news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (22.03.2026)

உண்மையின் ஊற்றாக நம்மில் எழும் நற்செய்தியின் வார்த்தை, ஒவ்வொருவரின் கண்களைத் திறக்கவும், அறிவார்ந்த விதத்தில் மதிப்பிடவும்,  சுதந்திரமான மற்றும் பக்குவப்பட்ட மனசாட்சியை உருவாக்கவும் உதவுகிறது.”

மார்ச் 8, உரோம் காணிக்கை அன்னை திருத்தலத் திருப்பலி மறையுரை

இராணுவச் சேவை என்பது இறையருளில் ஊன்றிய ஓர் அழைப்பு. வலுகுறைந்தவர்களைப் பாதுகாக்கவும், அமைதியைப் பேணவும், அனைத்துலக அமைதி காக்கும் முயற்சிகளில் பணியாற்றுவதுமே இந்தச் சேவையின் நோக்கம்.” 

மார்ச் 7, இத்தாலிய இராணுவப் பேராயரகத்தின் நூற்றாண்டு விழாச் செய்தி

நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை நியாயமான, நேர்மையான மற்றும் பொறுப்பான உரையாடல் மூலம் மட்டுமே அடைய முடியும், அழிவையும் துன்பத்தையும் கொண்டுவரும் ஆயுதங்கள் மூலம் அல்ல.”

மார்ச் 3,  காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செய்தி

இறையியல் என்பது வல்லுநர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; மாறாக, திரு அவையின் பணிக்கும், நம்பிக்கையில் வேரூன்றிய கலாச்சார, சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் அடிப்படையானது.”

மார்ச் 02,  இறையியல் நிறுவன குழுமத்தினருக்கு வழங்கிய உரை

மனிதகுலத்தையும் வாழ்க்கையையும் சிதைக்கும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு, நாம் தொடர்ந்து நற்செய்தி அறிவிப்பின் சான்றுகளாக இருப்போம். அதுவே மாற்றத்தைத் தருகிறது.”

மார்ச் 01,  குவார்த்திஜோலோ பங்குத்தள மறையுரை