1. கிறிஸ்துவினுடைய மீட்பின் தியாகத்துடன் தொடர்புள்ள மரியாவின் பங்களிப்பைத் தீவிரமாக ஆராய்ந்து, மீட்புப்பணியில் மரியாவின் ஒத்துழைப்பையொட்டிய சிந்தனையைத் திரு அவையானது பல நூற்றாண்டுகளாகச் சிந்தித்து வருகின்றது. புனித அகுஸ்தினார் ஏற்கெனவே கன்னி மரியாவுக்கு மீட்பராம் கிறிஸ்துவுடனான மரியாவின் ஒத்துழைப்பை வலியுறுத்துகின்ற மீட்பில் ‘இணை மீட்பாளர்’ என்ற அடைமொழியை வழங்கினார் (ஒப்பிடுக. De Sancta Virginitate, 6; PL 40, 399). ஆனால், இது கிறிஸ்துவாம் மீட்பருடனான கீழ்நிலைச் (subordinate) செயலை வலியுறுத்துகின்றது.
15-வது
நூற்றாண்டிலிருந்து இச்சிந்தனையானது உருவாகிய விதம் இதுதான். கன்னி மரியாவை கிறிஸ்துவின் நிலையில் வைக்க விரும்பியதைக் கண்டு சிலர் அஞ்சினர். உண்மையில் திரு அவையின் போதனையானது ‘மீட்பரின் ஒத்துழைப்பாளர்’ என்கின்ற
வகையில் மரியாவின் கீழ்
நிலையை விளக்கி, மீட்புப்
பணியில் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகின்றது.
மேலும்,
“நாங்கள் இறைவனின் பணியாளர்கள்” (1கொரி
3:9) என்று திருத்தூதரான புனித பவுல் கூறுவதிலிருந்து, கடவுளுடன் ஒத்துழைப்பதற்கான உண்மையான சந்தர்ப்பத்தை மனிதனுக்கு அவர் வழங்குகின்றார் என்பதை நாம் அறியலாம். எந்தவொரு சமத்துவத்தையும் வெளிப்படையாகவே புறந்தள்ளும் நம்பிக்கையாளர்களின் இத்தகைய ஒத்துழைப்பானது நற்செய்தி அறிவிப்பில் வெளிப்படுத்தப்பட்டு, அந்நற்செய்தியானது மனித இதயங்களில் வேரூன்றுவதற்கான அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பில் வெளிப்படுத்தப்படுகிறது.
மரியாவின் ஒத்துழைப்பு யாராலும்
செய்ய
முடியாத
தனித்துவமிக்கது
2. எது
எப்படி இருப்பினும் மரியாவுக்கு உடன் உழைப்பாளர் அல்லது ஒத்துழைப்பாளர் (co-operator) என்கிற அடைமொழியானது மிகவும் பொருந்தும். மீட்புத் திட்டத்தில் கிறித்தவர்களின் ஒத்துழைப்பு கல்வாரி நிகழ்விற்குப் பிறகு நடைபெறுகிறது. அதன் பலன்களை அவர்கள் தங்கள் செபத்தினாலும் தியாகத்தினாலும் பரவச் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், மரியா தனது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளின்போதும் ‘கிறிஸ்துவின் தாய்’ என்கிற நிலையில் கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு ஒத்துழைத்தார். இதனால் அவரின் ஒத்துழைப்பானது கிறிஸ்துவின் மீட்புப் பணிகளை முழுவதுமாகத் தாங்குவதாக அமைகிறது. மனிதகுலம் அனைத்திற்குமான மீட்பின் காரணமான கிறிஸ்துவின் மீட்பளிக்கும் தியாகத்துடன் ‘உடன் உழைப்பாளர்’ அல்லது
‘ஒத்துழைப்பாளர்’ என்கின்ற
நிலையில் மரியா மட்டுமே அதோடு தொடர்புடையவர் ஆகின்றார்.
கன்னி
மரியாவுக்கான ஒத்துழைப்பாளர் என்கிற பங்கானது அவர் இறைவனின் தாய் என்பதில் அடங்கியிருக்கின்றது. மனித மீட்பிற்குக் காரணமானவரைப் பெற்றெடுத்து, வளர்த்து, அவரைக் கோவிலில் அர்ப்பணித்து, அவர் சிலுவையில் இறந்தபொழுது அவரோடு துன்புற்றதன் வழியாக “மீட்பருடைய பணியில் முற்றிலும் தனிச்சிறப்புமிக்க வகையில் அவர் ஒத்துழைத்தார்” என்று
வத்திக்கான் சங்கம் குறிப்பிடுகின்றது (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 61). இறைவனின் மீட்புப்
பணியில் அவருடன் ஒத்துழைப்பதற்கான அழைப்பானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதில் மீட்பரது தாயான மரியாவின் பங்களிப்பானது
யாராலும் செய்ய முடியாத தனித்துவமிக்க நிகழ்வாகும் (unique and unrepeatable fact).
மரியா
தனித்தன்மையோடு இருந்தபோதிலும், அவரும் இறைவனின் மீட்பைப் பெற்றுக்கொள்பவராக இருக்கின்றார். மரியா தூய ஆவியின் அருளால் நிரப்பப்பட்டு, அவரது அமல உற்பவத்தில் ‘சிறப்பானதொரு வகையில்’ (Bull Ineffabilis Deus,
in Pius IX, Acta, 1, 605) கிறிஸ்துவால்
மீட்கப்பட்டவர்.
3. இக்கூற்றானது,
இப்பொழுது நம்முள் ஒரு கேள்வியை எழுப்புகின்றது: மீட்புத் திட்டத்தில் மரியாவின் தனித்துவமான ஒத்துழைப்பின் பொருள் என்ன? இக்கேள்வியானது, கானாவூர் திருமண நிகழ்வு மற்றும் சிலுவையின் அடியில் இயேசு அவரை ‘பெண்’
(யோவா 24: 19-26) என்று அழைக்கும் இவ்விரு மிக முக்கிய நிகழ்வுகளிலும் மீட்பரின்
தாய்க்கான கடவுளின் குறிப்பிடத்தக்கதொரு நோக்கத்தின் பின்னணியில் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
மீட்புப் பணியில் மரியா ஒரு பெண்ணாக இணைக்கப்படுகின்றார். மனிதனை ஆணும்-பெண்ணுமாகப் படைத்த இறைவன் (தொநூ 1:27), புதிய ஆதாமுடன் ஒரு புதிய ஏவாளையும் மீட்பின் திட்டத்தில் இணைக்க விரும்புகிறார். நமது
முதல் பெற்றோர் பாவத்தின் வழியைத் தேர்ந்தெடுத்தனர். ஒரு புதிய இணையான அதாவது, இறைமகன் அவரது தாயின் ஒத்துழைப்போடு மனிதகுலம் முழுவதையும் அதன் தொடக்க மாண்பு நிலைக்கே மீண்டுமாக உருவாக்குகிறார்.
இவ்வாறு,
புதிய ஏவாளாகிய மரியா திரு அவையின் நிறைவான மற்றும் நிலையான சின்னமாகின்றார். இறைத்திட்டத்தில், இறைவனுடைய மீட்பின் தேவையில் இருந்த மற்றும் சிலுவையின் அடியில் மீட்கப்பட்ட மனிதகுலத்தை மரியா பிரதிபலிக்கின்றார் மற்றும் மீட்புப் பணியில் தன்னையே இணைத்துக்கொண்டு தனது பங்களிப்பை அளிக்கத் தூண்டப்படுகின்றார்.
அருள்நிலை அடிப்படையில்
மரியா
நம்
தாய்
4. இக்கோட்பாட்டை
மனத்தில் கொண்டே திருச்சங்கமானது தனது வரையறுக்கப்பட்ட படிப்பினை மற்றும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் மீட்பரின் பிறப்பிற்கு மட்டுமல்லாமல், உலக இறுதிவரை கிறிஸ்துவின் மறையுடலாகிய திரு அவையின் வாழ்க்கைக்கும் இறைவனின் மீட்புத் திட்டத்திலே கன்னி மரியாவின் பங்களிப்பையும் தனித்துவமிக்க ஒத்துழைப்பையும் வலியுறுத்துகின்றது. திரு அவையில் ‘மரியா ஒத்துழைத்தார்’ (இறைத்திட்டத்தில்
திருச்சபை, எண். 63) மற்றும் இறைவனின் மீட்புப் பணியில் இன்றும் ‘ஒத்துழைக்கின்றார்’ (Ibid. எண்.
53).
கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பு நிகழ்வில் கூட கன்னி மரியா, “பாவத்தடையின்றித் தன் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்று, தன் மகனுக்கும் அவரின் அலுவலுக்கும் தன்னையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார்; இவ்வாறு கிறிஸ்துவுடனும் அவருக்குக் கீழும், எல்லாம்வல்ல கடவுளின் கையில் செயலற்ற ஒரு கருவியாக அல்ல; மாறாக, நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர்” (Ibid.எண். 56) என்று திருச்சங்கம் கூறுகின்றது.
இரண்டாம்
வத்திக்கான் சங்கமானது மரியாவை ‘இறைவனின்
தாய்’ என்று
மட்டும் கூறவில்லை; மாறாக, அவரது கீழ்ப்படிதல், நம்பிக்கை மற்றும் அவருள் எரிந்துகொண்டிருக்கும் அன்பு ஆகிய பண்புகளோடு ‘ஒரு தனித்துவமான வகையில் தாராளமான இணையாக’ அவரை முன்னிறுத்துகின்றது. ஒத்துழைப்பின் விழுமிய கனி என்பது மரியாவின் தாய்மையே
என்பதையும் திருச்சங்கம் பதிவு செய்கிறது: ‘இத்தகு காரணங்களால்தான் அன்னை மரியா நம் அனைவரின் தாயாக அருள்நிலையில் திகழ்கின்றார்’ (Ibid. எண். 61).
ஆகவே,
தனது வாழ்நாள் முழவதும் இறைவனது மீட்புத் திட்டத்தில் உடனுழைத்து, இன்னும் சிறப்பாகக் கல்வாரியின் இறுதிநிலை வரை இறைவனது மீட்புத்திட்டத்தில் தன்னையே கரைத்துக்கொண்ட கன்னி மரியாவின் உதவியை நாம் நம்பிக்கையோடு வேண்டி, அவர் பக்கம் திரும்பலாம். ஏனெனில், அவரே இறைவனால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட தனித்துவமிக்க மாதிரி, மீட்பின் உடன் ஒத்துழைப்பாளர் மற்றும் உடன் உழைப்பாளர் ஆவார்.
மூலம்:
John Paul II, Mary’s co-operation is totally unique, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 16 April
1997, p. 7.