குருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்று வரும் அகில உலகக் கத்தோலிக்க ஊடக அமைப்பான ‘சிக்னிஸ்’ (signis) உலக மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்குத் திருத்தந்தை லியோ அனுப்பிய செய்தியில், “எண்மத் தொழில்நுட்பங்களும் ஊடக உத்திகளும் உண்மை, மனிதக் கண்ணியம், அமைதி மற்றும் இயற்கை சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். தனது ‘மாண்புமிகு மானுடம்’(magnifica humanitas) எனும் சுற்றுமடலை மேற்கோள்காட்டிப் பேசிய திருத்தந்தை, ‘கலாச்சார இணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கான டிஜிட்டல் தகவல் தொடர்பு’ என்ற மையப்பொருளில் நடைபெறும் இம்மாநாடு, நற்செய்தி விழுமியங்களான அமைதி, மனிதக் கண்ணியம் மற்றும் இயற்கை வளங்களைப் பேணுவதில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.