‘படியும் நொடியும்’ என்று கேட்டவுடன் பலர் பயந்து நிற்கிறார்கள். ‘படி’ என்றால் ஒரு பயணம்; ‘நொடி’ என்றால் ஒரு முடிவு. ஆனால், வாழ்க்கைப் படியிலிருந்து நொடிக்கு முடிவதற்காகப் பிறக்கவில்லை; அது நொடியிலிருந்து படியாக உயர்வதற்காகப் பிறக்கிறது.
ஒரு
மனிதனின் வாழ்க்கை முழுவதும் பெரிய நிகழ்வுகளால் மாறுவதில்லை; அது ஒரு சிறிய நொடியால்தான் திசை மாறுகிறது. ஒரு முடிவு, ஒரு முயற்சி, ஓர் ‘இல்லை’ என்று கூறிய கஷ்டமான தருணம். ஓர் ‘ஆம்’ என்று கூறிய துணிச்சல். இந்த ஒரு நொடிதான் அடுத்தப் படியை உருவாக்குகிறது.
டாக்டர்
ஏ.பி.ஜே. அப்துல்
கலாம் கூறினார்: “பெரிய கனவு காணும் மனிதர்களின் கனவுகள் எப்போதும் எல்லைகளைத் தாண்டி நிறைவேறும்” என்று.
இந்தக் கனவுகள் ஒரே நாளில் நிறைவேறவில்லை. ஒரு நொடியிலான முயற்சிகளால் படிப்படியாக உயர்ந்தன. படிகள் எப்போதும் கண்ணில் தெரியும்; ஆனால், அந்தப் படிகளை ஏறச்செய்யும் நொடிகள் அரிதாகவே கவனிக்கப்படுகின்றன.
ஒரு
மாணவனின் வெற்றி, ஒரு நொடி புத்தகத்தைத் திறந்த அந்தத் தருணத்தில் தொடங்குகிறது. ஒரு தொழிலாளியின் உயர்வு, ஒரு நொடி சோர்வைத் தள்ளிவைத்து வேலையைத் தொடர்ந்த அந்தக் கணத்தில் தொடங்குகிறது. ஒரு குடும்பத்தின் மீட்பு, ஒரு நொடி மௌனமாக இருந்து கோபத்தை வென்ற அந்த நேரத்தில் தொடங்குகிறது.
திருவிவிலியம்
மிக எளிமையாகக் கூறுகிறது: “மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்”
(லூக் 16:10). சிறியது ஒரு நொடி. பெரியது ஒரு வாழ்க்கை. இன்றைய உலகம் பெரிய வெற்றிகளைப் பெரிய மேடைகளில் காட்டுகிறது. ஆனால், அந்த வெற்றியின் அடித்தளம் பலருக்குத் தெரியாத அமைதியான நொடிகளில் போடப்படுகிறது.
புனித
அன்னை தெரேசா ஒருமுறை இவ்வாறு கூறினார்: “சிறிய விஷயங்களில் நம்பிக்கையுடன் இருப்பதே ஒரு பெரிய விஷயம்.”
இந்த
உலகிற்கு அதிகமாகத் தேவையானது ஒரே நாளில் உயர்ந்துபோன மனிதர்கள் அல்லர்; ஒவ்வொரு நாளும் ஒரு நொடி உழைத்த மனிதர்கள்! படியும் நொடியும் எதிரிகள் அல்ல; இவை ஒரே பயணத்தின் இரண்டு முகங்கள்.
நொடி
முயற்சி...
படி
விளைவு!
நொடி
தீர்மானம்...
படி
திசை!
இனி
வரும் நாள்கள் நம்மிடம் பெரிய படிகளைக் கேட்கவில்லை. ஒரு நல்ல நொடியைக் கேட்கின்றன. இன்று சோர்விலும் ஒரு முயற்சி, பயத்திலும் ஒரு துணிச்சல், அவசரத்திலும் ஒரு நேர்மை. அந்த ஒரு நொடிதான் நாளை ஒரு படியாக மாறும். வாழ்க்கை நொடியில் முடிவதற்காக அல்ல; நொடிகளால் உயர்வதற்காக!
படிகள்
ஒருநாள் பின்னால் திரும்பிப் பார்க்கும்போது தெரியும். ஆனால், அந்தப் படிகளை உருவாக்கிய நொடிகள்தான் நம்மை உண்மையான மனிதர்களாக்கும்.
‘ஒரு நொடியின் நேர்மை
ஒரு
வாழ்க்கையின்
உயர்வாக
மாறும்!’