கல்வி கற்பிக்கும் ஏ.ஐ. நண்பன்
கற்பனை
செய்து பாருங்கள்... உங்கள் வகுப்பறையில் இருக்கும் கரும்பலகை, நீங்கள் பாடம் கவனிக்கும் போதே உங்கள் முகபாவனையை வைத்து, ‘உங்களுக்கு இந்தக் கணக்கு புரியவில்லை’ என்பதைப்
புரிந்துகொண்டு, இன்னும் எளிமையாக விளக்கத் தொடங்கினால் எப்படியிருக்கும்?
ஆம்!
இன்று நாம் ஏ.ஐ. யுகத்தின்
வாசலில் இல்லை; அதன் உள்ளறைக்கே வந்துவிட்டோம். உலக வரலாற்றின் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் இந்த ‘மின்னணு மூளை’ இன்று கரும்பலகையையும் நோட்டுப்புத்தகத்தையும் டிஜிட்டல் மந்திரக்கோலாக மாற்றிவருகிறது.
ஓர்
ஆசிரியர் பாடம் நடத்துவதைக் காட்டிலும், மாணவர்களின் தேர்வுத்தாள்களைத் திருத்தவும், யார் யாருக்கு எந்தப் பாடம் புரியவில்லை என்று அட்டவணை (Pattern) போடவுமே
அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஏ.ஐ. வந்தபிறகு
இந்த ‘ஹோம்வொர்க்’ அனைத்தையும்
அது சில நொடிகளில் முடித்துவிடுகிறது. இதனால் ஆசிரியர்கள் இயந்திரமயமான வேலைகளில் இருந்து விடுபட்டு, கற்பிப்பதில் மாணவர்களோடு அதிக நேரம் செலவழிக்க முடிகிறது
உலக
நாடுகள் ஏ.ஐ. கல்வியை
வெறும் பாடமாகப் பார்க்காமல், தங்களின் எதிர்காலப் பேராயுதமாகப் பார்க்கின்றன. ஏ.ஐ. என்பது
மனிதர்கள் போலவே சிந்தித்து, கற்று முடிவெடுக்கும் திறன் பெற்ற மென்பொருள் என்பதை அறிவோம். இந்த மென்பொருள்-இயந்திரத்துடன் பேசுதல், உரைகள் மற்றும் பிம்பங்கள் உருவாக்குதல், மொழிபெயர்த்தல் என்று பல வழிகளில் மனிதனைப்
போன்று சூழலுக்கேற்ப இயங்கும் ஏ.ஐ. நாள்களில்
வாழத் தொடங்கி விட்டோம். பல நாடுகள் இதில்
தங்களுக்கென்று இடத்தைப் பிடிக்க ஏ.ஐ. கல்வியில்
ஆர்வம் காட்டுவது மட்டுமன்றி, முதலீடு செய்தும் வருகின்றன. ஏ.ஐ. கல்வி
என்பது கற்றல், திட்டமிடுதல், மதிப்பிடுதல் மற்றும் அறிவுறுத்தல் என்பவைகளை டிஜிட்டல் கருவிகள் துணையுடன் செயல்படுத்துவது.
உலக
அளவில் அமெரிக்கா, பின்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சீனா, தென் கொரியா, ஜப்பான், எஸ்தோனியா போன்ற நாடுகள் ஏ.ஐ. கல்விமுறையை
நடைமுறைப்படுத்தியுள்ளதாகக்
கூறப்படுகிறது. சில நாடுகள் இத்தொழில்நுட்பத்தைக் குறித்து அறிதல், செயலாற்றல் என்பவைகளை எவ்வகையில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்ற பயிற்சியை ஆசிரியர்களுக்கு அளிக்கும் பாடத்திட்டத்தை (curriculum) வகுக்கவும் தொடங்கியுள்ளன.
ஏ.ஐ.
கல்வி
தொழில்நுட்பம்
மனித
ஆற்றல் (intelligence) சார்ந்த வேலைகளை நவீன கணினி - இயந்திரத் திறன் அடிப்படையில் செயல்படுத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பம்
உலகளவில் கல்வித் துறையின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏ.ஐ. கல்விப்
பிரிவில் கற்கும் இயந்திரம், பேசும் இயந்திர மாடல்கள், ரோபோ, நரம்புவலை (ML, LLM, Robotics and neural
networks) போன்ற தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. தொழில்நுட்பம்
என்பது ஒரு தையல் இயந்திரம் போன்று வகுப்பறை அறிவுத்திறனை வாழ்க்கைத் தேவைகளுக்குத் தைக்கும் கருவியாக, கல்வியை அறைக்குள்ளிருந்து வெளியே எடுத்துச்சென்று ஒருவரின் வாழ்க்கையோடு பயணிக்கத் துணைபுரிகிறது. இத்திசையில், மாணவர் கற்கும் முறையில் புதிய வடிவம், ஆசிரியர் கற்பிக்கும் முறையில் மாற்றம் என்று ஒரு புதிய கற்கும் இயக்கமாக ஏ.ஐ. கல்வி
உருவெடுத்து வருகிறது.
பேசும்
இயந்திரமாடல்கள் (LLMS), ஆசிரியர்
துணையின்றி மாணவர்களுக்கு உடனுக்குடன் சந்தேகங்களைத் தீர்க்கும் கருவியாகச் செயல்படுவது கல்வி உலகில் புதுமையாகப் பார்க்கப்படுகிறது. போதனைத் திட்டமுறை, மாணவர்களுக்கான உதவி மற்றும் தரவுப் பாதுகாப்பு என்பவைகளை நடைமுறைப்படுத்த கல்விக்கூடங்களும் தயாராகி வருகின்றன. உலகளவில் இத்தொழில்நுடபத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் மாணவர்கள் தங்கள் வீட்டுப் பாடங்கள், ஆராய்ச்சி, கடினமான பாடத் தலைப்பு போன்ற தேவைகளுக்கு ஏ.ஐ.யைப்
பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
ஏ.ஐ.
கல்வியின்
பயன்கள்,
இடறல்கள்
கரும்பலகையும்
சுண்ணக்கட்டியும் இருந்த வகுப்பறைகள் இன்று கணினித் திரைகளுக்கு அப்பால் செயற்கை செயலாற்றலின் (AI) புரட்சி
நாள்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கல்வித் தரத்தை உயர்த்துவது, துல்லியமான பாடத் திட்டங்களை வகுப்பது, மாணவர்களின் கற்றல் திறனைச் சீராகக் கண்காணிப்பது எனக் கல்வித் துறையின் எஞ்சினாக AI உருவெடுத்து
வருகிறது.
ஒருபுறம்
அசுர வேகம்; மறுபுறம் சில சவால்கள்... ஏ.ஐ. கல்வி
நம் வாழ்வில் நிகழ்த்தும் வித்தைகளையும், நாம் கவனிக்க வேண்டிய பக்க விளைவுகளையும் சற்று ஆராய்வோம்.
வகுப்பறைக்கு
வெளியே மாணவர்களுக்கு 24 மணி நேரமும் கூடவே இருக்கும் ஒரு தனிப்பட்ட ஆசிரியர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஏ.ஐ.! மாணவர்கள்
இதன் மூலம் பெறும் நேரடிப் பயன், எழுதும்போதே இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவது, சூழலுக்கேற்ப கடிதமாகவோ, கட்டுரையாகவோ அல்லது உரையாடலாகவோ எழுத்தின் தொனியை மாற்றியமைத்தல், சுவாரசியமான கதைகள் மற்றும் உரையாடல்களை உருவாக்கி மாணவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டுதல், படிக்கும்போது சந்தேகம் வந்தாலும், உடனுக்குடன் பதிலளித்து நேரத்தை மிச்சப்படுத்துவது போன்றவை இதன்மூலம் பெறும் வேறு நன்மைகள் எனலாம். சில நேரங்களில் ஏ.ஐ. கருவிகள்
பார்ப்பதற்கு மிகவும் சரியானது போலத் தோன்றும். ஆனால், முற்றிலும் தவறான பதில்களை அள்ளி வீசும்.
இவற்றைக் கண்டறிய திறன்பெற்ற ஆசிரியர்களும், விழிப்புடன் இருக்கும் மாணவர்களும் மிக மிக அவசியம்.
ஏ.ஐ. கல்வி வளையத்தில்
மாணவர்கள் தொடர்பான ஏராளமான தரவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கும் கடமையும் உள்ளது. ஏ.ஐ. பயன்படுத்துவது
இணையதளத்தைச் சார்ந்துள்ளது. ஆசிரியர்-மாணவர், நகர - கிராமப் புறங்களில் பரவலாக இதனைப் பெற்றிருப்பதே ஏற்றத்தாழ்வைத் தவிர்த்து, ஒன்றிணைந்த சமநிலைச் சமுதாயத்தைக் கட்டமைக்கும் கருவியாக அமையும்.
ஏ.ஐ.
ஆசிரியருக்குப்
பதிலாக
அமையுமா?
பாரம்பரியக்
குருகுல முறை, வகுப்பறைக் கல்வி, அஞ்சல்வழிக் கல்வி, ஆன்லைன் கல்வி என உருமாறி,இன்று
ஏ.ஐ.கல்வியை நோக்கி
நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். காகிதத்திற்குப் பதில் இ-புத்தகங்களும், பேனாவிற்குப்
பதில் மென்பொருள்களும் வந்தது போல, ஆசிரியர்களுக்குப் பதிலாக ஏ.ஐ. வந்துவிடுமா?
காலப்போக்கில் இவைகளைக் கணினி முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் என்ற சந்தேகம் எழுவது இயல்பு. இன்றைய டிஜிட்டல் உலகில் காகிதப் புத்தகங்கள் இடத்தில், இ-புத்தகங்கள் மற்றும்
பிடிஎஃப் (PDF), பேனாவிற்குப்
பதிலாக மென்பொருள்கள் என்ற மாற்றங்கள் போன்று ஒருநாள் ஆசிரியர்களையும் இத்தொழில்நுட்பம் மாற்றிவிடுமோ என்ற சந்தேகமும் எழலாம்.
இன்று
நாம் ஏராளமான அறிவு சார்ந்த செய்திகளையும், நுண்ணிய விளக்கங்களையும் தொலைக்காட்சி மற்றும் பல வலையமைப்பு
ஊடகங்கள் வாயிலாகப் பெறுகிறோம். ஆனால், கல்வி நிலையங்களோ, பல்கலைக்கழகங்களோ இதனால்
பாதிப்படைவதில்லை என்பதைப் போன்று, ஏ.ஐ. கல்வி
வழி ஆசிரியரின் இடத்திற்கு மாற்றாக அமையாது. ஏ.ஐ. என்பது
கல்வி பயில உதவும் துரிதமான கருவியாக இருந்தாலும், மாணவர்களை உருவாக்குதல், சிந்திக்கும் திறனை மேம்படுத்தல், புதுமையைப் படைத்தல் என்ற உயரிய நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்குமா என்று சிந்திக்க வைத்துள்ளது.
ஆசிரியர்கள்
அறிவை மட்டும் புகட்டுவதில்லை; மாணவர்களுக்குச் சிறந்த ஆலோசகராக, வழிகாட்டியாக, ஊக்கமளிப்பவராகத் திகழ்கின்றனர். மனித ஈடுபாடு, அறிவுறுத்தல், கவனமான மேற்பார்வை போன்ற பிரிவுகளில் உதவிடும் ஒரு புதிய துணையாகவே கல்வியில் ஏ.ஐ. பார்க்கப்படுகிறது.
எவ்வளவுதான் தொழில்நுட்ப முன்னேற்றமிருந்தாலும் வளமான ஆசிரியர்-மாணவர் உறவு, மாணவர்-பெற்றோருடன் தெளிவான தொடர்பு, மாணவரின் நலன் காத்தல் என்பவையே கருவிகளைவிட ஏ.ஐ.-யைச்
சேர்த்துக் கல்விக்கூடங்களின் வெற்றிக்குக் காரணமாக அமையுமென்று அறியப்படுகிறது.