இன்று நாம் சில சமயங்களில் கணினி சார்ந்த அலுவலக அல்லது வணிகச் சந்தேகங்களுக்கு அல்லது சரியில்லாத விவரங்களுக்கு விளக்கம் தேவைப்படின், நமக்குக் கிடைக்கும் ஒரு பதில் கணினி (computer). அப்படியிருக்க, நாம் காலெடுத்து வைத்திருக்கும் ஏ.ஐ. யுகத்தில், தொழில்நுட்ப அல்லது தயாரிப்புக் கோளாறுகளினாலோ (manufacturer defects) அல்லது தவற்றினாலோ (Negligence) ஏற்படும் விபத்துகள், நட்டங்கள், சேதங்கள், தொழில் இழப்புகளுக்கு யார் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்பது? என்பது தெளிவாக்கப்படாமல் இருக்கிறது. இதற்கான காப்பீடு (insurance) அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU GDPR) செயல்பட்டாலும் முழு அளவில் இல்லை என்று கருதப்படுகிறது.
நீதித்துறையில்
‘அல்கோரித தொழில்நுட்பம்’ அணுகுமுறையில்
பாரபட்சமின்மையுடையதாகக்
கருதப்படுவதும், மனித
நீதி அரசரைவிட (Human judge)
இயந்திரம் திறனாகக் கருதப்படுவதும் அதில் நம்பிக்கை வைப்பதைக் காட்டுகிறது. இந்தப் போக்கு ஒருநாள் ரோபோக்கள் இவ்விதச் செயலாற்றலைப் பெற்று (Intelligence) சமுதாயத்தில்
பல துறைகளில் நடமாடுமோ என்ற எண்ணமும் எழுகிறது. சிவில் - குற்றவியல் வழக்குகளில் உள்நோக்குடன் குற்றமிழைத்தல் (Civil and criminal cases -intentional and culpability are the
criteria) என்பது
அளவுகோலாக உள்ளதென்பதை அறிவோம். ஏ.ஐ. கணினியைப்
பொருத்தவரை, இயந்திரமென்பதால் உள்நோக்கம் (intent) என்பதை நிரூபிக்க இயலாமலிருக்கிறது. இதை நிரூபிக்க வேண்டுமென்றால், தவறான நோக்கத்தினால் தயாரித்து உபயோகத்திற்குக் கொண்டு வந்தவர் (Human individual)
பின்செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. இவைகளை ஒழுங்குபடுத்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. ஆனால், இவை செயல்முறைக்கு வராமலிருப்பதற்குத் தொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் அரசமைப்புகளுக்கும் போட்டியில் முண்டியடித்துச் செல்லும் நிறுவனங்களுக்கும் இடையே சொல்லப்படாத உடன்பாடு இருப்பதைப் போன்று தோன்றுகிறது. இது ஒருபுறமிருக்க, இதனால் ஏற்படும் சிக்கல்களுக்கும் இழப்புகளுக்கும் சரியான தீர்வில்லாமை, நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்நிலையில்,
உலகம் ஏ.ஐ. கணினியின்
பின் செல்லும் வேகம், வரும் நாள்களில் ஒரு கட்டத்தில் மனித அறிவாற்றலும் (human intelligence), செயற்கை அறிவாற்றலும் (artificial intelligence) ஒன்றுசேரும் நேரம் நெருங்கிவிட்டதா? என்ற மற்றொரு கேள்வியும் நம்முன் நிற்கிறது. பெரும்பாலான உலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் டிஜிட்டல் சகாப்தத்திற்கு முன்பு எழுதினதும், பிரகடனப்படுத்தப்பட்டவைகளாகும்
(Before the age of digitalisation).
இப்போது
உலகில் டிஜிட்டல் ஊடகங்கள், சிலரால் தேவைக்கென்றும் சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கும் வழியிலும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு டிஜிட்டல் காலத்திற்கு (pre Digital age) முன்பு இயற்றப்பட்ட மனித உரிமைச் சட்டங்கள் எவ்வகையில் டிஜிட்டல் காலத்திற்கு ஏற்றதாயிருக்குமென்ற கேள்வி எழுகிறது. இயந்திர வாழ்க்கைக்கு எதைச் செய்வது? எதை உண்பது? என்று நம்மை மெதுவாக நகர்த்திச்செல்வது ஒரு வேளை நமக்கு வசதியாக அமையலாம். அதே நேரத்தில் அல்கோரிதம் சார்ந்த இத்தொழில்நுட்பம், மனிதராகிய நாம் உணவைச் சாப்பிடும்போது தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்து அதிலே நம்மை மறந்துவிடும் நிலை, இயந்திரம் நம்மை வழிநடத்துவது, மனித கண்ணியத்திற்கு (human dignity) கேள்வியாகவும் அமைகிறதல்லவா?
சில
பணிகளில் இயந்திர (Algorithm) வழிமுறைகள்
மனிதரிடையே பாகுபாட்டை (bias) உண்டு
பண்ணுவதையும் நிறுவனங்களும், அரசும் தனி மனித சுதந்திரம், இரகசியம் (Privacy) என்பவைகளை
டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் பறிப்பதையும், அரசு சில குற்றங்களைக் கண்டுபிடிப்பதில்
(Investigation) இயந்திரங்கள்
பின் செல்வதும், சிக்கலான சூழலில் அந்த இயந்திரங்களை உருவாக்கிய நிறுவனங்கள் ஒத்துழைக்காமலிருப்பதும், போர்க்களங்களில் தானியங்கிப் போராயுதங்கள் தன்னிச்சையாகச் (Autonomous) செயல்படுவதும்
மனித உரிமை மீறல்களுக்குச் சான்றாக இருப்பது மட்டுமன்றி, இவைகளுக்கு விடை காணாத நாள்களில் வாழ்கிறோம்.
ஏ.ஐ. இயந்திரங்களை அறிவாற்றலடையச்
(Intelligence) செய்து,
அந்த அறிவாற்றல் சூழலுக்கேற்ப எதிர்நோக்குடன் செயலாற்றச் செய்வதாகும். ஏ.ஐ. மனித
அறிவாற்றலை மிஞ்சுவதென்பதை எப்படிப் புரிந்துகொள்வது? ஒருவேளை, இது திரைப்படம் போன்று அல்லது அறிவியல் கற்பனை (Science fiction) அலைகளாகக்
கூட தோன்றலாம். இன்று இவ்வெண்ணத்தைக் கருத்தாழமாக (Serious) எடுத்துக்கொள்வதா?
அல்லது மாயை என்று தள்ளிவிடுவதா? (Dismiss these ideas as fantasy).
உலகளாவிய
இப்புதிய தொழில்நுட்பத்தில் பெருமளவிலான வணிக மதிப்பீட்டைப் பெற்றுப் பங்குதாரராயிருக்கும் அரசுகளையும் அல்லது பெரும் நிறுவனங்களையும் இப்போது கட்டுப்படுத்த முடியுமா? ஒருவேளை சமீபத்திலோ அல்லது பின்வரும் நாள்களிலோ இத்தொழில்நுட்பத்தின் வருங்காலச் சந்ததி மனித இனத்தை மீண்டு வரமுடியாத அழிவிற்கு அழைத்துச் செல்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா?
தொழில்நுட்பம்
தலைமுறைகளாக மனித வாழ்க்கைக்கு வளத்தைப் பெருக்கியது மட்டுமல்லாமல், ஒரு தொடர்ச்சியாகவும் இருந்து வருகிறது. இதன் பின்னிருந்து இயக்கும் நிறுவுநர்களும் (Entrepreneurs) உலகின்
முன்னேற்றத்திற்குக் காரணமாயிருந்தனர். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பிற்கும் காரணமாயிருப்பவர், நாளடைவில் தன் கண்டுபிடிப்பு எத்திசையில் செல்கிறதென்றும், அது செல்லும் பாதையைக் கட்டுப்படுத்த அவர் இயலாதவராகி விடுகிறார் என்பதும் வரலாறு. தொழில்நுட்பமும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பல உதாரணங்களில் ஒன்று:
எரி எண்ணெய் மோட்டார் வாகனங்களைக் கண்டுபிடித்தவர், ஒருநாள் உலக வெப்பமயமாத லுக்கு அவை முக்கியக் காரணமாகிவிடும் என்று சற்றும் நினைக்கவில்லை; அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சென்ற நூற்றாண்டின் அணு ஆயுதப் பிரயோகம், இரண்டாம் உலகப் போருக்குப் பின் தணிந்துவிட்டது என்ற எண்ணம் இன்றுவரை உலகளவில் வெளித்தோற்றத்தைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எப்போது என்பதை விட, எந்த நேரத்தில் என்ற பயம் எல்லார் மனத்திலும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
இதுவரை
சரித்திரம் கண்டிராத வேகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
சென்றுகொண்டிருக்கிறது.
இன்று நடைமுறைக்கு வந்திருக்கும் ரோபோ, அதன் வருங்காலத் தொழில்நுட்ப வளர்ச்சி, அதேபோன்று குவாண்டம் கணினியின் (Quantum computer)
முதிர்ந்த நிலை, அதன் பயன்பாடு என்பவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கப் போகிறதென்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
ஏ.ஐ. என்ற தொழில்நுட்பம்
இந்த நூற்றாண்டில் மனித இனத்திற்குத் துணையாய்ப் பயணிக்கப் போகிறதா? இல்லை மனித அறிவாற்றலை மிஞ்சியதாய், ஒருவேளை மனித ஆற்றலுக்குச் சவாலாய் அல்லது மனிதனை எதிர்த்து நிற்குமா? என்ற திகில் மனத்தில் எழாதவரை சற்று நிம்மதியாய் இருப்போம்.
மனிதனின்
பயணம் பல பேரழிவுகளைச் சந்தித்து
வருகிறதென்பது வரலாறு.
போலித்
தீர்க்கதரிசிகளும் (False prophets), அழிவை
முன்மொழிபவரின் (Doomsayer) கணிப்பும்
பொய்யாகிப் போனது ஒருபுறமிருக்க, இப்போது நாம் எதிர்கொள்ளவிருப்பது ஏன் வேறு விதமாக இருக்கக்கூடாது என்றும் எண்ணலாம் அல்லவா!