news-details
சிறப்புக்கட்டுரை
Ai உலகில் மக்களாட்சி (உலகம் உன் கையில்! – 20)

ஒரு கணிப்பு என்னவென்றால், 2030-க்குள், ஏறக்குறைய 75% மக்கள், சீனாவில் தயாரித்து உலகெங்கிலும் வினியோகிக்கப்பட்டு வரும் .. கண்காணிப்பு அமைப்புக்கு (Surveillance) அடிமைகளாகிவிடுவர் என்பது. இக்கருவி உலகின் ஒவ்வொரு குடிமகனின் அனைத்து அசைவுகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் திறன் பெற்றது. இதற்குடிஜிட்டல் சர்வாதிகாரம்  (Digital Authoritarianism)  என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, தொழில்நுட்பம் என்பது அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இது ஒன்றை மேம்படுத்தவும் அல்லது பலவீனப்படுத்தவும் கூடிய திறனையும் கொண்ட தொழில்நுட்பம், மக்களாட்சி முறைக்கு எவ்வாறு ஏற்புடையதாய் இருக்கிறதென்பதைச் சற்று ஆராய்வோம்.

ஆட்சியும் - அதிகாரக் குவியலும்

அனைத்து மக்களும் வெளிப்படையாகச் செய்திகளைப் பெறுவதும் பகிர்வதுமே மக்களாட்சி முறைக்கு அடித்தளமாக அமைகிறது. சமூக ஊடகங்கள் தவறான செய்திகளைப் பெரிய அளவில் (Mass) அவிழ்த்து விடுவதென்பது இதன் அடித்தளத்தை அசைக்குமென்பதும், நம்பத்தகுந்த செய்திகளை மக்கள் எளிதில் பெற இயலாமையும் மக்களாட்சி முறைக்கு ஆபத்தாக அமையும் என்கிறார் ஓர் ஆய்வாளார்.

சுதந்திரமும் நியாயமான (Free and Fair) தேர்தல்களை நடத்துவதாகக் காணப்பட்டாலும் வாக்காளர்கள் அரசு இயந்திரங்களுடன் போட்டியிட இயலாமலாகிவிடுவது நடைமுறை. ஆட்சி முறையில், அரசு இயந்திரங்கள் மூலம் கண்காணிப்பு நடைமுறையிலிருக்கும் நிலையில், தனிமனித உரிமை, சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரம் என்பவைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் நடு நிலை வகிக்க இயலுமா? என்கிற அச்சமும் உள்ளது.

சமூக ஊடகங்களும் - அரசியலும்

இன்று உலகளவில் வெகுசிலரே தொழில்நுட்பத்தை வழிநடத்துகின்றனரென்ற நிலை கேட்பதற்கு வியப்பாக இருக்கலாம். கூகுள், முகநூல், அமேசான் மற்றும் சில தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று வியப்பூட்டும்-மேட்டுக்குடியினருக்கான பரப்புரை (elite-propaganda) மற்றும் ஏற்க இயலாத செய்திகள் மூலம் கலாச்சாரத்தைச் சுற்றி வளைத்துக் குடியாட்சிமுறை தளர்விற்குப் பங்களிப்பதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ..யின்போலியின் போலி காணொளிகள்  (Deep Fake-videos) மேலும் வலுசேர்த்து நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன.

யூடியூப்மற்றும்டுவிட்டர்போன்ற வலையமைப்புகளும் தங்கள் வருவாய்த் திரட்டும் போட்டியில் சளைக்காமல் ஓடும் நிலையில், அரசியல்வாதிகள் தங்கள் விளம்பரத்திற்கும் பிரபலமாவதற்கும் பக்கபலமாக விளங்கும் இவற்றைக் குறித்துக் கண்டும் காணாமலிருப்பது, இதற்கான ஒழுங்கு வரையறைபின் வரிசையிலிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. பொதுவாக ..யும், இயந்திரச் செயலாற்றல் சார்ந்த தொழில்நுட்பக் கட்டுப்பாடும், முழுமையாக அவற்றை உருவாக்கியவர்களிடமே இருப்பதாலும், இவை முழுமையான வெளிப்படைத்தன்மை பெற்றவையென்று கூறமுடியாது. தொழில்நுட்ப வளங்களை உடையவர்கள் மக்களை வசப்படுத்தும் திறனையும் பெறுகிறார்கள் என்பது இயல்பு. முன்பு ஒருநாள், குடியாட்சி முறைக்குத் தூண்களென்று கருதப்பட்ட ஒருசில நாடுகளை இன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் அசைக்கும் நிலையிலிருப்பதையும் பார்க்கிறோம்.

மக்களாட்சியும் புதிய தொழில்நுட்பங்களும்

தொழில்நுட்பம் பல தடைகளைத் தகர்த்து மக்களாட்சி அமைப்புகளையும் வழிமுறைகளையும் மேம்படுத்த உதவுகிறதென்றாலும், இவைகளின் இயல்பான வடிவமைப்புகள், அதாவது .தணிக்கை, கண்காணிப்பு போன்றவை சுதந்திர மக்களாட்சி முறைக்கு எதிர்மறையாகவே பார்க்கப்படுகின்றன. இதனால் மக்களாட்சி முறைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்கும் நிலையும் உருவாகிறது. உலகளவில் இன்று தரவுகள் எப்போதையும் விட வலிமை பெற்றிருக்கும் நிலையில், இதனைச் சேகரிப்பதில் நிலவும் உலகளவிலானஎலிப் பந்தயம் (rat race) அனைத்து உரிமைகளையும் ஒடுக்கும் கருவியாக உருவெடுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

முதலாளித்துவமும் மக்களாட்சியும்

உலகளவிலான ஆட்சியமைப்புகள் வலிமையான முதலாளித்துவம்தளர்ந்த குடியாட்சிமுறையைச் சார்ந்தே உள்ளதென்பதை இன்று தொழில்நுட்பத்தின் பின்னால் மனிதன் செல்வதிலிருந்தே அறிந்துகொள்கிறோம். ஆனால், தளர்ந்த முதலாளித்துவம் - வலிமையான குடியாட்சி என்று ஒரு வேளை உருவாகும் தொழில்நுட்பமுமே குடியாட்சிக்கு ஏற்புடையதாயிருக்கும் என்று கருதப்படுகிறது. இன்று நடைமுறையிலிருக்கும் பெரும்பாலான தொழில் அமைப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் வலிமையான முதலாளித்துவ நோக்கில் உருவாக்கி இயக்கப்பட்டு வரும் மாடலமைப்பைச் சார்ந்தும், தொடர்ந்து வளர்ச்சியடைந்தும் வருகின்றன. இது மேலும் விரிவடைதல் எவ்விதத்தில் மக்களாட்சிக்கு ஏற்ப அமையும்? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

தனிமனிதச் சுதந்திரமும் மக்களாட்சியும்

இன்று உலகம் தொழில்நுட்ப முதலாளித்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஒருநாள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள்மீது மட்டுமன்றி, திரளான வாடிக்கையாளர் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், எல்லையில்லாக் கண்காணிப்பு என்பது இயல்பாகிவிடும். எனவே, தொழில்நுட்ப அடையாளப்படுத்துதல், கண்காணிப்பு அதிகரிப்பு என்பவை சமுதாயத்தில் தனிமனிதச் சுதந்திரத்திற்கான இடத்தைக் சுருக்கிவிடுவதாகப் பார்க்கப்படுகிறது.

நாம் இணையதளத்தையோ அல்லது கணினி தன்னியக்கத் தொழில்நுட்பத்தையோ அல்லது ..யோ குறைகூற முடியாது; ஆனால், இத்தொழில்நுட்பங்களைத் தங்கள் சுயநலத்திற்குச் சாதகமாக அமைத்துக்கொள்பவர்களே சமத்துவ மற்றும் சம மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாய் இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறார் ஓர் ஆய்வாளர்.