அழியும் நிலையற்ற செல்வத்தை இயேசுவின் அன்பிற்காக விட்டு விட்டு, அழியா ஆன்மாவை உரிமையாக்கிக் கொண்ட அன்னை எலிஸ்வாவிற்கு என் சாட்சியம்.
என்
பெயர் சகோதரி அருள் கலா. நான் விமலா மறைமாநிலத்தில் உள்ள ஒரு CTC சகோதரி. தூய
தெரேசாவின் கார்மல் சபையினால் ஈர்க்கப்பட்டு 1994-இல் பாதம் பதித்தேன். 1997-இல் முதல் வார்த்தைப்பாடு. 2004-இல் இறுதி வார்த்தைப்பாடு.
2011-இல் தொண்டை
வலி ஆரம்பமாகி, 2013-இல் புற்றுநோய் என்று உறுதியானது, அப்போது எனக்கு வயது 35. 2014-இல்
அதற்கான மருத்துவச் சிகிச்சைகளும் முடிந்தன.
வலியின்
காரணமாக மெதுவாகச் சாப்பிடும் வேளையில் உணர்வற்ற நிலை. மருத்துவமனையில் முதலில் வெண்டிலேட்டர் (Ventilator); பிறகு
டிரக்கியோஸ்டமி (Tracheostomy) செய்யப்பட்டன.
சில மணி நேரத்திற்குப்
பின் இது மருத்துவமனை என்று புரிந்துகொண்டேன்.
நான்
மருத்துவரிடம், ‘எப்படிக் காப்பாற்றினீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘கடவுள் காப்பாற்றினார், ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது’ என்று
கூறினார். அந்த நாள்களில் அன்னை எலிஸ்வாவின் அமைதியும் தியாகமும் என் இதயத்தை ஊடுருவத் தொடங்கியது. 2015-இல் எதுவுமே சாப்பிட முடியாததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். என் கண்களிலிருந்து கண்ணீரைத் தவிர வேறு எதுவும் வரவில்லை.
ஐந்து
நாள்களுக்குப் பின் அறுவை சிகிச்சை செய்த இடம் மீண்டும் திறக்கப்பட்டு (Open) உணர்வற்ற நிலை ஏற்பட்டது. மரணம் (Death), கோமா
(Coma), அல்லது
பக்கவாதம் (Paralyzed) என
எது வேண்டுமானாலும் நேரலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், இரண்டு மணி நேரத்திற்குப் பின் கண் அசைந்தது. மருத்துவர்கள் மகிழ்ச்சியுற்று ‘இது ஓர் அதிசயம்’
(Miracle) என்று
சொன்னார்கள். ‘நீங்கள் கடவுளின் பிள்ளை’ என்றும் கூறினார்கள்.
அன்னை
எலிஸ்வா அமைதியிலும் செபத்திலும் தியாகத்திலும் வாழ்ந்ததை நினைக்கிறேன். எனது மௌன மொழி நான் அன்பு செய்யும் கடவுளுக்கு மட்டுமே புரியும். அன்னை எலிஸ்வா பிறர் நலனுக்காக வாழ்ந்தார்கள். உணவின்றி வறுமையினால் வாடும் ஒருவரின் பசியை அகற்ற வேண்டித் தினமும் இயேசுவிடம் நான் வேண்டுவேன்; இப்பொழுதும் வேண்டுகிறேன். சாட்சிய வாழ்வு வெறும் வார்த்தையினால் அல்லாமல், வாழ்க்கையினால் அமையவேண்டும். இயேசுவின் மீதுள்ள அன்பால் எமது அன்னை எலிஸ்வாவின் பரிந்துரையால் 2026-ஆம் ஆண்டில் கால்பதித்து பயணம் செய்கிறேன்.
இயேசுவுக்கு நன்றி!
அன்னை எலிஸ்வா
புகழ்
ஓங்குக!