news-details
சிறப்புக்கட்டுரை
தேர்தல் 2026: மக்கள் ஆதரவு யாருக்கு?

ஒரு காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் நம் வீட்டு வரவேற்பு அறைகளில் வந்து அமர்ந்தன. இன்று அலைப்பேசி நமது கைகளில் மூன்றாவது கையாக மாறிவிட்டது. மின்னணு ஊடகங்கள் நொடிக்கு நொடி பரபரப்புச் செய்திகளை வாரித் தெளிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 2026-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்; இது அரசியலமைப்பு சார்ந்த காலகட்டாயம். தேர்தல் காலத்தில் தமிழ்நாடு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும். யார் தீர்வைத் தருவார்? என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பேண உறுதி வழங்கப்படுதல் மிக மிக அவசியம். ஆனால், இன்று இங்கு வருந்தத்தக்க விதமாய், ‘யார் அடுத்த முதல்வர்?’ என்ற இசை நாற்காலிப் போட்டி  நடக்கிறது.

1967-இல் உணவுப் பஞ்சம், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, குலக்கல்வி, உட்கட்சிப் பூசல்கள் என ஆளும் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்த காலம். பேரறிஞர் அண்ணாதுரை, இராஜாஜியின் சுதந்திரா கட்சி, .பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளோடு  வலுவான கூட்டணி அமைத்தார். 1967-இல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

58 ஆண்டுகளாகத் திராவிட இயக்கங்கள் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்கின்றன. தற்போது ஆளும் தி.மு..வும் 2019 முதல் பலமான கூட்டணியைத் தக்கவைத்து, தொடர் வெற்றிகளைக் குவிக்கிறது. எதிர்முகாமில்யார் முதல்வர்?’ என்ற ஒற்றைக் கேள்வியால் தேர்தல் களம் ஐந்து அணிகளைக் கொண்டதாய் அமைகிறது. நாளது தேதி வரை தமிழ்நாடு ஆளுங்கட்சிக்கு  எதிரான  வாக்குகள்யார் முதல்வர்?’ என்ற எதிர்க்கட்சிகளின் போட்டியால் பிரிகிறது. ஆளுங்கட்சியும் ஆட்சிக்கு எதிரான  மக்களின் மனநிலையை மாற்ற, குறைந்தபட்ச செயல்களைக் கூட செய்ய முன்வரவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

.தி.மு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசிய பின்பு கூறுகிறார், “தேர்தலுக்கு 15 மாதங்கள் இருக்கின்றன; அப்பொழுது கூட்டணி முடிவு செய்யப்படும்என்று. அமித்ஷாவோ, எடப்பாடி பழனிச்சாமி அவரது அறையிலிருந்து வெளிவந்த பின்பு தன்எக்ஸ்வலைதளப் பக்கத்தில் ‘2026-இல் தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்எனப் பிரகடனம் செய்கிறார். தமிழ்நாடு தேர்தல் களத்தைப் பொறுத்த வரை 10 விழுக்காடு சிறுபான்மை வாக்குகளே முடிவை மாற்றும் காரணி என்பதால் தன் பா... கூட்டணி குறித்து எடப்பாடியார் ஒளிவு மறைவு காட்டலாம். அது அவரது அரசியல். இரண்டாவதாக, காலத்தே சிறுபான்மையினரைச் சமாதானப்படுத்த சாக்குபோக்குகளைத் தேடலாம். மூன்றாவதாக, மூத்த தலைவர்களின் பிற கட்சி செல்லும் தன் இலையுதிர் காலத்தைக் கட்டுக்குள் வைக்கலாம் என்பதும் அவரது அரசியல் கணக்கு. தமிழ்நாடு தேர்தல்களில் வெற்றிபெற அடிப்படைக் கட்டமைப்பு உள்ள கட்சிகளால் மட்டுமே முடியும். மேலே ஒரு படி சென்று விளக்கலாம் எனில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தங்கள் கட்சியினரை வாக்குச்சாவடி முகவராக நியமிக்கும் வலிமை கொண்டிருக்க வேண்டும். ஆளும் தி.மு.. மற்றும் எதிர்க்கட்சி .தி.மு..வுக்கு மட்டுமே ஊர் தோறும் உடன் பிறப்புகளாக, இரத்தத்தின் இரத்தங்களாகத் தொண்டர் படை உள்ளன. தமிழ்நாட்டில் பிற கட்சிகள் இந்த அடிமட்ட அடிப்படை ஆட்டத்திலேயே இல்லை.

சமீப காலத்தில் நடந்த ஈரோடு கிழக்கு  சட்டமன்றத் தேர்தலில், எதிரணி வாக்குச் சாவடி முகவர்கள் பிற்பகலுக்குப் பின் பெரும்பான்மையோர்  காணப்படவில்லை என்கிறது தேர்தல் கள அறிக்கைகள்.

தமிழ்நாடு தேர்தல் புள்ளி விவரங்களில் தி.மு.. மற்றும் .தி.மு..வைத் தவிர்த்த கட்சிகள், இரட்டை இலக்க வாக்கு சதவிகிதம் கொண்டவைகளாக இல்லை. பா... கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தாமரையில் நின்ற சிறு சிறு கட்சிகளின் வாக்குகளைத் தங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு, தாங்களும் இரட்டை இலக்க வாக்கு விழுக்காடு என மார்தட்டுகிறது. எல்லாப் பலமும் உள்ள .தி.மு.. கூட பாராளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் கட்டுத்தொகை இழந்தது வரலாறு.

தமிழ்நாட்டில் சில கட்சித் தலைவர்கள் தொலைக்காட்சியில் தினம் பேட்டி கொடுக்கிறார்கள்; சிரிக்கிறார்கள்; சவால் விடுகிறார்கள்; கோபத்தில் கொப்பளிக்கிறார்கள்; காலை  ஒன்று, மாலை  ஒன்று என முரண்பாடுகளை அடுக்குகிறார்கள்; மாற்றி, மாற்றிப் பேசி  மக்களைக் குழப்புகிறார்கள்.

இவர்களில் ஒருவர் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதன் மூலமாகவே தங்கள் கட்சியை வளர்த்துவிடலாம், முதல்வராகி விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். இந்த  விளம்பர வெளிச்சம் பட்டாசாக வெடித்துச் சிதறுமே ஒழிய, வாக்குகளாக மாறாது. இன்னும் சிலரோ மின்னணு ஊடகங்கள் வழி மாயவித்தை நடத்தி, தேர்தல் வெற்றி குறித்துக்  கற்பனை கோட்டைகள் கட்டுகிறார்கள்.

ஆளுநர்  என்பவர் ஆட்சிக்கான வழிகாட்டி என்பதைக் காட்டிலும், ஒன்றிய அரசின் கொள்கை பரப்புச் செயலாளராக ஆளும் அரசிற்குக் குடைச்சல் கொடுப்பது தமிழ்நாடு அரசியலில் நடப்பு பெருங்கொடுமை!

தேர்தல் காலத்தே சாதிக்கட்சிகள் மாநாடு போடலாம். ஏதாவது ஒரு கூட்டணியில் சீட் வேண்டி துண்டு போடலாம். 2011 தேர்தலில் அரசியல் சாணக்கியர் எனப்படும் திரு. கருணாநிதி அவர்கள் சாதிக்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அமைத்து தோல்வி கண்டிருக்கிறார். தமிழ்நாடு மக்கள் சாதி வாரி ஓட்டுக்குத் தயார் இல்லை என்பதும் வெள்ளிடைமலை.

ஊடகங்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தம் சார்பு கருத்துகளைத் திணிக்கலாம். அது வெற்றி பெறும் கட்சிக்கே தனது ஓட்டு என்கிற சிறு விழுக்காட்டினரை அசைக்குமே தவிர, பெரும் மாற்றம் ஏற்படாது. நாம் மக்கள் பிரச்சினைகளை அறிந்தவர்களுக்கு அதைத் தீர்க்க முனைவோருக்கு வாக்களிப்பதே உரிய  சனநாயக  நடைமுறையாகும். தமிழ்நாடு தேர்தல் ஆணையமும்  வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை 2026-இல்  தேர்தலுக்கான தன் பங்காகச்  செய்துவிட்டது.

2026-இல் தமிழ்நாடு தேர்தல் களம், தமிழ்நாடு மக்களின் வாழ்வுரிமை குறித்துப் பேச வேண்டும். மத வாதம் முற்றிலும் அழித்தொழிக்கும் வழி, மதச் சுதந்திர  உத்தரவாதம், மாநில உரிமைகள், மறுக்கிற ஒன்றிய அரசு, உரிய நிதி பகிர்வு, கல்வி உரிமை, மொழியுரிமை, நீதியுரிமை இதை முன்னெடுக்கிற ஆட்சியாளர்களே ஆள வரவேண்டும். அதற்கான விழிப்புணர்வுகள், முனைப்புகள், நம் பங்களிப்புகள் என்பதே இடைப்பட்ட காலத்தில் நம் செயல் திட்டமாக இருக்கலாம். வாருங்கள்... நல்லாட்சி அமைப்போம்!