news-details
கவிதை
குருவே உம்மைத் தொழுதே பணிந்தோம்! (செப்டம்பர் 05)

ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

அறிவின் விளக்கே ஆசிரியப் பெருமானே!

வழிகாட்டும் தெய்வமே தியாக உருவமே!

இருள்நீக்கும் ஜோதியே இறைவனின் வடிவமே!

அன்பின் நிறைவே அருளின் நிறைகுடமே!

இனிதாய் கற்பித்து இதயம் தொடுபவரே!

இயலாக் கனவினையும் நனவாக்கும் நாயகரே!

கிரியா ஊக்கியாய் இயங்கும் ஆற்றலே!

பிரியா உறவை வணைத்த ஏந்தலே!

விலைகொடா இலக்குகளை எட்டிட வைப்பவரே!

சொற்களால் போற்ற இயலா மேன்மையரே!

வாழ்நாள் முழுதும் வழிகாட்டும் தீபமே!

பாரும் போற்றும் தியாகத்தின் உருவே!

உயரிய அறிவினை உவப்பாய் தருபவரே!

ஞானப் பாலினை நயம்பட புகட்டுபவரே!

வாழ்வின் மதிப்பை வளமாய் சேர்ப்பவரே!

நற்பண்பு விதைகளை நெஞ்சில் விதைப்பவரே!

ஒழுக்கமும் சீர்மையும் உணர்த்தும் வழிகாட்டியே!

சீரிய குணங்களைச் செதுக்கும் சிற்பியே!

அர்ப்பணிப்பு சேவைக்கு அகிலமே போற்றுமே!

ஈடில்லாத் தியாகத்தை இதயமே வணங்குமே!

பயிலும் பாடத்தைப் பண்புடன் நடத்துபவரே!

ஆர்வத் தீயை அகத்தில் மூட்டுபவரே!

நாளுமே வளர நன்மையைக் கற்பிப்பவரே!

பள்ளிப் பயணத்தைப் பரவச மாக்குபவரே!

சலிப்பில்லா முகத்தால் புன்னகை தருபவரே!

மனத்தின் சுமையினை மகிழ்வாய் மாற்றுபவரே!

வெற்றிப் பாதையை வெளிச்சம் காட்டுபவரே!

குருவே உம்மைத் தொழுதே பணிந்தோம்!