news-details
வத்திக்கான் செய்திகள்
“இளைஞர்களே, கிறிஸ்துவின் உப்பாகவும் ஒளியாகவும் திகழுங்கள்”

பெரு நாட்டில் ஜூலை 30 முதல் ஆகஸ்டு 2 வரை நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்ற இளைஞர்களுக்குக் காணொளி வாயிலாகச் செய்தி அனுப்பிய திருத்தந்தை லியோ, கிறிஸ்து மீது அன்பு கொண்ட இளைஞர்களின் மகிழ்ச்சியான சாட்சியமே தற்கால உலகிற்குத் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். பியூரா மண்டலத்தில் உள்ள சூலுகானாஸ் நகரில் நடைபெறும் இந்நிகழ்வில், பெரு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 4,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆயர்கள் மற்றும் துறவறத்தார் பங்கேற்றுள்ளனர். ‘துணிவுகொள்ளுங்கள், கிறிஸ்து வாழ்கிறார்!’ என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடத்தப்பட்டது. “துன்பப்படும் பலருடைய இதயங்களில் நம்பிக்கையை மீண்டும் மூட்டி வளர்க்கும் இறைவனின் கருவிகளாக மாற அஞ்சாதீர்கள். கிறிஸ்து நமது மத்தியில் வாழ்கிறார் என்ற உறுதியே நமக்குத் துணிவைத் தருகிறதுஎன்று தனது செய்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.