news-details
உலக செய்திகள்
“ஈரான் மக்கள் மீதான அச்சுறுத்தல் ஏற்க முடியாது” - திருத்தந்தை லியோ

ஈரான் மீதான போர் மற்றும் ஒட்டுமொத்த ஈரான் நகரத்தையே அழிப்போம்என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குத் திருத்தந்தை லியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸ்டல் காண்டால்ஃபோவில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை, “ஈரான் மக்கள் மீதான அச்சுறுத்தல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்று சாடியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா விதித்த காலக்கெடுவும், அதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட போர் மிரட்டல்களும் பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். “மீண்டும் பேச்சுவார்த்தை அமர்வுக்குத் திரும்புங்கள்; அமைதியான முறையில் தீர்வுகளைத் தேடுங்கள்என்று உலகத் தலைவர்களுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடி வெறுப்பை மட்டுமே வளர்ப்பதாக அவர் எச்சரித்தார்.