நிகழ்வின் நிறைவாக அமையும் இந்தப் பயணத்தில், ஐரோப்பா முழுவதிலிருந்தும் வருகை தரும் 18 முதல் 33 வயதுடைய ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திருத்தந்தை சந்திக்கவுள்ளார். புனித மேரி ஆஃப் தி ஏஞ்சல்ஸ் பேராலய வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திருத்தந்தை, தொடர்ந்து சிறப்புத் திருப்பலியையும் தலைமை தாங்கிச் சிறப்பிக்கவுள்ளார். வாழ்க்கையின் விரக்தியினாலும், நவீனச் சவால்களினாலும் எதிர்காலத்தைக் குறித்துக் கனவு காணத் தவறும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு புனித பிரான்சிஸின் எளிமையானபுனிதமான தேடல் கொண்டவாழ்க்கை முறை பெரும் வழிகாட்டியாக இருக்கும் என அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.