news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

உலக அளவில் ஏற்பட்டுள்ள புவி அரசியல் சவால்களில் துணிச்சலான நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு, .நா. தற்போது செயல்படவில்லை. அதற்கு நிகராகப் பிற விவாதங்களும் நடவடிக்கைகளும் வேறு சிலரால் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் உலக நாடுகளிடம் அமைதி, பாதுகாப்பிற்கு ஏற்ற அமைப்பாக .நா.வை உலக மக்கள் கருதவில்லை. உலகளாவியச் சட்டத் திட்டங்களை அனைவரும் மதித்து நடக்கவேண்டும். இதில் எந்த நாடும் இரட்டை வேடம் போடக்கூடாது. அதே நேரம் உலகளாவியச் சட்டத் திட்டங்கள் என்பது ஒரு நாட்டின் இறையாண்மையைத் தாக்குவதற்கோ உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவதற்கோ அனுமதிக்கக்கூடாது.”

உயர்திரு. பர்வதனேனி ஹரிஷ், இந்தியாவின் நிரந்தரத் தூதர்

உயர்கல்வி நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளில் யார்மீதும் பாகுபாடு காட்டக்கூடாது. அதேபோல் பாகுபாடு என்ற பெயரில் இந்த விதிமுறைகளை யாரும் தவறாகப் பயன்படுத்தவும் அனுமதிக்கக்கூடாது. மத்திய-மாநில அரசுகள் மற்றும் யு.ஜி.சி. ஆகியவற்றிற்கு இதில் பொறுப்புள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டே அமையும். பாகுபாடு குறித்த புகார்களை விசாரிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு குழு அமைக்கப்படவேண்டும். இதில் .பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். கல்வி நிறுவன வளாகத்திற்குள் எவ்விதப் பாகுபாடு நடவாமல் இருப்பதைக் கண்காணிக்கக் குழு உருவாக்கப்படும்.” 

உயர்திரு. தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர்

ஒவ்வோர் இந்தியரின் மிகப்பெரிய ஆயுதமாக, நமது அரசமைப்புச் சட்டம் உள்ளது. அந்தச் சட்டம் நமது குரலாக, நமது உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக உள்ளது. இந்த வலுவான அடித்தளத்தின் மீதுதான் நமது குடியரசு நிற்கிறது. சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தால் மட்டுமே இந்த அடித்தளம் வலுவாகும். நமது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது இந்தியக் குடியரசைப் பாதுகாப்பதாகும். அதுவே நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அளிக்கப்படும் உண்மையான மரியாதையாகும்.”

உயர்திரு. இராகுல்காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்