news-details
வத்திக்கான் செய்திகள்
‘வணக்கத்திற்குரியவராக’ அறிவிக்கப்பட்ட இந்திய ஆயர்!

கொலம்பிய அருள்சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ் குவெஸ், இந்திய ஆயர் மேத்யூ மாகில், ஸ்பெயின் ஆயர் அலெக்ஸாண்ட்ரோ இலபாகா உகார்த்தே ஆகிய இறை ஊழியர்களைவணக்கத்துக்குரியவர்நிலைக்கு உயர்த்தும் ஆணைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார் திருத்தந்தை லியோ. ஆயர் மேத்யூ மாகில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் மஞ்சூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். 1896-இல் சங்கனாச்சேரியின் திருத்தந்தையின் பதிலாளாக நியமிக்கப்பட்டவர். இவர் அன்னை மரியா வினவுதல் சபையின்  நிறுவுநர். அலெக்ஸாண்ட்ரோ இலபாகா உகார்த்தே, அருள்சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ்குவெஸ் ஆகிய இருவரும் பூர்வக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்போது ஈக்குவதோர் மலைக்காடுகளில் நிகழ்ந்தவன் முறையில் மறைச்சாட்சிகளாகத் தங்கள் இன்னுயிரைக் கையளித்தவர்கள்.