news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (07.06.2026)

“இறைவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான அமைதி மன்னிப்பிலிருந்து பிறக்கிறது. பாவங்களை மன்னிக்கும் தெய்வீகப் பணியில் நம்மை ஈடுபடுத்தி, உலக வரலாற்றை அன்பினால் உருமாற்ற தூய ஆவியார் உதவுகிறார்.”

மே 24, தூய ஆவியார் பெருவிழா திருப்பலி மறையுரை

சூழலியல் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பத் தீர்வு மட்டுமல்ல,  மனமாற்றம், பொறுப்புணர்வு மற்றும் கல்வி ஆகியவற்றின் மூலமே வருங்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான பூமியை ஒப்படைக்க முடியும்.”

மே 23, காம்பானியா அசெர்ரா நகர் நகராட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு

தொழில்நுட்பமானது ஞானத்தாலும் தார்மீக விழுமியங்களாலும் வழிநடத்தப்படும்போது, கடவுளின் படைப்புத் திட்டத்தோடு இணக்கமாகவும், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் வழங்க முடியும்.”

 மே 22, 60-வது உலகத் தகவல் தொடர்பு தினச் செய்தி

பிரிவினைகளை ஒற்றுமையாக்கும் தூய ஆவியாரைப் போல, உலக நாடுகளுடனான உறவிலும் திறந்த மனப்பான்மை, இருதரப்பு மரியாதை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும்.”

மே 21, திருப்பீடத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களுடன் சந்திப்புச் செய்தி

திருவழிபாடு என்பது வெறும் சடங்கல்ல; அது கிறிஸ்துவின் மீட்புப் பணியில் நாம் பங்கேற்று, அவரோடு ஒன்றிணையும் புனித நிகழ்வு.”          

மே 20 , புதன் பொது மறைக்கல்வி உரை