news-details
வத்திக்கான் செய்திகள்
“ஒன்றிணைந்த திரு அவையைக் காண கிறிஸ்து அழைக்கிறார்”

திருத்தந்தை லியோ தனது மொனாக்கோ பயணத்தில் அங்குள்ள கத்தோலிக்கச் சமூகத்தினரைச் சந்தித்து உரையாற்றினார். தூய கன்னி மரியாவின் அமல உற்பவப் பேராலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின்போது கிறிஸ்துவைநம் பரிந்துரையாளர்என்று குறிப்பிட்டார். இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் திரு அவை அதிகாரிகளை வாழ்த்திப் பேசிய திருத்தந்தை, “கடவுளின் இரக்கம் பலவீனமான மனிதகுலத்தை மீட்டெடுக்கிறது. திரு அவை  இறைவனின் அன்பைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அங்குச் சமூகக் கட்டமைப்புகளால் பிரிவினைகள் ஏற்படக்கூடாது. கிறிஸ்துவுடனான உறவே வாழ்விற்கு நிலையான தன்மையை அளிக்கிறது; இறைவனின் அன்பே அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. ஏமாற்றும் நம்பிக்கை என்பது திடீரென உருவாவதல்ல; அது இறைவனுடனான ஆழமான உறவின் கனிஎன்று விளக்கினார் திருத்தந்தை.