news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய உதவித்தொகை வழங்கப்படாதது, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது .வெ.. அரசு. தி.மு.. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக இதையும் திட்டமிட்டு மறைமுகமாகச் செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் இந்த அரசின் நோக்கமா?? உடனடியாக நிலுவையில் உள்ள உதவித் தொகையை விடுவித்து, மாணவர்களின் கல்வியைத் தடையின்றித் தொடரச் செய்யவேண்டும்.”

திருமிகு. கனிமொழி, எம்.பி., தி.மு.. துணை பொதுச்செயலர்

.வெ.. அரசு 100 நாள்களைக் கடந்துள்ளது, மாற்றம்... மாற்றம் என்றார்கள். ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை. கடந்த நான்கு நாள்களில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. இதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் மற்றும் கலாச்சாரச் சீரழிவே காரணம். இளைஞர்கள் ஓட்டுபோட்டு இந்த ஆட்சியைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், இன்றைக்கு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும்.”

திருமிகு. பிரேமலதா, தே.மு.தி.. பொதுச்செயலாளர்

கல்லூரி மாணவர்கள் வகுப்பு முடிந்து மாலையில் தினமும் ஒரு மணி நேரம் படிக்கலாம். பத்திரிகைகளைப் படித்துப் படித்துதான் எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது. படிக்கும்போதுதான் அதன் சுவையும் பெருமையும் நமக்குத் தெரியும். மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொதுப் புத்தகங்களையும் படிக்கவேண்டும். புத்தக வாசிப்பு மிகவும் முக்கியம். ஆழ்ந்த வாசிப்புதான் மனிதனை மனிதனாக்கும். வாசிப்பினால் நல்ல பண்புகள் வளரும். வாசிப்பு கூர்ந்துநோக்கும் ஆற்றலையும், விசாலமான பார்வையையும் தரும். ஆழ்ந்த வாசிப்புடன் மனத்தில் பதிந்த கருத்துகள் மீது ஆய்வு நடத்தவேண்டும். அப்போது, வாசிப்பு ஆரோக்கியமான மனநிலையைத் தரும். மாணவர்கள் வரலாற்றுத் தலைவர்கள், தமிழ்நாட்டு வரலாறு, பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நதிநீர் பிரச்சினை என அனைத்து விசயங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். வாசிப்பு என்பது ஆன்மாவுக்கு முக்கியம். வாசிப்பு துணிச்சலைக் கொடுக்கும்; அது நம்மை ஒருமுகப்படுத்தும்.”

திருமிகு. கே.எஸ். இராதாகிருஷ்ணன், அரசியலாளர்