news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் சுமார் எட்டு நூற்றாண்டுகளாக மாபெரும் அறிவு மையமாக விளங்கியது. அதன் வீழ்ச்சியானது இந்தியாவிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் பேரிழப்பாக அமைந்தது. தற்போது இந்தப் பல்கலைக்கழகம் புத்துயிர் பெற்றுள்ளது. உலகம் பல சிக்கலான சவால்களைச் சந்தித்து வருகின்றது. அதேவேளையில் கருணைமிக்க, சுதந்திரமான, எதையும் ஆராய்ந்து வலுவாக முடிவு எடுப்பதற்கான சிந்தனையும் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் உலக அளவில் முன்னணிக் கல்வி நிறுவனமான நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.” 

திருமிகு. முர்மு, குடியரசுத் தலைவர்

மானம் என்னும் தலைப்பை உடைய வான்புகழ் வள்ளுவரின் அதிகாரத்திற்கு வான்புகழ் உரையாளன் பரிமேலழகர்நிலை தாழாமைஎன்று பொருள் எழுதுவார். ‘அடைகின்ற சுகம் பெரிதல்ல; வீழ்ச்சியிலும் யானைபோல் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே பெருமைஎன்பார். தனிமனிதர்களின் பெருமை - சிறுமை என இவை பதவிகளினால் வருவதில்லை. வாழும் முறையினாலேயே வருகிறது. சனநாயகத்தின் ஒரே ஒரு சிறந்த கூறு, இரத்தச் சிந்தல்கள் இல்லாமல் ஆட்சி மாற்றம் நிகழ்த்தமுடியும் என்பதுதான். வாளும் வேலும் இல்லாமல் வாயாலும் பேனாவாலும் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும்!”

திருமிகு. பழ. கருப்பையா, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்

சிறப்புக் குழந்தைகளுக்குப் பள்ளி - கல்லூரிகளில் 5%  இடஒதுக்கீடும், வேலை வாய்ப்புகளில் 4%-மும் அரசு அளித்து வருகிறது. அந்தக் குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பெற்றோர், சிறப்பு ஆசிரியர்கள் தேவையான திறன் பயிற்சியும், வழிநடத்துதலும் அளிக்க வேண்டும். சிறப்புக் குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை முன்னதாகவே கண்டுபிடித்துப் பயிற்சி அளிக்கவேண்டும்.”

திருமிகு. எஸ். மதுமதி, செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு