‘நம் வாழ்வு’ ஆரம்பித்து 50 ஆண்டுகளை வார இதழாகக் கடந்துவிட்டது. சென்ற ஆண்டு ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ‘நம் வாழ்வை ஒரு தினசரியாக நம்மால் கொண்டு வர முடியுமா?’ என்று. அதற்காக ஓர் ஆய்வை நாங்கள் நடத்தினோம். அந்த ஆய்வின் அடிப்படையில் பரந்துபட்ட மக்களிடம் கேள்விகளைக் கேட்டபொழுது, ‘தினசரி நம் வாழ்வு வருமேயானால் நீங்கள் அதை வரவேற்பீர்களா? அது எப்படி இருக்கவேண்டும்?’ என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டபொழுது, அதிகமான ‘நம் வாழ்வு’ வாசகர்கள் ‘இது ஓர் அன்றாடத் தேவை’ என்பதைக் கூறினார்கள்.
‘ஸ்டேக் ஹோல்டர்ஸ்’
(Stakeholders) என்று
சொல்லப்படுகின்ற பலதரப்பு மக்களிடமிருந்தும் இந்த ஆவல் இருந்தது. அதனை வைத்துக்கொண்டு தான் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்னையின் விண்ணேற்பு, இந்த நாட்டின் சுதந்திரம் அடைந்த நாளில் இந்த ‘மின்னஞ்சல் நாளிதழ்’ அன்றாடம் வெளிவர ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக ஓர் ஆண்டை இந்நாளிதழ் பூர்த்திசெய்துள்ளது.
இந்த
நேரத்தில் முதன்மை ஆசிரியர் அருள்திரு இராஜசேகரன் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியைச் சொல்லவேண்டும். ஏனென்றால், ஆயர் பேரவையின் வழிகாட்டுதலில் அவர்தான் இந்த முயற்சியை முன்னெடுத்தார். எடுத்தது மட்டுமல்ல, அதைத் தெளிவாகச் செய்தார். ஓர் ஆய்வின் மூலமாக இது தேவை என்பதை உணர்ந்து, அதன் அடிப்படையில் இதை எப்படி ஆரம்பிக்கவேண்டும்? என்று அதற்கான வேலைகளை மேற்கொண்டு, இந்த நான்கு பக்கங்களை இப்போது ஐந்து பக்கங்களாக, தினசரி ‘மின்னஞ்சல் நாளிதழாக’
விடியற்காலையில்
நம் கையில் வந்துவிடுகின்றது.
விடியற்காலையிலேயே
மின்னஞ்சல் நாளிதழைப் பார்க்கும்பொழுது அதில் திரு அவைச் செய்திகள், உலக மற்றும் இந்தியச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இன்றைக்கு நடக்கக்கூடிய சமூக - பொருளாதார நிகழ்வுகள் நம்முன் கொண்டு வரப்படுகின்றன. சில சமயங்களில் ஒரு நல்ல சிறப்புக் கட்டுரையும் கொடுக்கப்படுகின்றது. அந்த விமர்சனக் கட்டுரை ஒரு முடிவை எடுக்க, நம் நிலைப்பாட்டை எடுக்க உதவியாக இருக்கின்றது.
அண்மையில்
இருவரிச் செய்திகளும் இதில் அடங்கியுள்ளன. ‘நியூஸ் இன் கேப்சூல்’
(news
in capsule) என்று கூறுகின்ற மாதிரி, அதை இரு வரிகளில் கூறும்பொழுது நமக்கு என்ன நடக்கின்றது என்று தெரிகின்றது. அதன் அடிப்படையில் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள மேலும் ஆவலாக இருப்பவர்கள் நாம் தெரிந்துகொள்ளலாம். இந்த மின்னஞ்சல் நாளிதழ் வர ஆரம்பித்ததிலிருந்து இதுதான் இனிமேற்பட்டு
வரப்போகின்ற ஒரு செய்தித்தாளாக இருக்கும். எல்லாரும் குறிப்பிடுவதுபோல இன்றைக்கு ‘பிரிண்ட் மீடியா’ குறைந்துகொண்டே வருகின்றது. அது நின்றுவிடாது; அதேசமயத்தில் அது குறைந்துகொண்டுதான் இருக்கின்றது.
மின்னஞ்சல்
நாளிதழ்கள்தான் இன்றைக்கு அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. 100
ஆண்டுகளைத் தாண்டிய செய்தித்தாள்கள், செய்திப் பத்திரிகைகள் எல்லாமே, இன்றைக்கு மின்னஞ்சல் நாளிதழைக் கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படை யில் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலைகளை உணர்ந்து ‘நம் வாழ்வும்’
இந்த மின்னஞ்சல் நாளிதழைக் கொண்டுவர ஆரம்பித்திருக்கின்றது.
கட்டாயமாக
வரும் நாள்களில் இது இன்னும் சிறப்பாக வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இதற்கு நம் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருந்தால் கட்டாயமாக இன்னும் பொலிவாகவும், இன்னும் அதிக பக்கங்களுடனும், இன்னும் அதிக விவரங்களுடனும் விமர்சனக் கட்டுரைகளுடனும் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இந்த ஓர் ஆண்டை நிறைவு செய்கின்ற ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!