news-details
கவிதை
தீண்டல்

மலர்கள் மலர்ந்துகொண்டே

இருக்கின்றன!

மௌனமாய், அழகாய்

மலர்ந்துகொண்டே

இருக்கின்றன

அக்கினிப் பிழம்புச் சொற்கள்

அவற்றின் உரமாயின.

தீ நாக்கு மலர்களைச்

சுடுவதில்லை.

அம்மலர்களின் துயரம்

அவை பெற்ற

வடுக்கள் குறித்து அல்ல;

மலர்களை முத்தமிட்டுச் செல்லும்

வண்ணத்துப் பூச்சிகளுடன்

கைகோர்த்து

உயரப் பறக்க விடாமல்

தடுக்கும் வேர்கள் குறித்துதான்.

ஆனால் வேர்களினின்றி மலர்களில்லையே!

அம்மலர்கள் மௌனமாய்,

அழகாய் மலர்ந்துகொண்டே இருக்கின்றன

வண்ணத்துப்பூச்சியின்

அடுத்த தீண்டலை எதிர்பார்த்து!