தூய லூக்கா நற்செய்தியில் வரும் எலிசபெத்து மரியாவை வாழ்த்துகின்ற நிகழ்வானது, மரியாவின் நம்பிக்கையானது, இயேசுவினுடைய மலைப்பொழிவின்படி வாழும் அனைவருக்கு மானதொரு மாதிரியாக இருப்பதைக் காட்டுகின்றது.
1. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கின்ற நற்செய்தியின் விவரிப்பில் எலிசபெத்து ‘ஆவியானவரால் நிரப்பப்பட்டு’ மரியாவை
வரவேற்று, “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்
1:45) என்று வாழ்த்தினார். முதன் முதலாக லூக்கா நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வாழ்த்துரையானது, மரியாவை அவரின் நம்பிக்கையினால் இயேசுவினுடைய மலைப்பொழிவை நிறைவேற்றுவதில் திரு அவைக்கு முன்மாதிரியானவராகக் காட்டுகின்றது.
மரியாவின் நம்பிக்கையைப்
பற்றி எலிசபெத்து புகழ்ந்து பேசுவது, இறைத்தூதரின் அறிவிப்பை சக்கரியாவுக்கான இறைத்தூதரின் அறிவிப்புடன் ஒப்பிடுவதன் வழியாக வலுப்படுத்தப்படுகிறது. மரியா மற்றும் சக்கரியா இருவருக்குமான அறிவிப்பை
மேலோட்டமாக வாசிக்கின்றபொழுது, இருவரும் அந்த இறைச்செய்திக்கு ஒத்த பதில்களைக் கொடுத்ததாகக் கருதக்கூடும். “இது நடைபெறும் என எனக்கு எப்படித்
தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” (லூக்
1:18) என்று சக்கரியாவும், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (லூக் 1:34) என்று மரியாவும் கேட்கின்றார்கள். ஆனால், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வருகின்ற முக்கியக் கதாபாத்திரங்களான சக்கரியா மற்றும் மரியாவின் உள்மனப்பான்மைக்கு இடையேயான ஆழமானதொரு வேறுபாட்டை இறைத்தூதரின் வார்த்தைகளிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம். அதாவது, சக்கரியாவின் அவநம்பிக்கைக்காக இறைத்தூதர் அவரைக் கடிந்துகொள்கின்றார். ஆனால், மரியாவின் கேள்விக்கு
அவர் உடினடியாகப் பதில் அளிக்கின்றார். எலிசபெத்தின் கணவரைப் போலல்லாமல், மரியா இறைத்திட்டத்திற்கு முழுமையாக அடிபணிகின்றார். மேலும், கண்ணுக்குத் தெரிகிற அடையாளத்தைக் (visible sign) கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையின்றி
தனது சம்மதத்தை அளிக்கின்றார்.
மரியா
ஒரு தாயாக வேண்டும் என்று முன்மொழிந்த இறைத்தூதரிடம், தான் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்ற தனது எண்ணத்தை மரியா நினைவுபடுத்துகின்றார். இறைத்தூதரின் அறிவிப்பானது நிறைவேறும் என்று அவர் முழுமையாக நம்பினார். அதற்கு அவர் முழு தயார் நிலையுடன் தன்னைக் கையளிக்க விரும்பினார். எனவே, இறைவனின் விருப்பத்தைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்காக, அத்தூதரிடம் அது நிகழப்போகும் விதம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்புகின்றார். இதை புனித அகுஸ்தினார், “அவர், அது நிகழப்போகும் அந்த வழியைத்தான் தேடினார்; கடவுளின் பேராற்றலை அவர் சந்தேகிக்கவில்லை” (Sermo 291) என்று விளக்குகின்றார்.
செவிசாய்த்தல்
மற்றும்
தூய
நம்பிக்கை
இவை
இரண்டும்
மரியாவுக்குத் தேவைப்பட்டன
2. இந்த
இரண்டு அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட சூழலானது மரியாவினுடைய நம்பிக்கையின் சிறப்பை உயர்த்த உதவுகிறது. தூய லூக்காவின் நற்செய்தியில், சக்கரியாவுக்கான மிகவும் சாதகமான சூழ்நிலையையும், அவர் அளித்த பதிலின் போதாமையையும் காண்கின்றோம். எருசலேம் ஆலயத்தில் ‘திருத்தூயகத்திற்கு’ முன்
(விப 30:6-8) பலிபீடத்தில் இறைத்தூதரின் அறிவிப்பை சக்கரியா பெறுகிறார். அவர் தூபம் போடுகையில் இறைத்தூதர் அவரிடம் அறிவிக்கின்றார். அதாவது, குரு என்ற முறையில் அதற்கான தனது கடமையைச் செய்கின்ற அவருடைய வாழ்வின் முக்கியமானதொரு தருணத்தில் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, இறைவனின் முடிவானது ஒரு காட்சி வழியாக அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க இச்சூழ்நிலைகள் அவருக்கு வழங்கப்பட்ட செய்தியின் தெய்வீக நம்பகத்தன்மையை நாம் எளிதில் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன. மேலும், அச்செய்தியை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கான ஊக்கத்தையும் நமக்கு அளிக்கின்றன.
எவ்வாறாயினும்,
மரியாவுக்கான அறிவிப்பானது சக்கரியாவிடம் வெளியிடப்பட்ட புனிதத்தன்மையின் வெளிப்புறக்கூறுகள் எதுவுமே இல்லாமல் எளிமையானதொரு வேலைநேரச் சூழலில் நடைபெறுகிறது. தூய லூக்கா நற்செய்தியாளர் இறைமகனுடைய பிறப்பின் அறிவிப்பானது இந்த இடத்தில்தான் நடந்தது
என்று எந்தவொரு குறிப்பிட்ட இடத்தையும் சுட்டிக்காட்டவில்லை: மரியா சிறிதளவே முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான நாசரேத்தில் இருந்ததாக மட்டுமே அவர் குறிப்பிடுகின்றார். இது இந்நிகழ்வுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், இறைத்தூதர் தோன்றுகின்ற அந்த நேரத்திற்கு, வழக்கத்திற்கு மாறான எந்தவொரு முக்கியத்துவத்தையும் நற்செய்தியாளர் குறிப்பிடவில்லை; எந்தவொரு வரலாற்றுச் சூழ்நிலையையும் அவர்
விவரிக்கவும் இல்லை. இறைத்தூதரைச் சந்திப்பதில், அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில் ஒருவரின் கவனம் முழுவதும் செலுத்தப்படுகிறது. எனவே, மரியாவுக்கு முனைப்புடன் கேட்டல் மற்றும் தூய்மையான நம்பிக்கை தேவைப்படுகிறது.
ஒன்றை
நம்புவதற்காக எளிதில் கண்டுணரக் கூடிய அடையாளங்களைத் தொடர்ந்து கேட்கும் வழக்கம் இன்றும் நம்மிடம் உள்ள மனநிலையோடு ஒப்பிடுகையில், இந்தக் கடைசிக் கருத்தானது நம்மை மரியாவினுடைய நம்பிக்கையின்
மகத்துவத்தைப் பாராட்டச் செய்கிறது.
3. சக்கரியாவுக்கு
அறிவிக்கப்பட்டதைவிட மிகவும் உயர்ந்ததோர் உண்மைக்கு அவரின் ஒப்புதலைத் தருமாறு மரியா கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.
மலட்டுத் திருமண சேர்க்கையினுள் (within sterile marital union)
வளமையானதொன்றாக ஆக்க கடவுள் விரும்பியதனால் நடக்கும் ஓர் அதிசயமான பிறப்பை நம்ப சக்கரியா அழைக்கப்பட்டார். அதாவது, பழைய ஏற்பாட்டுப் பெண்கள் பலர் பயன்பெற்றதைப் போன்றதொரு தெய்வீக இடையீடு: சாராள் (தொநூ 17:15-21, 18:10-14), ராக்கேல் (தொநூ 30:22), சாம்சனுடைய தாய் (நீப 13:1-7) மற்றும் சாமுவேலின் தாயான அன்னா (1சாமு 1:11-20). இந்நிகழ்வுகள் அனைத்திலும் குறிப்பாக, கடவுளின்
கொடைக்கான நன்றியுணர்வானது வலியுறுத்தப்படுகிறது.
மரியா
பழைய ஏற்பாட்டில் எந்தவொரு முன்னுதாரணமும் குறிப்பிடப்படாத ஒன்றான கன்னித் தாய்மையை (virginal motherhood) நம்ப அழைக்கப்படுகின்றார். உண்மையில், நன்கு அறியப்பட்ட இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கான, “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று
பெயரிடுவார்” (7:14) என்கிற
பார்வையைத் தவிர்க்கவில்லை என்றாலும், இந்த அர்த்தத்தில் வெளிப்படையாக விளக்கமளிக்கப்பட்டது கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகும், நற்செய்தி வெளிப்பாட்டின் வெளிச்சத்திலும் மட்டுமேயாகும்.
இவ்வாறு,
இதற்குமுன் வெளிப்படுத்தப்படாத ஓர் உண்மையை ஒப்புக்கொள்ளும்படி மரியா கேட்கப்படுகிறார். மரியாவும் அதை எளிமையான இன்னும் தைரியமான இதயத்தோடு ஏற்றுக்கொள்கின்றார். “இது எவ்வாறு நிகழும்?” என்ற கேள்வியுடன் கன்னித்தன்மையைத் தனது விதிவிலக்கான மற்றும் தனித்துவமான தாய்மையுடன் ஒத்துப்போகச் செய்வதற்கான இறைச்சக்தியின் மீதான அவரின் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்துகின்றார்.
“தூய ஆவி உம்மீது வரும்; உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்; ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்”
என்று பதிலளிப்பதன் வழியாக மரியா
கேட்ட கேள்விக்கு இறைத்தூதர் கடவுளின் சொல்லுதற்கரிய தீர்வை அளிக்கின்றார். அதுவரை ஒரு தடையாக இருந்த கன்னித்தன்மையானது மனுவுருவான கடவுள் பற்றிய கருத்தாக்கம் தூய ஆவியானவர் அவரில் நிறைவேற்றும் உறுதியானதொரு சூழலாக மாறுகிறது. இவ்வாறு, இறைத்தூதரின் பதிலானது இயேசுவைப் பெற்றெடுப்பதில் தூய ஆவியானவருடன் கன்னி மரியா ஒத்துழைப்பதற்கான வழியைத் திறக்கிறது.
4. இறைத்திட்டத்தை
நிறைவேற்றுவதில் மனிதனின் சுதந்திரமான ஒத்துழைப்பானது உணரப்படுகின்றது. இறைவனின் வார்த்தையை நம்பியதன் வழியாகத் தனக்கு அறிவிக்கப்பட்ட தாய்மையை நிறைவேற்றுவதில் மரியா ஒத்துழைக்கின்றார்.
மரியாவின் நம்பிக்கைச்
செயலானது
ஆபிரகாமின்
நம்பிக்கையை
நினைவுபடுத்துகின்றது
திரு
அவைத் தந்தையர் பெரும்பாலும் இயேசுவின் கன்னி கருத்தரிப்பின் (virginal conception) இந்தத் தன்மையை வலியுறுத்துகிறார்கள். இயேசுவின் பிறப்பு அறிவித்தல் பற்றிய நற்செய்தி விளக்கத்தில் புனித அகுஸ்தினார் சிறப்பாக இவ்வாறு கூறுகின்றார்: “இறைத்தூதர் அறிவிக்கின்றார், கன்னி மரியா அதைக் கேட்கின்றார், நம்புகின்றார் மற்றும் கருத்தரிக்கின்றார்” (Sermo 13 In Nat. Dom.). மீண்டுமாக, “கிறிஸ்து நம்பப்படுகிறார் மற்றும் நம்பிக்கையின் வழியாகக் கருத்தரிக்கப்படுகிறார். இவ்வாறு, நம்பிக்கையின் வருகை
முதலில் கன்னி மரியாவின் இதயத்தில்
நிகழ்கிறது, பின்னர் அந்த நம்பிக்கையின் பலன் தாயின் வயிற்றில் உருவாகிறது” (Sermo 293) என்று கூறுகின்றார்.
பழைய
உடன்படிக்கையின் தொடக்கத்தில், கடவுளை நம்பியதால் ஒரு பெரிய சந்ததியினரின் தந்தையாகிய ஆபிரகாமின் நம்பிக்கையை மரியாவின் நம்பிக்கை
நினைவுபடுத்துகின்றது
(ஒப்பிடுக. தொநூ 15:6: மீட்பரின் தாய், எண்.14). புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில் மனுவுருவாதலின்
மறைபொருளை நிறைவேற்றுவது, இயேசுவின் முழுமையான மீட்புப்பணியின் தொடக்கம் மற்றும் அனைத்திலும் மரியா தனது நம்பிக்கையுடன் தீர்க்கமானதொரு செல்வாக்கைச் செலுத்தினார்.
இயேசுவின்
பொதுவாழ்வில் வலியுறுத்தப்பட்ட நம்பிக்கைக்கும் மீட்பிற்கும் இடையிலான நெருங்கிய உறவானது (ஒப்பிடுக. மத் 5:34, 10:52), மரியாவின் நம்பிக்கை
செயல்படுத்திய மற்றும் மனுக்குல மீட்பில் தொடர்ந்து செயல்படும் அடிப்படைப் பங்கை நாம் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
மூலம்:
John Paul II, Mary freely co-operated in God’s plan, in
Osservatore Romano Weekly Edition in English, 10 July 1996, p. 11.