‘தந்தை பெயரால் மைந்தனின் பெயரினால்
தழைக்கும் தூய ஆவியின் பெயரினால்
வந்த
பேர்க்கு ஞான ஸ்நானமும்
வாழு கின்ற நல்வழிக் கோலமும்
தந்து
நீங்கள் போதனை செய்குவீர்
தழுவி எந்தன் மொழிகளைச் சொல்லுவீர்!
எந்த நாளும் யானுமே உம்முடன்
ஏகு
வீர்’ எனக்
கூறினார் நாதனே!’
(இயேசு காவியம்)
என்ற
இயேசுவின் இறுதி கட்டளையான “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்
16:15) என்னும் இறைவாக்கை ஒரு மறைப்பணியாளனாக வாழ்ந்து, இன்று அதையே தன் ஆயர் பணிவாழ்வின் மறைவாக்காகக் கொண்டு, பணிசெய்யப் புறப்படும் அருள்பணியாளர் சூசை ஜேசு OMI அவர்களை
‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாக அன்போடு வாழ்த்துகிறேன்.
பிறர்
நலம் பேணுவதே ஒரு மனித வாழ்வின் ஆகச்சிறந்த அறம். இந்த உயரியத் தத்துவத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்வது ‘மறைப்பணி’
ஆர்வமும் (Missionary Spirit), அதில்
முழுமையாக ஈடுபடுவதுமாகும். எல்லைகளைக் கடந்த அன்பும் அர்ப்பணிப்பும் முழு ஈடுபாடும் தன்னலமற்ற வாழ்வும், கைம்மாறு கருதாத பணியுமே ஒரு மறைப்பணியாளரின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
மறைப்பணி
என்பது வெறும் மதம் சார்ந்த போதனை மட்டுமல்ல; அது ஒடுக்கப்பட்டோரின் கண்ணீரைத் துடைப்பதும், வறுமையில் வாடுவோருக்கு வாழ்வாதாரம் வழங்குவதும், கல்வி எட்டாத இடங்களுக்கு அறிவொளியைக் கொண்டு செல்வதுமாகும். ஒரு மறைப்பணியாளர் தனக்கான வசதியான வாழ்வைத் துறந்து, அறிமுகமில்லாத மனிதர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கிறார். அவர்கள் காட்டும் இந்தத் துணிச்சல் மிகுந்த அன்புதான், உலகெங்கும் உள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; இன்றும் ஏற்படுத்தி வருகிறது.
நவீன
உலகில் சுயநலம் மேலோங்கி நிற்கும் சூழலில், எளியவர்களின் குரலாக ஒலிக்கும் மறைப்பணி ஆன்மா பாராட்டுக்குரியது. மதம், இனம், மொழி என்ற எல்லைகளைத் தாண்டி, மனிதநேயத்தைப் பகிரும் ஒவ்வொரு மறைப்பணியாளரும் இவ்வுலகில் அமைதியின் தூதுவர்களே! அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தியாகமும் வரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.
அத்தகைய
வழியில், இந்திய மண்ணிலும் இன்று கனடா நாட்டிலும் விளிம்பு நிலை மக்களுடன், பூர்வக்குடிகளுடன், முகவரி இழந்தவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு மாபெரும் மறைப்பணியாளர்தான் புதிய பேராயர் சூசை ஜேசு அவர்கள். தான் பணிசெய்த மக்களோடு மக்களாக உறவாடினார்; அவர்களின் கலாச்சார விழுமியங்களை உள் வாங்கினார்; அம்மக்களின் மொழிகளிலே உரையாடினார்; அவர்களில் ஒருவராக வாழ்ந்து வந்தார். இறைவன் அம்மக்களின் முகவரியை இன்று உலகறியச் செய்துள்ளார்.
இந்திய
மண்ணில், தமிழ்நாடு திரு அவையில், சிவகங்கை மறைத்தளத்தில் விதை கண்ட இளந்தளிர், கனடா மண்ணில் செழித்தோங்குவது நம் மண்ணுக்குப் பெருமை, இம்மறைக்குப் பெருமை; அதுவே மறைத்தூதுப்பணிக்கு மகிமை! பேராயரின் பணிசிறக்க ‘நம் வாழ்வு’ வாழ்த்தி மகிழ்கிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்