news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா... அமைச்சர்களும் பா... முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வார்களா? தமிழ் மண்ணில் நின்று மும்மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்குத் தருவது எவ்வளவு? பா... ஆளும் மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? என வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள்மீது தாக்குதல் தொடுக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா? கண்ணியமற்ற அவதூறுகளுக்குப் பதிலாக, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்? தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியிலிருந்து படையெடுத்து வந்தாலும் தமிழ்நாடு தலைகுனியாது.”

மாண்புமிகு மு. . ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

புதுச்சேரி மண்ணை நேசிக்கிறேன்; மக்களுடைய அன்பு, நட்பு, தோழமை இவற்றையெல்லாம் நினைத்து அடிக்கடி இங்கு வர ஆசைப்படுகிறேன். ஆனால், இப்போது இங்கு வரும்போது என் மனத்தில் கவலைகள் படர்கின்றன. புதுச்சேரியை ஆட்சி செய்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்லர்; எங்கோ இருந்து புதுச்சேரியை ஆட்சி செய்கின்றனர். இங்கு நடக்கும் ஆட்சி மக்களின் விருப்பத்தைச் செயல்படுத்தும் அரசு அல்ல; டெல்லியிலிருந்து கருத்துகளைத் திணிப்பவர்களின் கீழ் செயல்படும் அரசாக உள்ளது. பா... கருத்தியலை புதுச்சேரியில் புகுத்த நினைக்கின்றனர். புதுச்சேரி மக்களின் எண்ணங்களை ஏற்று நடத்தும் ஆட்சி இங்கு நடக்கவில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைமீறி துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். எனவேதான், மாநில அங்கீகாரம் வேண்டும் என்று கூறுகிறோம்.” 

திருமிகு. இராகுல் காந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

பெற்றோரைப் புறக்கணிக்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்தில் 15 விழுக்காடு அல்லது ரூபாய் பத்தாயிரம் (இரண்டில் எது குறைவோ) பிடித்தம் செய்து பெற்றோருக்கு வழங்க வகை செய்யும் மசோதா தெலுங்கானா சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 29 - ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை. பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைச் சமுதாயம் புறக்கணிக்கும் சூழல் ஏற்பட வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த நியமன அதிகாரி அமைப்பு மாநில அரசால் அமைக்கப்படும். பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுபவர்கள் இந்த அமைப்பிடம் புகார் அளிக்கலாம். அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள் மட்டுமின்றி, எம்.எல்.., எம்.எல்.சி., மாநகராட்சி உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.”    

மாண்புமிகு ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர்