news-details
இந்திய செய்திகள்
2026 தேர்தல் திருவிழா: வாக்குரிமையும் வாக்குறுதியும்

தேசிய சனநாயகக் கூட்டணிக்கு உண்மையான தலைமை பாரதிய சனதா கட்சிதான்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவர்கள் ஒப்புக்காக முன்வைக்கின்ற தலைவர்தான் .தி.மு.. பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி. பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பொம்மை முக்கியமல்ல, நூல் யார் கையில் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.”

திருமிகு. . சிதம்பரம், மேனாள் மத்திய நிதி அமைச்சர்

தமிழ்நாட்டில் .தி.மு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி குறித்து இப்போது எந்தக் கருத்தும் கூறமுடியாது. அது தேர்தல் முடிவைப் பொறுத்துதான் அமையும். தேர்தல் கூட்டணி அமைக்கும்போது எல்லாக் கட்சிகளும் எப்படி ஒப்பந்தம் போடுவார்களோ, அதேபோல தேசிய சனநாயகக் கூட்டணியிலும் ஒப்பந்தம் போடப்படுகிறது. அது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தனிப்பட்ட ஒப்பந்தம்.

திருமிகு. தமிழிசை சௌந்தரராஜன், மேனாள் ஆளுநர், பா... மூத்த தலைவர்

மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் என்ற பெயரில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடிதான் மிகப்பெரிய ஊடுருவல்காரர்.”

திருமிகு மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் என்னைப் பற்றியும் .வெ..வைப் பற்றியும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சில கட்சிகளின் அணியாகத் .வெ.. செயல்படுகிறது எனக் கூறப்பட்டது. ஆனால், .வெ.. எப்போதும் மக்களின் அணியாகவே செயல்படுகிறது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதச் சமரசமும் செய்யப் போவதில்லை. வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் .வெ.. தலைமையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக உள்ளோம்.”

திருமிகு. விஜய்,  .வெ.. தலைவர்