news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (14.12.2025)

இரண்டாம் வத்திக்கான் சங்கம் வலியுறுத்தியபடி, இறைவார்த்தையை அனைவருக்கும் நாம் கொண்டுசெல்லவேண்டும்.”

நவ. 17, கத்தோலிக்கத் திருவிவிலியக் கூட்டமைப்பினருடன் சந்திப்பு

கிறித்தவ ஆன்மிகம் மனிதனைப் புதுப்பித்து, பூமியைப் பாதுகாக்கும் மாற்றத்திற்கான பொதுவான அழைப்பாகும்.”

நவ. 19, புதன் மறைக்கல்வி உரை

திரு அவையின் புதுப்பித்தல், பொதுப் பங்கேற்பு, பொறுப்புணர்வு, பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு மற்றும் சமூக ஈடுபாட்டில் நாம் இன்னும் முனைப்புடன் செயலாற்றவேண்டும்.”

நவ. 20, இத்தாலிய ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வு உரை

ஒன்றிப்பு, நீதி, பரிவு மற்றும் தூய ஆவியின் வழிகாட்டுதலுடன் பணியைத் தொடர்வோம்.”

நவ. 21, அனைத்துலக காரித்தாஸ் அமைப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு

திருமணத்தில் உண்மை, நீதி, இரக்கம் மூன்றையும் ஒருங்கிணைத்து, ஆன்மாக்களின் மீட்பு மற்றும் குடும்ப ஒன்றிப்பைப் பேணவேண்டும்.”

நவ. 22, திருமண செல்லா நிலை குறித்த சீர்திருத்த 10-வது ஆண்டு நிறைவு

நிசேயா நம்பிக்கையின் இறையியல், ஒன்றிப்பு, மனுவுரு எடுத்தல் மற்றும் செயல்முறை நம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கிறித்தவ ஒன்றிப்பில் இணைவோம்.”

நவ. 23, முதல் நிசேயா திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவு, நம்பிக்கையின் ஒன்றிப்பில்திருத்தூது மடல் வெளியீடு