news-details
தமிழக செய்திகள்
திண்டிவனத்தில் விவிலியப் பட்டயப் படிப்பு

தமிழ்நாடு திருவிவிலிய அருள்பணிக்குழு சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடைக்கால விவிலியப் பட்டயப் படிப்பு வரும் மே மாதம் நடைபெற உள்ளது. திண்டிவனம் தமிழக முப்பணி மையத்தில் (TNBCLC) மே 6 முதல் மே 10 வரை இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். “அவர் பெருக வேண்டும் (யோவான் 3:30) என்ற இறைவார்த்தையைத் தாரக மந்திரமாகக் கொண்டு நடைபெறும் இக்கல்வியாண்டில் (Cycle-A), பழைய ஏற்பாட்டின் ஐந்நூல்கள் மற்றும் வரலாற்று நூல்கள் குறித்த ஆழமான பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன. தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன், அருள்முனைவர் ரெய்மண்ட் ஜோசப் மற்றும் முப்பணி மையப் பேராசிரியர்கள் இப்பயிற்சியை வழங்குகின்றனர். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்கு விவிலியப் பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் தங்குமிடம், உணவு மற்றும் பாடக்குறிப்புகள் உள்ளிட்டவற்றிற்கான கட்டணமாக ரூபாய் 3000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுநிலையினர், துறவியர் மற்றும் அருள்பணியாளர்கள் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: 9751891725 /  tnbcbc1974@gmail.com