news-details
வத்திக்கான் செய்திகள்
வெனிசுலா பதற்றம்: வன்முறையைத் தவிர்க்க திருத்தந்தை லியோ வேண்டுகோள்!

வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், அங்கு அமைதி நிலவ வேண்டுமெனத் திருத்தந்தை லியோ உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். வெனிசுலாவில் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தின்படி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, “மக்களின் நலனே அனைத்தையும் விட முக்கியமானது; வன்முறையைத் தவிர்த்து, அமைதி மற்றும் ஒத்திசைவான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்என்று கேட்டுக்கொண்டுள்ளார்.