news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (09.08.2026)

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் எப்போதும் உண்மை, மனித மாண்பு மற்றும் பொதுநலனுக்குச் சேவை செய்யவேண்டும்.”

ஜூலை 27, சிலி நாட்டின் சாண்டியாகோவில் நடைபெற்ற திரு அவை தகவல் தொடர்பு குறித்த உலகளாவிய கருத்தரங்கு 

முதியவர்கள் சுமை அல்ல; பேணிப் பாதுகாக்கவேண்டிய இறைவனின் கொடை! முதுமை என்பது ஆன்மிக ஓய்வுக்காலம் அல்ல; அது இறைவன் அளிக்கும் ஓர் அழைப்பு.”

ஜூலை 26, வத்திக்கானில் நடைபெற்ற 6-வது உலக தாத்தா-பாட்டியர் மற்றும் முதியோர் நாள்  செய்தி

இளைஞர்களின் உற்சாகம் அனைவரிடமும் புதிய மறைப்பணி உணர்வைத் தூண்டுகிறது. கிறிஸ்து இல்லாத வாழ்க்கை அருளற்ற வாழ்க்கை.”

ஜூலை 25, ‘அல்லேலூயாகத்தோலிக்க இசை விழாவை முன்னிட்டு அனுப்பிய காணொளிச் செய்தி

கிறித்தவ ஒருமைப்பாடு கிறிஸ்துவின் மறைபொருளில் வேரூன்றி உள்ளது. அருள்சாதனங்கள், குறிப்பாக நற்கருணை மூலம் அது ஊட்டமளிக்கப்படுகிறது.”

ஜூலை 24, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டம்

அணு ஆயுதங்கள் அமைதியை உருவாக்குவதில்லை; மாறாக, ஆயுதக் குறைப்பே நிலையான அமைதியை உருவாக்கும்.”

22 ஜூலை, திருத்தந்தையின் புத்தகம்ஆயுதமற்றதும் ஆயுதங்களை அகற்றுவதுமானது: அமைதி ஒரு கொடை.’