வத்திக்கானில் ஏப்ரல் 5, 6 ஆகிய நாள்களில் நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்விற்கான யூபிலி நாள் கொண்டாடப்பட்டது. வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய பேராயர் ரீனோ பிசிகெல்லா, மருத்துவர் Lucia Celesti போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எதிர்நோக்கை வழங்குவதாகக் கூறினார். நோயாளர்களுக்காகவும் உலக நலவாழ்விற்காகவும் மருத்துவர்கள், தன்னார்வலர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் யூபிலி நிகழ்வில் பங்கேற்றனர். மோசமான சூழல்களில் கடவுளின் நம்பிக்கை மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது என மருத்துவர் Rocìo Bellido Octavio தெரிவித்தார்.