புனித தெரேசியன் கார்மல் சபையின் நிறுவுநர் அன்னை எலிஸ்வா அவர்களின் அருளாளர் பட்ட நிகழ்விற்காக, CTC சபையின் தலைமை அன்னை மதர் ஷஹிலா CTC அவர்களுடன் ‘நம் வாழ்வு’கண்ட நேர்காணல்:
•
தலைமை அன்னை அவர்களே! தங்களுடைய
சபையின்
நிறுவுநர்
அன்னை
எலிஸ்வா
அவர்கள்
அருளாளராக
உயர்த்தப்பட்ட
நிகழ்வு
பெரும்
மகிழ்வுக்குரியது.
இந்தச்
சிறப்புத்
தருணத்திலே
‘நம்
வாழ்வு’ வாசகர்கள் சார்பாக,
ஆசிரியர்
குழு
சார்பாக
உங்களுக்கு
மனமார்ந்த
வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களுடைய
சபையைப்
பற்றி,
அருளாளர்
அன்னை
எலிஸ்வா
அவர்களைப்
பற்றி,
அவருடைய
கனவைப்
பற்றி
ஒருசில
கருத்துகளைப்
பகிர்ந்துகொள்ளுங்களேன்?
“அருளாளர் அன்னை எலிஸ்வா கேரளத் திரு அவை வரலாற்றில் தூய ஆவியால் வழிநடத்தப்பட்ட ஓர் அரிய ஆன்மிகத் தாய். மனித ஆதரவுகளோ, திட்டமிட்ட எதிர்கால வரைபடங்களோ இல்லாமல் முழுமையாக இறைவனின் சித்தத்திற்குத் தன்னை ஒப்படைத்த ஒரு பெண்தான் இவர். விதவையான இவரது வாழ்க்கையில், வேதனையிலும் தனிமையிலும் இவர் கண்ட கனவுகளும் பெற்ற அழைப்புகளும் இன்று எங்களுடைய கார்மல் சபை CTC என்ற பெரும் ஆன்மிக இயக்கமாக மலர்ந்துள்ளது.
அன்னை
எலிஸ்வாவின் வாழ்க்கையின் மையம் தூய ஆவியானவரின் வழிநடத்துதல். 14 வருடங்கள் எந்த மனிதத் தூண்டுதலோ, உதவியோ இல்லாமல் தூய ஆவியானவரின் தூண்டுதலால் கடவுளோடு மட்டும் உறவாடியவர்தான் இந்த விதவைப் பெண். இவர் தொடங்கிய ‘TOCD’இன்று
CTC சபை, கார்மேல் ஆன்மிகத்தின் ஆழத்திலிருந்து பிறந்தது. அன்னை எலிஸ்வா கண்ட கனவு ஒரு குறுகிய கால இலக்காக இல்லை; அது எதிர்காலத் தலைமுறைகளை நோக்கிய கனவு ‘இறைவன் மட்டுமே என் வழிகாட்டி’
என்ற உறுதியான நம்பிக்கை. இவர் கண்ட கனவுகள் இன்று ஒரு வாழும் உண்மையாக மாறி, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டு மாற்றி வருகிறது.”
•
அன்னை அருளாளர் எலிஸ்வா அவர்களுடைய கனவை நனவாக்கும்
வண்ணம்
இந்நாளில்
அருள்சகோதரிகள்
தங்கள்
சபையில்
மேற்கொள்ளும்
பணிகளை,
அந்தக்
கனவு
நனவாகிய
தருணங்களை,
இன்னும்
இறையாட்சிப்
பணியில்
ஈடுபாடு
கொண்டிருப்பதைப்
பற்றி
சற்று
விளக்கமாகக்
கூறுங்களேன்?
“எங்கள் சகோதரிகள் பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
கல்விப் பணியில்:
குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்குத் தரமான கல்வி வழங்கி, அறிவின் ஒளியைப் பரப்புகின்றனர்.
சமூக சேவையில்:
ஏழைகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அன்பின் கரங்களாக நிற்கிறார்கள். நோயாளிகளுக்குக் கருணையுடனும் மனிதநேயத்துடனும் சேவை செய்து, கிறிஸ்துவின் குணமளிக்கும் அன்பை வெளிப்படுத்துகின்றனர். செபம், வழிகாட்டல், ஆன்மிக ஆலோசனை மூலம் மக்களை இறைவனுடன் நெருங்கச் செய்கிறார்கள். மத, சமூக வேறுபாடுகளைத் தாண்டி, சகோதரத்துவமும் சமாதானமும் நிலவச் செய்கிறார்கள்.”
•
அண்மையிலே நாம் மாபெரும்
யூபிலி
2025 நிறைவு
செய்திருக்கின்றோம்.
நம்பிக்கையின்
திருப்பயணிகளாக
ஒன்று
கூடியிருக்கின்றோம்.
இப்போது
நாம்
ஒருங்கிணைந்த
திரு
அவையாகப்
பயணிக்கக்
கூட்டொருங்கியக்கத்
திரு
அவையாக
இணைந்து
பணியாற்றவேண்டும்
என்ற
முழக்கத்தை
முன்னெடுத்திருக்கின்றோம்.
இவ்வேளையில்,
தங்கள்
சபையோடு
பொதுநிலையினர்
இணைந்து
ஈடுபடக்கூடிய
சிறப்புத்
தருணங்களைப்
பற்றிச்
சற்றுத்
தெளிவாகக்
கூறுங்களேன்?
“இந்த யூபிலி ஆண்டு 2025 நிறைவு காலத்தில் நாம் அனைவரும் நம்பிக்கையின் யாத்திரையாக ஒன்றிணைந்துள்ளோம். இது வெறும் ஒரு விழா அல்ல; மாறாக, கடவுள் தமது மக்களை எவ்வாறு ஒன்றாக நடக்க அழைக்கிறார் என்பதைச் சிந்தித்து, அதை வாழ்வாக்கும் ஓர் ஆன்மிகப்
பயணம் ஆகும். எங்கள் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சமூகப் பணிகள் அனைத்தும் கூட்டொருங்கியக்க நிலையில் செயல்படுகின்றன. ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவரும் பங்கேற்பாளர்களாக, கருத்து பகிர்வு, ஆலோசனை, பொறுப்பு பகிர்வு, மதம், மொழி, கலாச்சாரம் கடந்த ஒற்றுமையுடன் பணியாற்றுகின்றனர்.
இன்றைய
உலகிற்கு எங்கள் துறவற வாழ்வு வழங்கும் முக்கியமான சாட்சி: கேட்பதன் கலாச்சாரம், உரையாடலின் ஆன்மிகம், ஒற்றுமையில் வேறுபாட்டை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு! பலவீனர்களுடன் துணை நிற்கும் மனம் கொண்டு எங்கள் சகோதரிகள் பணியாற்றுகின்றனர்.”
•
‘அறுவடை மிகுதியாக இருக்கிறது,
வேலையாள்களோ
குறைவாக
இருக்கிறார்கள்’ என்னும் இறைவாக்கிற்கேற்ப
இறையழைத்தலை
நீங்கள்
எப்படிப்
பார்க்கிறீர்கள்?
இறைஅழைத்தலைத்
தூண்டுவதற்காக
அல்லது
அவர்களை
உருவாக்குவதற்காக
நாம்
என்ன
முயற்சிகளை
முன்னெடுக்கலாம்
என்று
நீங்கள்
நினைக்கிறீர்கள்?
“துறவற அழைப்பு என்பது மனிதன் தேர்ந்தெடுக்கும் ஒரு தொழில் அல்ல; கடவுள் தனிப்பட்ட முறையில் வழங்கும் ஓர் அழைப்பு; ஓர் அருள். அது ஒருவரின் திறமைகளையும் அறிவையும்விட கடவுளின் விருப்பத்திற்கான திறந்த மனம், சேவைக்கான மனநிலையே முக்கியம்.
அன்னை
எலிஸ்வா, தன் மகள் அன்னாவின் வாழ்வில் துறவற அழைப்பை வளர்த்த விதம், இன்று நமக்கு ஒரு வலுவான முன்மாதிரி. அவர் கட்டாயப்படுத்தவில்லை; கடவுளின் அழைப்பை அன்னா தாமே உணர இடம் கொடுத்தார். செபத்தின் சூழலை உருவாக்கினார். அமைதி, இறைநம்பிக்கை, தியாகம் நிறைந்த குடும்பச் சூழல் போன்றவற்றை வார்த்தைகளால் அல்ல, வாழ்க்கையால் கற்றுக்கொடுத்தார்.
துன்பத்தில்
பொறுமை, துறவற வாழ்க்கையில் நம்பிக்கை, கடவுள்மீது முழு நம்பிக்கை. தாயாக இருந்தாலும், ‘கடவுளின் விருப்பமே முதன்மை’ என்ற மனப்பாங்கை அன்னாவுக்குள் விதைத்தார். இதனால் அன்னாவின் துறவற அழைப்பு சுதந்திரமான அர்ப்பணிப்பாக வளர்ந்தது.”
•
தங்களுடைய சபையின் பாதுகாவலரான
புனித
குழந்தை
இயேசுவின்
தெரசாள்
வழங்கிய
எளிய
வழி
என்னும்
ஆன்மிகமே
இவர்களின்
வழிநடத்துதல்
ஆகும்.
பரந்து
விரிந்த
கலாச்சாரச்
சீர்கேடுகளில்
சிக்கிக்
கொண்டிருக்கின்ற
இளையோருக்கு
எவ்வளவு
அவசியமாக
இருக்கிறது
என்பதைப்
பற்றிக்
கூறுங்களேன்?
“சிறு வழி இன்றைய காலத்திற்கான ஆன்மிக மருந்து. ‘Little Flower’ என்பது சிதறும் கலாச்சாரத்தில் ‘சிறு வழி’ தரும் சிகிச்சை, உடைந்த உறவுகளுக்கான சிகிச்சை. இந்தக் காலத்திற்குத் தேவைப்படுவது உண்மையான அன்பு, நம்பிக்கையுள்ள இதயம், உள்ளார்ந்த நம்பிக்கை... இவையெல்லாம் தருவது ‘சிறு வழி’ ஆன்மிகம். இன்றைய உலகிற்கான கார்மேல் செய்தி, எங்கள் கார்மேல் ஆன்மிகத்தில் Little Flower கூறும்
செய்தி: இந்த உடைந்த உலகைச் சிறிய அன்பு மீட்கும் என்பதாகும். இன்றைய இளையோருக்கும், சிதறும் கலாச்சாரத்திற்கும், மனஅழுத்தம் நிறைந்த மனிதகுலத்திற்கும் ‘சிறு வழி’
- ஒரு
புதிய நம்பிக்கையின் பாதை.”
•
அருளாளராக உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய
அன்னை
எலிஸ்வா
அவர்கள்
விரைவிலேயே
புனிதர்
நிலைக்கும்
உயர்த்தப்படவேண்டும்
என்று
எங்களுடைய
செபங்களை
உரித்தாக்குகிறோம்.
அவருடைய
புனித
நிலைக்கான
ஆயத்தப்
பணிகள்
பற்றி
கொஞ்சம்
விளக்கமாகக்
கூறுங்களேன்?
“புனிதர் பட்டத்திற்கான அடுத்த நிலை அறிவிக்கப்படுவதற்கு அருளாளர் அன்னை எலிஸ்வாவின் பரிந்துரையால் நிகழும் ஓர் உறுதியான புதுமை தேவை. இந்தப் புதுமை மருத்துவ ரீதியாக விளக்க முடியாத, முழுமையான மற்றும் நிரந்தரக் குணமடைதலாக இருக்கவேண்டும்.
அன்னை எலிஸ்வாவை நோக்கிச் செபித்ததால் மட்டுமே இது நிகழ்ந்தது என்று நிரூபிக்கப்படவேண்டும். தீவிர செபமே புனிதர் நிலைக்கான முதல் படி. சபையின் முக்கியப் பங்கு அன்னை எலிஸ்வாவின் வாழும் சாட்சியாக இருக்கவேண்டும் எங்கள் வாழ்க்கை, பணி, சமூக உறவுகள் அவரின் ஆன்மிகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். அன்னை எலிஸ்வாவைப் பேசுவது மட்டுமல்ல; அவரைப் போல வாழ்வதே மிகப்பெரிய தயாரிப்பு. ‘புனித அன்னை எலிஸ்வா’ என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் நாளை நம்பிக்கையுடன் எதிர் நோக்குவோம். வாழ்த்தப்பட்ட அன்னை எலிஸ்வாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.”
•
குழந்தை இயேசுவின் தெரேசாவுடைய
ஆன்மிகத்தில்
பயணிக்கும்
தங்கள்
சபையைப்
பற்றியும்,
அருளாளர்
நிலைக்கு
உயர்த்தப்பட்ட
அன்னை
எலிஸ்வா
அவருடைய
வாழ்வைப்
பற்றியும்,
இந்த
இதழை
வாசித்துப்
பெற்றிருக்கக்கூடிய
‘நம்
வாழ்வு’ வாசகர்களுக்குத் தாங்கள்
கூற
விரும்பும்
செய்தி
என்ன?
“அன்பும் மதிப்பும் கொண்ட ‘நம் வாழ்வு’ வாசகர்களே, இந்த இதழின் பக்கங்களை நீங்கள் புரட்டும்போது, ‘சிறு வழி’ அருளாளர் அன்னை எலிஸ்வாவின் வாழ்க்கை, சேவை, ஆன்மிகம் என்ற மூன்று ஒளிமயமான வாழ்வுச் சாட்சிகளை நீங்கள் சந்திப்பீர்கள். இவை வெறும் வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; இன்றைய மனிதனுக்கான வாழ அழைப்பு. குழந்தை
தெரேசா நமக்குக் கூறுவது ஒன்றே: ‘பெரிய காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும், பெரிய அன்புடன் சிறியதைச் செய்.’ துன்பத்திலும் கடவுளை நம்பும் துணிவு, அமைதியில் பிறக்கும் சேவை, விதவையாக இருந்தபோதும் அர்ப்பணிப்பின் உயரம், தியானத்தில் ஊன்றிய செயல் இவற்றை அன்னை வாழ்ந்து காட்டினார். இந்த இதழை வாசித்த பிறகு, நாம் நம்மிடம் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: ‘நான் என் அன்றாட வாழ்க்கையில் சிறு வழியை எப்படி வாழ்கிறேன்? என் குடும்பம், பணி, சமூகத்தில் அன்னை எலிஸ்வாவின் ஆன்மிகத்தை எப்படி வெளிப்படுத்துகிறேன்?’
அன்பார்ந்த
வாசகர்களே, சிறிய
அன்பை நடைமுறையில் மாற்றுவோம். அமைதியில் இருந்து சேவைக்கு நகர்வோம். வார்த்தைகளைவிட வாழ்க்கையால் சாட்சி அளிப்போம். அப்பொழுது ஒவ்வொரு குடும்பமும் ஒரு சிறு கார்மேலாக, ஒவ்வோர் இதயமும் கடவுளின் வாசஸ்தலமாக மாறும். புனிதம் என்பது சிலருக்கான உயரம் அல்ல; அன்புடன் வாழ விரும்பும் அனைவருக்கான பாதை. அருளாளர் அன்னை எலிஸ்வா, நம்மை வழி நடத்தட்டும்.”